search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போனை பறித்து சென்ற கல்லூரி மாணவர் கைது
    X

    செல்போனை பறித்து சென்ற கல்லூரி மாணவர் கைது

    • ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு மேல் நகர்மேடுவை சேர்ந்தவர் திருமலை (வயது 19). இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    திருமலை ஆன்லைன் மூலம் செல்போனை ஒன்றை ஆர்டர் செய்தார். அந்த செல்போனை சேத்துப்பட்டு பெரிய கொழப்பலூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (21).

    என்பவர் கொரியர் மூலம் திருமலை முகவரிக்கு எடுத்து வந்தார். அப்போது திருமலையை தொடர்பு கொண்டபோது தான் அங்கு இல்லை தீப்பந்தல் கூட்ரோடு அருகே வருமாறு கார்த்தியிடம் கூறினார். அந்த பார்சலை எடுத்துக் கொண்டு தீப்பந்தல் கூட்ரோட்டிற்கு சென்றார். அங்கு நின்றிருந்த திருமலையிடம் செல்போன் பார்சலை கொடுத்து பணத்தை கேட்டார்.

    அந்த செல்போனை வாங்கிக் கொண்டு பணத்தை கொடுக்காமல் திடீரென பைக்கை எடுத்துக்கொண்டு திருமலை அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.

    செய்வதறியாமல் நின்ற கார்த்தி திருமலை முகவரிக்கு சென்று பார்த்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தார். அப்போது திருமலை கொடுத்த முகவரி போலியானதும் தான் ஏமாற்றப்பட்டதும் தெரியவந்தது.

    இதுகுறித்து கார்த்திக் செய்யாறு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தலை மறைவான திருமலையை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று போலீசார் திருமலையை கைது செய்து அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

    மேலும் போலீசார் இது குறித்து திருமலையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×