search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plus 2 exam result"

    • பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி ஏப்ரல் மாதம் மாதம் 3-ந் தேதி முடிவடைந்தது.
    • சேலம் மாவட்டத்தில் 155 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

    சேலம்:

    தமிழ்நாட்டில் 2022-2023-ம் கல்வியாண்டு, பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி ஏப்ரல் மாதம் மாதம் 3-ந் தேதி முடிவடைந்தது.

    155 தேர்வு மையங்கள்

    சேலம் மாவட்டத்தில் 155 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. இதில் 149 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காக வும், 6 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டது.

    இத்தேர்வு மையங்களில் மாணவிகள் 19 ஆயிரத்து 528 பேரும், மாணவர்கள் 17 ஆயிரத்து 733 பேரும் பிளஸ்-2 பொதுத் தேர்வினை எழுதினார்கள். பின்னர் 10-ந்தேதியில் இருந்து விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி 24 -ந்தேதி நிறைவடைந்தது.

    பிளஸ்-2 பொது தேர்வு முடிவு வெளியீடு

    இதனை தொடர்ந்து இன்று காலை தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவை வெளியிட்டது.

    இதில் சேலம் மாவட்டத்தில் மாணவிகள் 18 ஆயிரத்து 809 பேர், மாணவர்கள் 16,300 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக 37 ஆயிரத்து 261 ேபர் தேர்வு எழுதியதில் 35109 பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். இது 94.22 சதவீதம் தேர்ச்சி விகிதம் ஆகும்.

    மாவட்டத்தில் 2 ஆயிரத்து 152 ேபர் தேர்ச்சி பெறவில்லை. வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் ேபர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து இருக்கிறார்கள்.

    மகிழ்ச்சி

    தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும் மாணவ- மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிக்கூடத்துக்கு சென்று ஒவ்வொரு படத்திலும் எவ்வளவு மதிப்பெண் எடுத்துள்ளோம் போன்ற மதிப்பெண் பட்டியலை பார்வையிட்டனர். பலர் செல்போன், கனினி வழியாக தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் தங்களது மதிப்பெண் பட்டியலை பார்த்தனர்.

    தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் துள்ளிக்குதித்தும், பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகளுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் தஞ்சை மாவட்டத்தில் 90.25 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
    தஞ்சாவூர்:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    தஞ்சை மாவட்டத்தில் இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாசினி, பிளஸ் -2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 13,116 மாணவர்கள் எழுதினர். இதில் 11,212 பேர் தேர்ச்சி பெற்றனர். இதேபோல் 16,131 மாணவிகள் எழுதியதில் 15, 183 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    மாவட்டத்தில் மொத்தம் 29,247 பேர் எழுதினர். இதில் 26, 395 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 90.25 சதவீத தேர்ச்சி ஆகும்.

    அதாவது மாணவர்களில் 85.48 சதவீத பேரும், மாணவிகளில் 94.12 சதவீத பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கடந்த ஆண்டில் தஞ்சை மாவட்டம் பிளஸ்- 2 தேர்வில் 92.47 சதவீத தேர்ச்சி பெற்றது. இந்தாண்டு கடந்தாண்டை விட 2.27 சதவீதம் தேர்ச்சி குறைவாக பெற்றுள்ளது.

    இதேபோல் கடந்தாண்டு தேர்ச்சி விகிதத்தில் தமிழகத்தில் 19-வது இடம் பெற்றது. இந்தாண்டு 20-வது இடத்தை பிடித்துள்ளது.

