search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student arrested"

    • படிக்க வைத்த முதலாளி வீட்டில் துணிகரம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த மாதனூரை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் அதே பகுதியில் திருமண மண்டம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சங்கரி (வயது 53).

    பாஸ்கர் வீட்டில் அதே பகுதியை சேர்ந்த சங்கர் மனைவி பல ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். சங்கர் மகன் விஜயகாந்த் (22). இவர் குடியாத்தத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

    விஜயகாந்த் பிறந்ததில் இருந்து இப்போது கல்லூரி படிக்கும் வரை அனைத்து செலவுகளையும் பாஸ்கர் மனைவி சங்கரி ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

    இதன்காரணமாக அவர் தனது மகன் போல் பாவித்து வீட்டின் அனைத்து பகுதிக்கும் சென்று வர அனுமதியளித்துள்ளார். விஜயகாந்தின் அக்காவின் திருமணத்தையும் பாஸ்கர் மனைவி சங்கரி முன்னின்று நடத்தியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 25-ந் தேதி வெளியே சென்று வீட்டினுள் நுழைந்த பாஸ்கர் மனைவி சங்கரி அறையினுள் இருந்த பீரோ திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதிலிருந்த நகை பெட்டியில் வைத்தி ருந்த 27.5 பவுன் தங்க நகை காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

    இது குறித்து பாஸ்கர் மனைவி சங்கரி ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் விஜயகாந்த் அந்த நகைகளை திருடியது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் விஜயகாந்தை கைது செய்து, அவரிடமிருந்த நகைகளை பறிமுதல் செய்தனர்.

    • ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு மேல் நகர்மேடுவை சேர்ந்தவர் திருமலை (வயது 19). இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    திருமலை ஆன்லைன் மூலம் செல்போனை ஒன்றை ஆர்டர் செய்தார். அந்த செல்போனை சேத்துப்பட்டு பெரிய கொழப்பலூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (21).

    என்பவர் கொரியர் மூலம் திருமலை முகவரிக்கு எடுத்து வந்தார். அப்போது திருமலையை தொடர்பு கொண்டபோது தான் அங்கு இல்லை தீப்பந்தல் கூட்ரோடு அருகே வருமாறு கார்த்தியிடம் கூறினார். அந்த பார்சலை எடுத்துக் கொண்டு தீப்பந்தல் கூட்ரோட்டிற்கு சென்றார். அங்கு நின்றிருந்த திருமலையிடம் செல்போன் பார்சலை கொடுத்து பணத்தை கேட்டார்.

    அந்த செல்போனை வாங்கிக் கொண்டு பணத்தை கொடுக்காமல் திடீரென பைக்கை எடுத்துக்கொண்டு திருமலை அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.

    செய்வதறியாமல் நின்ற கார்த்தி திருமலை முகவரிக்கு சென்று பார்த்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தார். அப்போது திருமலை கொடுத்த முகவரி போலியானதும் தான் ஏமாற்றப்பட்டதும் தெரியவந்தது.

    இதுகுறித்து கார்த்திக் செய்யாறு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தலை மறைவான திருமலையை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று போலீசார் திருமலையை கைது செய்து அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

    மேலும் போலீசார் இது குறித்து திருமலையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளி மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
    • கைதான 4 மாணவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நெல்லையில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த மாதம் பள்ளி மாணவர், சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசாரும், கல்வி அதிகாரிகளும் அங்குள்ள பள்ளிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் நாங்குநேரியில் உள்ள சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் வகுப்பறை சுவரில் சாதிய வன்முறையை தூண்டும் வகையில் அவதூறு வாசகங்களை எழுதியிருந்தனர்.

    இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் நாங்குநேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மற்றும் போலீசார் பள்ளிக்கு சென்று பார்வையிட்டனர்.

    அங்கு சுவரில் எழுதப்பட்ட அவதூறு வாசகங்களை அழித்தனர். பின்னர் பள்ளி மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    இந்த விசாரணையில் 4 மாணவர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைதான 4 மாணவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நெல்லையில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர். பள்ளிக்கூட வகுப்பறை சுவரில் சாதிய வன்முறையை தூண்டும் வகையில் அவதூறு வாசகங்கள் எழுதிய 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குருபிரசாத் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர் குருபிரசாத்தை கைது செய்தனர்.

    கோவை,

    கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவர் அங்கு உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 10- ம்வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் குனியமுத்தூர் கல்லூரி மாணவர் குருபிரசாத் (வயது 19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இது நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் மாணவி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த குருபிரசாத் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

    இதனால் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே பெற்றோர்கள் விசாரித்தனர். அப்போது சிறுமி நடந்த சம்பவத்தை தெரிவித்து உள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சூலூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர் குருபிரசாத்தை கைது செய்தனர்.

    • தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாணவரை கேட்டார்.
    • சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீசில் மாணவி புகார் அளித்தார்.

    குள்ளனம்பட்டி:

    மதுரை பேரையூரை சேர்ந்த குப்பாபுலி மகன் வாசுராஜா(23). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார். அப்போது அதேகல்லூரியில் படித்த திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டியை சேர்ந்த மாணவியை காதலித்து வந்தார். அவரையே திருமணம் செய்து கொள்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்துச்சென்ற வாசுராஜா மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமானார்.

    இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாணவரை கேட்டார். ஆனால் அவர் திருமணம் செய்யாமல் ஏமாற்றியதுடன் அவருடன் பேசுவதையும் தவிர்த்துவிட்டார்.

    இதுகுறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீசில் மாணவி புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் விக்டோரியா லூர்துமேரி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் வழக்குபதிவு செய்து மாணவரை கைது செய்தனர்.

    • 8-ம் வகுப்பு மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் 6-ம் வகுப்பு மாணவி வீட்டிற்கு நண்பருடன் சென்றார்.
    • போலீசார் மாணவனை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்தனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் மகராஜ்கஞ்ச் பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் 6-ம் வகுப்பு மாணவி வீட்டிற்கு நண்பருடன் சென்றார். அங்கு மாணவியை பிடித்து அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினான். பின்னர் அந்த மாணவியின் நெற்றியில் குங்குமம் வைத்துவிட்டு ஓடிவிட்டான்.

    இதுபற்றி மாணவி போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவன் வந்த மோட்டார் சைக்கிள் மூலம் அவரை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் மகராஜ்கஞ்ச் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதாக மாணவர் பரத்தை கைது செய்தனர்.
    • பரத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், எஸ்.பி கோயில் 1-வது தெருவை சேர்ந்தவர் பரத் (19). ஆர்.கே.நகரில் உள்ள கல்லூரியில் பி. ஏ .படித்து வருகிறார்.

    இவருக்கும் பாரிமுனையில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் திருவொற்றியூர், அம்பேத்கர் நகரை சேர்ந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போன் மூலம் அடிக்கடி பேசி வந்தனர்.

    இந்த நிலையில் இரவு கல்லூரி மாணவியை வீடியோ கால் மூலம் மாணவன் பரத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் மாணவியிடம் ஆபாசமாக பேசினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக திருவொற்றியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதாக மாணவர் பரத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வீடியோவை வெளியிட்ட கோவிலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த பாலாஜிகணேசன் என்பவரை கைது செய்தனர்.
    • கைதான மாணவர் பண்ருட்டி சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் பஸ் நிலையத்தில் மாணவி ஒருவருக்கு மாணவர் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து சிதம்பரம் டவுன், அனைத்து மகளிர் நிலைய போலீசார் மாணவி, மாணவரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மாணவி சிதம்பரம் அருகே உள்ள வெங்காயதளமேடு கிராமத்தை சேர்ந்தவர் என்றும், இவர் சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தது தெரியவந்தது. மாணவிக்கு தாலி கட்டிய மாணவர் புவனகிரி அருகே உள்ள வடகறிராஜபுறத்தை சேர்ந்தவர் என்றும் இவர் கீரப்பாளையத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதன்பின்னர் மாணவி கடலூரில் உள்ள காப்பகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்ட நபர் மீது மாணவியின் பெற்றோர் சிதம்பரம் டவுன் போலீசில் புகார் செய்தனர்.

    அதன் அடிப்படையில் வீடியோவை வெளியிட்ட கோவிலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த பாலாஜிகணேசன் என்பவரை கைது செய்தனர். இவர் சமூக அவலங்களை வீடியோ எடுத்து பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதைத்தொடர்ந்து மாணவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. இவர் மீது குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். கைதான மாணவர் பண்ருட்டி சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து கடலூர் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள மாணவியிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவருக்கு சமூகநலத்துறை அதிகாரிகள் கவுன்சிலிங் வழங்கி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிதம்பரம் டவுன் போலீசார் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவ, மாணவியிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
    • மாணவனை பண்ருட்டி சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    கடலூர்:

    சிதம்பரம் பஸ் நிலையத்தில் மாணவி ஒருவருக்கு கல்லூரி மாணவர் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து சிதம்பரம் டவுன் போலீசார் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவ, மாணவியிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த மாணவி சிதம்பரம் அருகே வெங்காயதலமேடு கிராமத்தை சேர்ந்தவர் என்றும், அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது.

    தாலி கட்டிய மாணவர் சிதம்பரம் அருகே வடகரிராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் என்றும், கீரப்பாளையம் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தது தெரிய வந்தது.

