search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "scythe cut"

    • சக்திவேல் தனது வீட்டு அருகே நின்ற போது அங்கு வந்த கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றது.
    • தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு கீதாஜீவன் நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 21) கூலித் தொழிலாளி.

    அரிவாள் வெட்டு

    இவர் தனது வீட்டு அருகே நின்ற போது அங்கு வந்த கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றது.

    இதில் படுகாயம் அடைந்த சக்திவேல் தூத் துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்யராஜ் மேற்பார்வையில், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் சிவக் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்ட னர்.

    6 பேர் கைது

    இதில் தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த வேல்முருகன், கண்ணன், முள்ளக்காடு முனியசாமிநகர் சிவா, பாரதிநகர் கெளிவின்ஸ், தலைவன் வடலியை முத்துக்குமார் மற்றும் இளஞ்சிரார் ஒருவர் உள்ளிட்ட 6 பேர் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து 6 பேரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 3 பேர் கும்பல் சக்தியின் 2 கைகளையும் சரமாரி வெட்டிவிட்டு தப்பிச்சென்றது.
    • இடப்பிரச்சினை முற்றியதில் மடத்தானின் மகன்கள் முருகனின் கையை வெட்டினர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் வயல் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சக்தி(வயது 32). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் நேற்று அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தனது 2 குழந்தைகளையும் விட்டுவிட்டு மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    சரமாரி வெட்டு

    அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் சக்தியின் மொபட்டில் மோதவிட்டு அவரை கீழே தள்ளி அவரது 2 கைகளையும் சரமாரி வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. இதில் படுகாயம் அடைந்த சக்திக்கு சந்திப்பில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அறிந்த டவுன் போலீசார் அங்கு விரைந்த சென்று விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்தில் 3 பேர் இருந்ததும், மெயின் சாலையில் நின்று 2 பேர் நோட்டமிட்டதும் அங்கு பொருத்தப்பட்டிருந்த காமிராக்களில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    சக்தி கட்டியுள்ள வீட்டின் இடம் மீது அவரது தூரத்து உறவினரான மடத்தான் என்பவர் தனக்கும் உரிமை உள்ளதாக கூறி அடிக்கடி சக்தியின் தந்தை முருகனிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு இடப்பிரச்சினை முற்றியதில் மடத்தானின் மகன்கள் சக்தியின் தந்தை முருகனின் கையை வெட்டினர்.

    இந்நிலையில் அந்த பிரச்சினை அவர்களுக்குள் தொடர்ந்து புகைந்து வரும் நிலையில் நேற்று மடத்தான் மற்றும் அவரது மனைவி பாப்பா ஆகியோரின் தூண்டுதலின்பேரில் அவரது மகன்கள் சிவா, முத்துப்பாண்டி மற்றும் 3 பேர் இந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் சிவா, முத்துப்பாண்டி ஆகியோரின் பெயர்கள் ரவுடிகள் பட்டியலில் இருப்பதாகவும், அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • பாளை சீவலப்பேரி ரோடு செந்தில் நகரை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 61). இவர் பாளை மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.
    • நேற்று அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பிரசாத் கண்ணன் அரிவாளால் நாகராஜனை சரமாரியாக வெட்டினார்.

    நெல்லை:

    பாளை சீவலப்பேரி ரோடு செந்தில் நகரை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 61). இவர் பாளை மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது அண்ணன் பால்ராஜின் மகன் பிரசாத் கண்ணன் (42). இவரும் மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். நாகராஜனுக்கும், அவரது அண்ணன் பால்ராஜ் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது. நேற்று அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பிரசாத் கண்ணன் அரிவாளால் நாகராஜனை சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு முதுகு மற்றும் தலையில் பலத்த வெட்டு விழுந்தது.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் பாளை போலீசாருக்கு தகவல் தெரிவி த்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த நாகராஜனை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாத் கண்ணனை கைது செய்தனர்.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர்.
    • அப்போது அங்கு வந்த அண்ணன் தம்பிகளான நவீன் (22), ரூபன் (24) ஆகியோருக்கும், தினேஷ், சுக்ரு ஆகியோருக்கும் இடையே பட்டாசு வெடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

     சேலம்:

    சேலம் மணியனூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் தினேஷ் (வயது 30), சுக்ரு (28).