    மாவட்டத்தில் 90 அரசு பள்ளிகள் உள்ள மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் 84.37 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தஞ்சை மாவட்டத்தில் 1180-க்கு மேல் ஒரு மாணவி மதிப்பெண் பெற்றுள்ளார். 1151-1180 வரை 40 பேரும், 1126-1150 வரை 147 பேரும், 1101 -1125 வரை 245 பேரும், 1001 முதல் 1100 வரை 99 பேரும், 901 முதல் 1000 மதிப்பெண் வரை 3261 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    திருவாரூர் மாவட்டத்தில் இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தவமணி பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    இதில் மொத்தம் பிளஸ்-2 தேர்வை 14,235 பேர் எழுதினர். இதில் ஆண்கள் 4920, பெண்கள் 7241 பேர் ஆகும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 12161 பேர் ஆகும். இது 85.49 சதவீதம் ஆகும். சென்ற ஆண்டை விட 3.28 சதவீதம் தேர்ச்சி அதிகமாக பெற்றுள்ளனர். இந்த ஆண்டு தமிழகத்தில் தேர்ச்சி விகிதத்தில் 24-வது இடத்தை திருவாரூர் மாவட்டம் பிடித்துள்ளது.

    நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 85.97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த ஆண்டில் 17 ஆயிரத்து 958 பேர் தேர்வு எழுதினர். இதில் 15 ஆயிரத்து 438 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு தேர்ச்சியை விட இந்த ஆண்டு 2.11 சதவீதம் பேர் குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர். #Tamilnews
    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் 83.35 சதவீதம் பெற்று கடைசி இடத்தை பெற்றுள்ளது.
    விழுப்புரம்:

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 91.01 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 87.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

    மாவட்ட அளவில் விருதுநகர் மாவட்டம் 97.5 சதவீதம் பெற்று முதல் இடத்தையும், ஈரோடு மாவட்டம் 96.35 சதவீதம் பெற்று 2-வது இடத்தையும், திருப்பூர் மாவட்டம் 96.18 சதவீதம் பெற்று 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் 95.88 சதவீதம் பெற்று 4-வது இடத்தையும், நாமக்கல் மாவட்டம் 95.72 சதவீதம் பெற்று 5-வது இடத்தையும், சிவகங்கை மாவட்டம் 95.60 சதவீதம் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு மொத்தம் 39 ஆயிரத்து 539 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 19 ஆயிரத்து 391 பேரும், மாணவிகள் 20 ஆயிரத்து 148 பேரும் தேர்வு எழுதினர்.

    இதில் 32 ஆயிரத்து 9.55 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 15 ஆயிரத்து 129 பேரும், மாணவிகள் 17 ஆயிரத்து 826 பேரும் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை விட மாணவிகள் 10.46 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் 83.35 சதவீதம் பெற்று கடைசி இடத்தை பெற்றுள்ளது.

    கடந்த ஆண்டு 86.36 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது.
    திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வில் 89.78 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் 10,235 மாணவர்களும், 11,683 மாணவிகளும் என மொத்தம் 21,918 பேர் தேர்வு எழுதினர். இதில் 8,880 மாணவர்களும், 10,827 மாணவிகளும் என மொத்தம் 19,677 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்கள் 86.47 சதவீதமும் மாணவிகள் 92.67 சதவீதமும் என மொத்தம் 89.78 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மாநில அளவில் 21-வது இடமாகும்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் 2016-ம் ஆண்டு 90.48 சதவீதமும், கடந்த ஆண்டு 92.80 சதவீதமும், இந்த ஆண்டு 89.78 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளை விட தற்போது மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 8,504 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 7,001 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 82.31 சதவீதம் ஆகும்.

    தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் மற்றும் அடுத்த இடங்களை பிடித்த மாணவர்களின் விபரம் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த ஆண்டு முதல் மாணவர்களின் செல்போனுக்கே தேர்ச்சி விகிதம் குறுந்தகவலாக அனுப்பப்பட்டது. இதனால் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    தேனி மாவட்டத்தில் 7,166 மாணவர்களும் 7,622 மாணவிகளும் என மொத்தம் 14,788 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 6,739 பேரும், மாணவிகள் 7,370 பேரும் என மொத்தம் 14,109 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மொத்த தேர்ச்சி விகிதம் 95.41 சதவீதம் ஆகும். மாணவர்கள் 94.04 சதவீதமும், மாணவிகள் 96.69 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே தேனி மாவட்டத்தில் அதிக அளவு தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    தேனி மாவட்டத்தில் மொத்தம் 94 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளும், 32 மெட்ரிக் பள்ளிகளும் என மொத்தம் 126 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதினர். மாநில அளவில் தேனி மாவட்டம் 9-வது இடத்தை பிடித்துள்ளது.

