என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Retired Police Officer"

    • கடந்த 18-ந்தேதி ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
    • தலைமறைவான கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நூர்நிஷாவை தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 60). ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவர் இடப்பிரச்சினையில் கடந்த 18-ந்தேதி ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையில் தொடர்புடைய டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது சகோதரர் கார்த்திக், அவரது மைத்துனர் அக்பர் ஷா மற்றும் நோட்டமிட்டு தகவல் தெரிவித்த 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்திருந்தனர். தலைமறைவான கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நூர்நிஷாவை தேடி வருகின்றனர்.


    இந்நிலையில், நேற்று நூர்நிஷாவின் மற்றொரு சகோதரர் பீர் முகம்மதுவை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சம்பவத்தன்று அதிகாலை ஜாகீர் உசேன் பிஜிலி பள்ளிவாசலில் தொழு கையை முடித்துவிட்டு வெளியே வருவதை நோட்டமிட்டு கொலை யாளிகளுக்கு தகவல் அளிப்பதற்காக காத்திருந்த 16 வயது சிறுவனுக்கு தனது மோட்டார் சைக்கிளை வழங்கியதாக அவர் ஒப்புக்கொண்டார்.

    இதனால் கொலையில் பீர் முகமதுவுக்கு நேரடியாக தொடர்பு இல்லையென்றா லும், கொலை சம்பவம் நடக்கப்போவது தெரிந்தும் போலீசாரிடம் தகவல் தெரிவிக்காமல் இருந்ததாக கூறி போலீசார் அவரையும் இந்த வழக்கில் சேர்த்து கைது செய்துள்ளனர். இதுவரை 5 பேர் இந்த கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதனிடையே தலைமறை வாக உள்ள நூர்நிஷாவை 3 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். ஆனாலும் அந்த தேடுதல் வேட்டையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. கொலையில் தொடர்புடை யவர் பெண் என்பதால் சகஜமாக சந்தேகப்படும் வீடுகளுக்குள் சென்று தேட முடியவில்லை.

    இதனால் தனிப்படையில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் இருந்தால் தேடுதல் எளிதாகும் என்று மாநகர போலீஸ் கமிஷனரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் இன்று தனிப்படை யில் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர், ஒரு பெண் போலீஸ் சேர்ந்து, நூர்நிஷாவை தேடும் பணியில் ஈடுபட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • சரண் அடைந்த கார்த்திக், அக்பர்ஷா ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
    • மாணவனை போலீசார் கைது செய்து, அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் ஜாமியா தைக்கா தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 60). ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவர் டவுனில் உள்ள ஒரு பள்ளிவாசலில் முத்தவல்லியாக இருந்து வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற முகமது தவுபிக் என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 18-ந் தேதி அதிகாலையில் ஜாகீர் உசேன் பிஜிலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்து விட்டு வீடு திரும்பிய போது 3 பேரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி என்ற முகமது தவுபிக், அவருடைய சகோதரர் கார்த்திக், மனைவி நூர்நிஷா மற்றும் அக்பர் ஷா ஆகியோரை தேடி வந்தனர். இதில் கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். கிருஷ்ணமூர்த்தியை தனிப்படை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

    சரண் அடைந்த கார்த்திக், அக்பர்ஷா ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களுடைய உறவினரான 16 வயது சிறுவன், இந்த கொலை சம்பவத்திற்கு உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அந்த சிறுவனை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    பிளஸ்-1 படித்து வரும் அந்த சிறுவன், சம்பவத்தன்று ஜாகீர் உசேன் பிஜிலி தொழுகையை முடித்து விட்டு பள்ளிவாசலில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றதை கொலையாளிகளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மாணவனை போலீசார் நேற்று கைது செய்து, அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நூர்நிஷாவை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் ஜாகீர் உசேன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

    ஜாகீர் உசேன் கொலை வழக்கில் சரணடைந்த அக்பர்ஷாவின் சகோதரர் பீர் முகமது (37) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜாகீர் உசேனை கொலை செய்ய அக்பர்ஷாவின் சகோதரர் பீர் முகமது உதவியதாக கிடைத்த தகவலின்பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    • கிருஷ்ணமூர்த்தி, அவரது சகோதரர் கார்த்திக், மனைவி நூர்நிஷா மற்றும் அக்பர்ஷா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • மாணவனை கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி(வயது 60). ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரான இவர் டவுனில் உள்ள ஒரு பள்ளி வாசலில் முத்தவல்லியாக இருந்து வந்தார்.

    இவர் கடந்த 18-ந்தேதி அதிகாலை ரம்ஜான் நோன்பை முன்னிட்டு அருகே உள்ள ஜாமியா தைக்கா பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்தது.