    இவர்கள் 2 பேரிடமும் கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் முகுந்தன் மற்றும் ரம்யா ஆகியோர் விசாரணை நடத்தினர். அதோடு 2 பேருக்கும் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாணவி கடலூரில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மாணவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் பாலிடெக்னிக் மாணவனிடம் 2-வது நாளாக 7 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார், மாணவனை குழந்தை திருமண தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    இதனை தொடர்ந்து மாணவனை பண்ருட்டி சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பள்ளி மாணவர், ஆப்பிள் நிறுவனத்தின் பாதுகாப்பு தளத்தை ஹேக் செய்துள்ளார். இதற்கான நோக்கம் என்ன என்பதை பார்ப்போம்.
    சிட்னி:

    ‘ஆப்பிள்’ அமெரிக்காவை தலைமை இடமாக கொண்ட மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்தியா மட்டுமின்றி மற்ற நாட்டு மக்களும்  ஆப்பிள் செயல்திறனை அதிகம் விரும்பியும், பலரும் இதனை வாங்குவதை லட்சியமாகவும் கொண்டிருக்கின்றனர். 

    மேலும் இந்நிறுவனம் ஃபைனல் கட் ப்ரோ, ஐடியுன்ஸ், ஐலைஃப் போன்ற மென்பொருட்களையும் உருவாக்குகிறது.



    பாதுகாப்பிலும் மற்ற ஸ்மார்ட்போன்கள், ஆண்ட்ராய்டுகளைவிட அதிக நம்பகத்தன்மை கொண்டது. இப்படிப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் பாதுகாப்பு தளத்தினை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் ஹேக் செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

    இந்த ஹேக்கிங் சம்பவத்தில் கடந்த 2015 மற்றும் 2017ம் ஆண்டு அந்த மாணவர் ஈடுப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சமீபத்தில் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட அந்த மாணவரின் வக்கீல் கூறுகையில், ‘ஹேக் செய்து கவனத்தை ஈர்த்தால் அந்த குறிப்பிட்ட நிறுவனத்திலேயே வேலை கிடைக்கும் என நம்பியுள்ளான். மேலும் ஹேக்கிங் செய்தால் எப்படிப்பட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தெரியாமல் தவறு செய்துள்ளார்’ என வாதாடினார்.

    இதையடுத்து அந்த மாணவருக்கு ரூ.35000 அபராத தொகை செலுத்த உத்தரவிட்டு, மாணவரின் 9 மாத கால நன்னடத்தை சான்றிதழை போலீசார் வழங்குமாறும் கோர்ட் உத்தரவிட்டது.  
    வளசரவாக்கத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 மாணவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    போரூர்:

    நெற்குன்றத்தை சேர்ந்தவர் நாகநாதன் இவர் கடந்த 6-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளை வளசரவாக்கம் ஜானகி நகரில் உள்ள கடை முன்பு நிறுத்திவிட்டு காலையில் எடுக்க வந்தபோது காணவில்லை.

    அதை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் அமுதா அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்.

    அதிகாலையில் வந்த 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது பதிவாகி இருந்தது. அவர்களை பிடிக்க தீவிரமாக தேடி வந்தார். இந்த நிலையில் நேற்று ஆழ்வார்திருநகர் தனியார் வணிக வளாகம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் கெருகம்பாக்கம் லீலாவதி 3-வது குறுக்கு தெருவைச் சேர்ந்த விமல் ராஜ் அதே பகுதியைச் சேர்ந்த 18-வயதுக்கு உட்பட்ட சிறுவன் என்பது தெரிய வந்தது. விமல்ராஜ் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டும் சிறுவன் முதலாமாண்டும் படித்து வருகிறார்கள். இருவரும் நாகநாதன் பைக்கை திருடி சென்றதை ஒப்புக் கொண்டனர்.

    வளசரவாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு கடைகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் விலை உயர்ந்த சொகுசு மோட்டார் சைக்கிளை மட்டும் குறிவைத்து திருடி வந்ததும் தெரியவந்தது. உடனடியாக 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே வேளச்சேரி காவல் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு உள்ளது.

    மாணவியின் புகைப் படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ் அப்பில் வெளியிட்ட சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் சம்மந்தம் தெருவை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் வேலாயுதம் (வயது 26). இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் பி.எச்.டி.படித்து வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில் பி.எட். இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் படித்து வருகிறார்.

    மாணவர் வேலாயும் அந்த மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்துள்ளார். மேலும் அவர் அந்த புகைப்படத்தை மாணவிக்கும், தனது நண்பர்களுக்கும் வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார்.

    இதனைத்தொடர்ந்து அவர் சமூக வலைத் தளங்களிலும் அந்த படங்களை வெளியிட்டுள்ளார். அந்த ஆபாச படத்தை பார்த்து அந்த மாணவி அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அவர் இது குறித்து சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவிக்கு ஆபாச படம் அனுப்பிய மாணவர் வேலாயுதத்தை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

    மாணவியின் புகைப் படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ் அப்பில் வெளியிட்ட சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    ×