    கடந்த 2016-ம் ஆண்டு 95.11 சதவீதமும் 2017-ம் ஆண்டு 95.93 சதவீதமும் இந்த ஆண்டு 95.41 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக 95 சதவீதம் மாணவ-மாணவிகள் தேனி மாவட்டத்தில் தேர்ச்சியடைந்துள்ளனர்.

    தேனி மாவட்டத்தில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 5,480 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இவர்களில் 5,032 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இது 91.82 சதவீதம் ஆகும். #Plus2Result
    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. பிளஸ்-2 தேர்வில் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடத்தை பெற்றுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 114 மாணவர்களும், 13 ஆயிரத்து 466 மாணவிகளும் என 24 ஆயிரத்து 580 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள்.

    இவர்களில் 23 ஆயிரத்து 640 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 10 ஆயிரத்து 530 பேரும், மாணவிகள் 13 ஆயிரத்து 110 பேரும் ஆவார்கள். மொத்த தேர்ச்சி விகிதம் 96.18 ஆகும்.

    மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் பழனிசாமி கூறியதாவது-

    திருப்பூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 580 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள். இவர்களில் 23 ஆயிரத்து 640 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 96.18 ஆகும்.

    தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. முதல் முறையாக இந்த இடத்தை பிடித்து உள்ளது. கடந்த ஆண்டு 8-வது இடத்தில் இருந்தது.

    திருப்பூர் மாவட்டம் 3-வது இடத்தை பிடிக்க காரணமான முதன்மை கல்வி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்.

    கடந்த ஆண்டு அரசு பள்ளியில் சிறந்த மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தரமான ஆசிரியர்களை கொண்டு ஐ.ஐ.டி, என்.ஐ.டி. போன்ற உயர் கல்விக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதில் 5 மாணவர்கள் ஐ.ஐ.டி. முதல் நிலை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. புதுவையில் 87.32 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    புதுச்சேரி:

    தமிழ்நாடு, புதுவையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

    புதுவை மாநில தேர்வு முடிவுகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டார்.

    பிளஸ் 2 பொதுத்தேர்வில் புதுவை, காரைக்கால் பகுதியை சேர்ந்த 6,987 மாணவர்களும், 8,088 மாணவிகளும் என மொத்தம் 15,075 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

    தேர்வு முடிவுகளின்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற 13,163 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 5,242, மாணவிகள் 7,321 ஆகும். தேர்ச்சி விகிதம் 87.32. இது கடந்த ஆண்டைவிட 0.64 சதவீதம் அதிகம்.

    புதுவை, காரைக்காலில் அரசு பள்ளியில் 6,668 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 4,918 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 73.76 சதவீதமாகும். தனியார் பள்ளிகளில் 8,407 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 8245 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 98.07 சதவீதமாகும்.

    புதுவை பகுதியில் அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய 5,270 மாணவர்களில் 3857 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி வீதம் 73.19 சதவீதமாகும். தனியார் பள்ளிகளில் 7,495 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 7,388 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 98.57 சதவீதமாகும்.

    காரைக்கால் பகுதியில் அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய 1,398 மாணவர்களில் 1,061 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 75.89 சதவீதமாகும். தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதிய 912 மாணவர்களில் 857 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 93.97 சதவீதமாகும். புதுவை, காரைக்கால் பகுதிகளில் 87.32 சதவீதம் மாணவர்களும், புதுவை பகுதியில் 88.09 சதவீத மாணவர்களும், காரைக்காலில் 83.03 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    புதுவை பகுதியில் அரசு பள்ளிகளில் மாணவர் தேர்ச்சி வீதம் கடந்த ஆண்டை விட 0.51 சதவீதம் குறைவாகும். அதேநேரத்தில் காரைக்காலில் 2.19 சதவீதம் அதிகமாகும்.