    அரிவாள் வெட்டு

    இவர்கள் இருவரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அண்ணன் தம்பிகளான நவீன் (22), ரூபன் (24) ஆகியோருக்கும், தினேஷ், சுக்ரு ஆகியோருக்கும் இடையே பட்டாசு வெடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் நவீன், ரூபன் ஆகியோர் சேர்ந்து அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டினர். காயம் அடைந்த 2 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    விசாரணை

    இது குறித்த புகாரின்பேரில் நவீன், ரூபன் ஆகிய இருவரையும் அன்னதா னப்பட்டி போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சித்தனூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் விக்னேஷ் (20) எலக்ட்ரிசன் வேலை செய்து வருகிறார்.
    • தளவாய்பட்டி பஞ்சாயத்து பழனியாண்டவர் கோவில் அருகே உள்ள மணி (35) என்பவருக்கும் கடந்த மாதம் 22-ந் தேதி சீரியல் செட்டு போடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் மல்லமூப்பம் பட்டி அருகே உள்ள சித்தனூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் விக்னேஷ் (20) எலக்ட்ரிசன் வேலை செய்து வருகிறார். இவருக்கும் தளவாய்பட்டி பஞ்சாயத்து பழனியாண்டவர் கோவில் அருகே உள்ள மணி (35) என்பவருக்கும் கடந்த மாதம் 22-ந் தேதி சீரியல் செட்டு போடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு மல்லமூப்பம்பட்டி பகுதியில் உள்ள சிக்கன் கடை அருகே விக்னேஷ் நின்றிருந்தார். இதை பார்த்த மணி சிக்கன் வெட்டும் அரிவாளால் விக்னேஷை இடது காதுக்கு மேற்புறம் தலையில் வெட்டினார். இதில் நிலைகுலைந்த விக்னேஷ் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

    அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காயல்பட்டினம் லட்சுமிபுரத்தில் அழகு லிங்கம் , வீரமணி ஆகிய இருவரும் வாடகை வீட்டில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்துள்ளனர்.
    • சில மாதங்களாக இவர்கள் இருவரும் லட்சுமிபுரம் பகுதியில் உள்ள பலரிடமும் வீண் பிரச்சினைகள் செய்து வந்துள்ளனர்.

    ஆறுமுகநேரி:

    வசித்து வருபவர் முத்துகிருஷ்ணன் (வயது 49).

    கட்டிட தொழிலாளியான இவருக்கு சித்ரா என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அதே பகுதியில் கூட்டாம்புளியை சேர்ந்த சுயம்புலிங்கம் என்பவரின் மகன்களான அழகு லிங்கம் (29), வீரமணி (23) ஆகிய இருவரும் வாடகை வீட்டில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்துள்ளனர்.

    சில மாதங்களாக இவர்கள் இருவரும் லட்சுமிபுரம் பகுதியில் உள்ள பலரிடமும் வீண் பிரச்சினைகள் செய்து வந்துள்ளனர்.

    இதன் காரணமாக அழகுலிங்கம், வீரமணி ஆகியோர் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே பக்கத்து வீட்டுக்காரரான முத்துகிருஷ்ணனிடமும் அந்த இரு நபர்களும் தகராறு செய்துள்ளனர். முத்துகிருஷ்ணனின் மகன்கள் இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டலும் விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு முத்துகிருஷ்ணன் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அண்ணன், தம்பிகளான அழகு லிங்கமும், வீரமணியும் அரிவாளுடன் வந்து முத்துகிருஷ்ணனை சரமாரியாக வெட்டியுள்ளனர். உடல் முழுவதும் 11 இடங்களில் வெட்டுப்பட்ட நிலையில் முத்துகிருஷ்ணன் மயங்கி விழுந்துள்ளார்.

    உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டனர். அப்போது அழகுலிங்கமும், வீரமணி யும் அங்கிருந்து ஓடி விட்டனர். படுகாயம் அடைந்த முத்துகிருஷ்ணன் உடனடியாக திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து லட்சுமிபுரத்தில் பதட்டம் ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    முத்துகிருஷ்ணன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன் ஆகியோர் அழகுலிங்கம், வீரமணி இருவரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

    • சகோதரிக்கு நியாயம் கேட்டு தந்தையுடன் வந்த பெண்ணுக்கு நேர்ந்த அவலம்
    • மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்துள்ள சின்னகள்ளிப்பட்டி அருகே கடுவாய்க்கரையை சேர்ந்தவர் கனகராஜ்(வயது44). இவருக்கு திருணம் ஆகி விட்டது.

    இந்த நிலையில் கனகராஜூக்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.2 பேரும் அடிக்கடி சந்தித்து, தங்கள் காதலை வளர்த்தும், ஜாலியாகவும் இருந்து வந்தனர்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் கனகராஜின் மனைவிக்கு தெரியவரவே அவர் கணவரை கண்டித்து ள்ளார்.

    ஆனாலும் அவர் அதனை கண்டு கொள்ளாமல், தனது கள்ளக்காதலை தொடர்ந்தார். இதையடுத்து கனகராஜின் மனைவி தனது தந்தை வீட்டுக்கு சென்று நடந்ததை சம்பவத்தை தெரிவித்தார்.