    இதுகுறித்து டவுன் போலீசார் நடத்திய விசாரணையில் அவருக்கும், தொட்டிப்பாலம் தெருவில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் இடையே இருந்து வந்த இடப்பிரச்சினையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதுதொடர்பாக கிருஷ்ணமூர்த்தி, அவரது சகோதரர் கார்த்திக், மனைவி நூர்நிஷா மற்றும் அக்பர்ஷா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர் கோர்ட்டில் சரண் அடைந்த நிலையில், 2 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இன்று கோர்ட்டில் மீண்டும் அவர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த கிருஷ்ணமூர்த்தியை தனிப்படையினர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த நிலையில் அவருக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கார்த்திக், அக்பர் ஷாவிடம் நடத்திய விசாரணையில், அவர்களது உறவினரான 16 வயது சிறுவன் ஒருவன் இந்த கொலை சம்பவத்தில் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நேற்று மாலையில் சிறுவனை பிடித்து விசாரித்தனர். பிளஸ்-1 படிக்கும் அந்த சிறுவன், சம்பவத்தன்று ஜாகீர் உசேன் பிஜிலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு புறப்பட்டதை கொலையாளிகளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தது தெரியவந்தது.

    இதையடுத்து மாணவனையும் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள நூர்நிஷாவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • இன்றைய இளம் தலைமுறையினருக்கு பெற்றோர் மீதும், முன்னோர் மீதும் மதிப்பு-மரியாதை படிப்படியாக குறைந்து வருகிறது.
    • எங்கள் குடும்பத்தை சேர்ந்த வருங்கால சந்ததியினருக்கு முன்னோர்களின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும் என்று விரும்பினேன்.

    மதுரை:

    இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு பிறகு பெற்றோரை அவமதிப்பதும், முதியோர் இல்லங்களில் சேர்ப்பதுமான அவல நிலை நீடித்து வருகிறது. ஆனால் மதுரையை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் மறைந்த பெற்றோரின் நினைவாக உருவச்சிலை அமைத்து வீட்டிலேயே கோவில் கட்டி வழிபட்டு வருகிறார்.

    மதுரை சிந்தாமணி கதிர் அறுப்பு மண்டபம் மேட்டு புஞ்சை தெருவை சேர்ந்தவர் ரமேஷ் பாபு (வயது 56). இவர் மதுரை கீரைத்துறை, தெப்பக்குளம், தெற்குவாசல், ஜெய்ஹிந்த்புரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர். தற்போது விருப்ப ஓய்வுபெற்று வீட்டில் இருந்து வருகிறார். தனது வீட்டில் தாய்-தந்தைக்கு வீட்டில் கோவில் அமைத்து வழிபடுவது தொடர்பாக ரமேஷ்பாபு கூறியதாவது:-

    எனது தந்தை பொன்னாண்டி, தாய் மீனாம்பாள். எங்கள் வீட்டில் 5 பெண்கள் உள்பட 7 பேர். இதில் நான் 4-வது பிள்ளை. எனக்கு மனைவி ரேணுகாதேவி, மகன் பொன்மணி, மகள் திவ்யபாரதி உள்ளனர். மதுரை மாநகர காவல் துறையில் 38 ஆண்டுகள் பணிபுரிந்து விட்டேன். உடல்நிலை ஒத்துழைக்காததால் பணியில் இருந்து விருப்ப ஓய்வுபெற்று வீட்டில் இருந்து வருகிறேன். எனக்கு சிறு வயது முதலே தாய்-தந்தை மீது அளப்பரிய மதிப்பு-மரியாதை உண்டு.

    தாய்-தந்தை என்போர் வாழும் தெய்வங்கள், நாம் அவர்களை மதிப்பு-மரியாதையுடன் நடத்த வேண்டும், குடும்பத்தை அரவணைத்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும், இன்றைய தலைமுறை சினிமா நடிகர்களுக்கு பின்னால் செல்கிறது, எனவே நாம் பிள்ளைகளுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்று தந்தை அடிக்கடி குறிப்பிடுவார்.

    எனது தாய் மீனாம்பாள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தந்தை பொன்னாண்டி 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். எனவே நாங்கள் தாய்-தந்தையின் நினைவு நாள் மற்றும் பிறந்த நாளில் அனைவரையும் வீட்டுக்கு வரவழைப்போம். குடும்பத்துடன் சாமி கும்பிட்ட பிறகு அன்னதானம் வழங்குவோம்.

    இன்றைய இளம் தலைமுறையினருக்கு பெற்றோர் மீதும், முன்னோர் மீதும் மதிப்பு-மரியாதை படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே எங்கள் குடும்பத்தை சேர்ந்த வருங்கால சந்ததியினருக்கு முன்னோர்களின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும் என்று விரும்பினேன்.

    அதன்படி என் தந்தையின் பிறந்த நாளான கடந்த 10-ம் தேதி தந்தை பொன்னாண்டி-தாய் மீனாம்பாள் சிலையை தத்ரூபமாக வடித்து வீட்டில் கோவில் அமைத்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×