    புதுவை, காரைக்காலில் 51 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு பள்ளிகளில் பாகூர் கொரவள்ளிமேடு பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. அரசு, தனியார் பள்ளிகளில் வேதியியல் பாடத்தில் 4 மாணவர்களும், கணிப்பொறி அறிவியலில் 19, கணக்கு 29, பொருளியல் 7, வணிகவியல் 111, கணக்கு பதிவியல் 150, வணிக கணிதம் 7 என ஆக மொத்தம் 327 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கல்வி அமைச்சர் கமலக்கண்ணன், கல்வித்துறை செயலர் அன்பரசு, இயக்குனர் குமார், இணை இயக்குனர் சோம சுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.
    பிளஸ்-2 தேர்வில் மாணவி தோல்வி அடைந்ததால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள நல்லாத்தூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் இளமதி (வயது 17). இவர் நல்லாத்தூர் அருகே உள்ள குதிரைசந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இன்று பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் மாணவி இளமதி 2 பாடங்களில் தோல்வி அடைந்தார்.

    இதனால் மாணவி மனவேதனை அடைந்தார். பின்னர் அவர் அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணவேணி, கச்சிராயப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று கிணற்றில் பிணமாக மிதந்த இளமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் கோவையை சேர்ந்த 2 மாணவிகள் தோல்வியடைந்ததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
    கோவை:

    கோவை வெரைட்டி ஹால் பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் செந்தில் குமார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் பிரியா (19). இவர் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார்.

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் மாணவி பிரியா தோல்வி அடைந்து இருந்தார். இதனால் மனம் உடைந்து காணப்பட்டார்.

    திடீரென அவர் போலீஸ் குடியிருப்பு முதல் மாடிக்கு சென்றார். அங்கிருந்து கீழே குதித்தார். கீழே பிரியாவின் தாய் ஜெயலட்சுமி நின்று கொண்டிருந்தார். அவர் மீது பிரியா விழுந்தார்.

    மாடியில் இருந்து கீழே குதித்ததில் பிரியாவின் இடது கையில் காயம் ஏற்பட்டது. அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து வெரைட்டி ஹால் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிளஸ்- 2 மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் கோவை சிங்காநல்லுரை சேர்ந்தவர் வசந்த்பாபு. இவரது மகள் ஏஞ்சலின் ஜெனிபர். (வயது18). பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார். இந்த நிலையில் இன்று வெளியான தேர்வு முடிவில் அவர் தோல்வியடைந்தார். இதனால் மனம் உடைந்த மாணவி ஏஞ்சலின் ஜெனிபர் வீட்டில் கழிவறையில் வைத்திருந்த பினாயிலை எடுத்துகுடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த உறவினர்கள் மாணவி ஏஞ்சலின் ஜெனிபரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. #PlusTwoExamResults #Plus2Result
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 47 ஆயிரம் 461 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 41 ஆயிரத்து 389 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 87.21 சதவீதம் ஆகும்.

    கடந்த ஆண்டு 88.85 சதவீதம் தேர்ச்சி பெற்று இருந்தது. தற்போது காஞ்சீபும் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.

    மாவட்ட அளவில் காஞ்சீபுரம் 24-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 23-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    அரசு பள்ளியில் மொத்தம் 19 ஆயிரத்து 171 பேர் தேர்வு எழுதி இருந்தனர். இதில் 14 ஆயிரத்து 769 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 77 சதவீதம்தேர்ச்சி ஆகும்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 43 ஆயிரத்து 866 பேர் தேர்வு எழுதினர். இதில் 38 ஆயிரத்து 255 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 87.17 ஆகும். கடந்த ஆண்டு 87.57 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது. தற்போது 0.40 சதவீதம் தேர்ச்சி குறைவு.