    இதையடுத்து கனகராஜின் மாமனார், தனது இளைய மகளுடன் அங்கு சென்று, ஏன் இப்படி செய்கிறாய் என கேட்டார். அதற்கு நான் அப்படி தான் செய்வேன் என கூறிய கனகராஜ் அவரை தாக்க முயன்றார்.

    இதனை அவருடன் வந்த இளையமகள் பார்த்து தடுக்க முற்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து, அவரை வெட்டினார்.

    இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இரு தரப்பினர் மோதல்; 9 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ளது கீழக்குளம் கிராமம். இங்குள்ள மந்திரமூர்த்தி அய்யனார் கோவிலில் கடந்த வாரம் புரவிடுப்பு விழா தொடங்கி யது. இந்த திருவிழா தொடர்பாக கீழக்கு ளத்தைச் சேர்ந்தவரும் கே.ஆர். பட்டணம் ஊராட்சியின் துணைத் தலைவருமான பெரியசாமி தரப்பிற்கும், முதுகுளத்தூர் திமுக ஒன்றிய செயலா ளரான சண்முகம் தரப்பிற்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

    கோவில் திருவிழா முடிந்து அன்னதானம் நடந்த போது இருதரப்பி னரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அரிவாள், கத்தி, கம்பு, கிரிக்கெட் மட்டை ஆகிய வற்றால் தாக்கியும், கற்களை வீசி எறிந்தும் இருதரப்பி னரும் கடுமை யாக மோதி கொண்டனர்.

    இதில் கீழக்குளத்தை சேர்ந்த சந்திரசேகர் (வயது42), சண்முகவேலு(67), பெருங்கருணையைச் சேர்ந்த சண்முகம்(47), கீழக்குளம் முருகன்(46) முத்துராமலிங்கம் மனைவி கஸ்தூரி(50), மகாலிங்கம் மகன் உதயகுமார்(19), முத்துக்குமார்(30), மாரி முத்து (43), ஜெகதீஸ்வரன்(33) ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இவர்கள் மதுரை, ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இந்த மோதலின் போது பாது காப்பு பணியில் ஈடுபட்ட அபிராமத்தை சேர்ந்த காவலர் சரவணன் காயம் அடைந்தார். இவர் கமுதி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த மோதல் குறித்து கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • கணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • தலைமறைவாக உள்ள இளையராஜாவை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி தேவசுமதி. இவர்களுக்கு திருமணமாகி 17 வருடம் ஆகிறது. ஒரு மகன், மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் தேவசுமதிக்கு முடித்தலை பகுதியைச் சேர்ந்த இளைய ராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதாலாக மாறியது. இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய தேவசுமதி 4 வருடங்கள் இளையராஜாவுடன் வசித்து வந்துள்ளார்.

    அவரை தேடி கண்டு பிடித்த கணவர், குழந்தை கள் வளர்ந்துவிட்டதால் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அதை ஏற்று தேவசுமதியும் மீண்டும் வீட்டுக்கு வந்தார். ஆனால் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார்.

    இதனை கணவர் கண்டித்துள்ளார். சம்பவத்தன்றும் தேவசுமதி செல்போனில் பேசி கொண்டிருந்தார். அவரிடமிருந்து செல்போனை கணவர் வாங்கினார். அப்போது போனில் பேசியது இளையராஜா என தெரியவந்தது.

    தனது மனைவியுடன் தொடர்பை கைவிடுமாறி கூறி அவரை கணவர் கண்டித்துள்ளார். இந்த நிலையில் அங்குள்ள சர்ச்சின் அருகே ஜோசப் சென்று கொண்டிருந்த போது இளையராஜா அவரை வழிமறித்து அரிவா ளால் வெட்டியுள்ளார்.

    அதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் திரண்டதால் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார். அரிவாள் வெட்டில் காயமடைந்த ஜோசப் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள இளையராஜாவை தேடி வருகின்றனர்.

    • காதல் திருமண முன்பகையால் உறவினருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • இந்த மோதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத் துள்ள பாம்பன் பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஐஸ் வர்யா. இவர் அதே பகுதி யைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்தார். இவர்களது காதலுக்கு கடு மை யான எதிர்ப்பு கிளம்பி யது. இருந்தபோதிலும் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளனர்.

    இதனால் இரண்டு குடும் பத்தில் உள்ள இளைஞர்கள் முன்பகையுடன் இருந்து வந்துள்ளனர். இதில் ஒரு தரப்பை சேர்ந்த உறவின ரான ராஜ்கண்ணன் நேற்று மாலையில் வீட்டின் அருகில் வரும்பொழுது மற்றொரு தரப்பினர் வழிமறித்து அசிங்கமாக பேசி அரிவா ளால் கையில் வெட்டி காயப்படுத்தி மோதிக் கொண்டுள்ளனர்.

