என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பணகுடி அருகே தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டு 3 பேருக்கு வலைவீச்சு
Byமாலை மலர்7 Nov 2022 9:51 AM GMT
- பணகுடி அண்ணாநகரை சேர்ந்தவர் மணிகண்டன். கட்டிட தொழிலாளி
- மூர்த்தி உட்பட 3 பேர் மணிகண்டனிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த அவர்கள் அரிவாளால் வெட்டினர்.
பணகுடி:
பணகுடி அண்ணாநகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). கட்டிட தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
நேற்று மாலையில் மணிகண்டன் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த மூர்த்தி உட்பட 3 பேர் மணிகண்டனிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த அவர்கள் அரிவாளால் வெட்டினர்.
இதில் மணிகண்டனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அங்கு நின்ற மணிகண்டனின் தந்தை மனோகர் இதனை தடுத்துள்ளார். அவரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
காயமடைந்த இருவரை யும் அங்கிருந்தவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இச்சம்பம் குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தி உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X