    மாவட்ட அளவில் திருவள்ளூர் மாவட்டம் 25-வது இடத்தை பிடித்துள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 90 அரசு பள்ளிகள் உள்ளன. இதில் 16 ஆயிரத்து 340 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 11 ஆயிரத்து 944 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 73.10. கடந்த ஆண்டு 74.28 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது.  #PlusTwoExamResults #PlusTwoResults #Plus2Result
    தமிழகத்தின் எதிர்காலமே, மாணவர்களின் கையில் தான் உள்ளது என்று குமரி மாவட்ட சுற்றுப்பயணத்தில் கமல்ஹாசன் பேசினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #Plus2Result
    நாகர்கோவில்:

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

    கிராமம், கிராமமாக செல்லும் அவர் மணக்குடி, தென்தாமரைகுளம் பகுதிகளில் பேசியதாவது:-

    என் மக்களை, குடும்பங்களை சந்தித்து பேச வந்துள்ளேன். உங்கள் நிறைகுறைகளை கேட்டறியவும், மக்களை புரிந்து கொள்ளவும் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு உள்ளேன். சிறிய கிராமங்களில் உள்ள மக்களுக்கு பெரிய மனம் இருக்கிறது.

    இளைஞர்கள் அன்பையும், ஆதரவையும் கொட்டி தருகிறார்கள். தமிழகம் உங்களை எதிர்பார்க்கிறது. உங்கள் எண்ணத்தை நிகழ்த்தி காட்ட நான் இங்கு வந்துள்ளேன்.

    மக்களை அறிந்து கொள்வதை தவிர இந்த பயணத்தில் வேறு எந்த நோக்கமும் இல்லை. வேறு பேச்சு பேசவும் விரும்பவில்லை.

    அரசியலில் என்ன நடக்கிறது? என்பது உங்களுக்கு தெரியும். அது பற்றிய விமர்சனங்களை இங்கு வைக்க வரவில்லை. நாளை நமதாக இருக்க வேண்டும். உங்கள் அன்புதான் எனது நம்பிக்கை. எனது நம்பிக்கை உங்கள் நம்பிக்கையாக மாற வேண்டும்.

    தென்தாமரைகுளத்தில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய கமல்ஹாசன்.

    இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் 94 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களை வாழ்த்துவது தமிழனாகிய எனது கடமை. மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை பயணத்திற்கு எனது வாழ்த்துக்கள்.

    தமிழக மாணவர்களுக்கு எத்தனை தடைகளை வைத்தாலும் அவர்கள் அதை தாண்டி வருவார்கள். கேள்வி தாளை மாற்றி கொடுத்தாலும் கூட அவர்கள் சரியான விடையை கண்டு பிடித்து எழுதுவார்கள். தமிழகத்தின் எதிர்காலமே, மாணவர்களின் கையில் தான் உள்ளது.

    கல்வி, சுகாதாரம், நேர்மை ஆகியவை தமிழகத்தை நல்ல நிலைக்கு எடுத்துச்செல்லும். இந்த நற்குணங்கள் உள்ளவர்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும்.

    நீங்கள் நேர்மையாக, வியர்வை சிந்தி உழைக்கும் மக்கள். உங்களை பார்த்து ஓட்டு போடுங்கள் என்று கேட்பது பின்னர் நடக்கும். இப்போது உங்களுக்கு எது பெரிய தாக்கமாக, தேக்கமாக உள்ளது என்பதை அறிய வந்திருக்கிறேன்.

    பாட்டுப்பாடி, ஆட்டமாடி உங்களை ஈர்த்தது நான் முன்பு செய்த வேலை. இப்போது உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறேன். இந்த சந்திப்பும், நாம் ஒருவருக்கொருவர் பேசுவதும், இனி அடிக்கடி நடக்கும். அதற்கு இந்த கூட்டங்கள் இன்னும் பெருக வேண்டும்.