    இது குறித்து, பாம்பன் காவல் நிலையத்தில் நவீன்கு மார் அளித்த புகாரையடுத்து ராஜ்கண்ணன் (26), ராஜபாண்டி (23) ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதேபோன்று ராஜ்கண்ணன் அளித்த புகாரையடுத்து அஸ்வீன் குமார் (23), நவின்குமார் (18), ஜெகதீஷ் (21) ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மோதல் சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வியாபாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது.
    • இதனால் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள அயன்கொல்லம்கொ ண்டான் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் பலகாரம் தயாரித்து மோட்டார் சைக்கிளில் ஊர் ஊராக சென்று விற்பனை செய்து வந்தார்.

    சம்பவத்தன்றும் அவர் வியாபாரத்திற்கு புறப்பட்டார். அப்போது அவரை வழிமறித்த அதே பகுதியை சேர்ந்த மணிகண்ட ஜோதி(18) என்பவர் மாரியப்பனை மிரட்டி பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்து விட்டார். இதனால் அவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த மணிகண்டஜோதி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாரியப்பனை சரமாரியாக வெட்டினார். இதில் தலை மற்றும் கைகளில் வெட்டு விழுந்தது. கை விரல்கள் துண்டாகின. வலியால் துடித்த மாரியப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர் பாக சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டஜோதியை கைது செய்தனர். விசாரணையில், இவருக்கு சிறு வயதில் இருந்தே போதை பழக்கம் இருந்தது. இதனால் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    • வெட்டிய கும்பலில் ஒருவர் கோவில்பாளையத்தைச் சேர்ந்த ரவி என்று தகவல்
    • காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை

    கோவை,

    கோவை கணபதி அருகே உள்ள வ.உ.சி நகரை சேர்ந்தவர் நித்தீஷ்குமார் (வயது 21). டான்ஸ் மாஸ்டர்.

    இவர் மீது சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சரவணம்பட்டி போலீசார் கடந்த மாதம் 31-ந் தேதி நித்தீஷ்குமாரை கைது செய்து கோவை மத்திய ஜெயிலில் அடைத்த னர். கடந்த 9-ந் தேதி இவர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.

    நேற்று காலை நித்தீஷ்கு மார் அவரது நண்பர்களான ரத்தினபுரியை சேர்ந்த ரஞ்சித் (23), கார்த்திக் ஆகியோருடன் ஒரு மொபட்டில் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கையெழுத்து போடுவ தற்காக வந்தார்.

    கையெழுத்து போட்ட பின்னர் 3 பேரும் மொபட் டில் வீட்டிற்கு புறப்பட்டனர். மொபட் நஞ்சப்பா ரோடு அருகே சென்ற போது இவர்கள் 4 மோட்டார் சைக்கிள்களில் 8 பேர் பயங்கர ஆயுதங்களுடன் பின் தொடர்ந்து வந்தனர். அவர்களை பார்த்ததும் 3 பேரும் தப்பிப்பதற்காக மொபட்டை ராம்நகருக்குள் திருப்பி சென்றனர்.

    ஆனால் அந்த கும்பல் 3 பேரையும் விடாமல் விரட்டி சென்ற னர்.மொபட் ராம்நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி முன்பு சென்ற போது அந்த கும்பல் மொபட்டை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் கள் வைத்து இருந்த அரி வாளை எடுத்து நடு ரோட்டில் வைத்து நித்தீஷ்கு மார், ரஞ்சித் ஆகியோரை வெட்டினர். கார்த்திக் தப்பிச் சென்றார். இதனால் அங்கு ஏராளமான பொது மக்கள் திரண்டனர். இதனையடுத்து கும்பல் வெட்டுவதை நிறுத்தி விட்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நித்தீஷ்குமார், ரஞ்சித் ஆகியோரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவல் கிடைத்ததும் காட் டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னர். பின்னர் அங்குள்ள கடைகளில் பொருத்தப்ப ட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கும்பல் டான்ஸ் மாஸ்டர் நித்தீஷ்கு மார், ரஞ்சித் ஆகியோரை வெட்டும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதனை வைத்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர். விசாரணையில் நித்தீஷ்குமார், ரஞ்சித் ஆகியோரை வெட்டி 8 பேரில் ஒருவர் கோவில்பா ளையத்தைச் சேர்ந்த ரவி என்பது தெரியவந்துள்ளது. அவரை பிடித்தால் மற்ற 7 பேரின் அடையாளமும் தெரிந்து விடும். இதனால் ரவியை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ள னர்.

    ×