    என்னை காணவும், என் பேச்சை கேட்கவும் வெயிலில் காத்திருக்கும் உங்களுக்கு என் அன்பை தவிர வேறு எதை தர முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து மீனவ கிராமங்கள் வழியாக சென்ற அவர் விவசாய நிலங்கள் வழியாகவும் பயணத்தை தொடர்ந்தார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #Plus2Result
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் -2 தேர்வு எழுதியவர்களில் மாணவர்கள் 83.60 சதவீதம் பேரும், மாணவிகள் 90.56 சதவீதம் பேரும் என மொத்தம் 87.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். #PlusTwoExamResults #Plus2Result
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் 176 பள்ளிகளில் இருந்து 22 ஆயிரத்து 467 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத தகுதி பெற்று 10 ஆயிரத்து 899 மாணவர்களும்,11 ஆயிரத்து 311 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 210 பேர் ஓசூர் கல்வி மாவட்டத்தில் 27 மையங்களிலும், கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 39 மையங்களிலும் என மொத்தம் 66 மையங்களில் தேர்வு எழுதினர்.

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று காலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    தேர்வு முடிவுகளில் 9ஆயிரத்து 112 மாணவர்களும், 10 ஆயிரத்து 240 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 352 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் -2 தேர்வு எழுதியவர்களில் மாணவர்கள் 83.60 சதவீதம் பேரும், மாணவிகள் 90.56 சதவீதம் பேரும் என மொத்தம் 87.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கடந்த ஆண்டு 88.02 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு 87.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பதால் இது கடந்த ஆண்டைவிட 0.89 சதவீதம் பேர் குறைவாக தேர்ச்சி அடைந்துள்ளனர். #PlusTwoExamResults #PlusTwoResults #Plus2Result
    தமிழகம் முழுவதும் பிளஸ்- 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் கணிதத்தில் 96.19 சதவீதம் மற்றும் இயற்பியல் பாடத்தில் 96.44 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் #PlusTwoExamResults #Plus2Result
    சென்னை:

    பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

    மொழிப்பாடத்தில் 8,60,434 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 8 லட்சத்து 33 ஆயிரத்து 319 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.85 ஆகும்.

    ஆங்கிலம் பாடத்தில் 8,34,370 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.97 ஆகும்.

    இயற்பியல் பாடத்தில் 96.44 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 5 லட்சத்து 44 ஆயிரத்து 553 பேர் தேர்வு எழுதினர். இதில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 163 மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றனர்.

    வேதியியல் பாடத்தில் 5 லட்சத்து 17 ஆயிரத்து 419 பேர் தேர்ச்சி பெற்றனர். 95.02 சதவீதம் தேர்ச்சியாகும்.

    உயிரியல் பாடத்தில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 325 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 10 பேர் வெற்றி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.34 ஆகும்.

    கணிதம் பாடத்தை 4 லட்சத்து 39 ஆயிரத்து 518 பேர் எழுதினார்கள். இதில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 775 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.19 ஆகும்.


    கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை 3,18,167 பேர் எழுதினார்கள். இதில் 3,05,899 பேர் வெற்றி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.14 ஆகும்.

    புவியியல் பாடத்தை 13,972 பேர் எழுதினர். இதில் 13,862 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 99.21 ஆகும். ஹோம் சயின்ஸ் பாடத்தில் 99.78 சதவீதமும், புள்ளியியல் பாடத்தில் 98.31 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர்.

    231 மாணவ-மாணவிகள் 1180 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று சாதனை புரிந்துள்ளனர். இதில் 181 மாணவிகள் அடங்குவர். மீதியுள்ள 50 பேர் மாண வர்கள்.

    1151 -1180 மதிப்பெண் வரை 4847 பேரும், 1126-1150 மார்க்வரை 8510 பேரும், 1101-1125 மதிப்பெண் வரை 11,739 பேரும் பெற்று உள்ளனர். 1001-1,100 மார்க்வரை 71,368 பேரும், 901-1000 மதிப்பெண்வரை 1 லட்சத்து 7 ஆயிரத்து 266 பேர் பெற்றுள்ளனர்.  #PlusTwoExamResults #PlusTwoResults #Plus2Result
    ×