என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bodi"
மேலசொக்கநாதபுரம்:
போடியை சேர்ந்தவர் தாகுல்சிங்(வயது59). இவர் டி.வி.கே.கே.நகர் பகுதியில் பஞ்சு கமிசன் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிச்சென்றுள்ளார். நள்ளிரவு சமயத்தில் உள்ளே புகுந்த மர்மநபர்கள் கடையின் பூட்டை உடைத்துள்ளனர். கல்லாவில் இருந்த ரூ.50,000த்தை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
மறுநாள் காலை தாகுல்சிங் கடைக்கு வந்து பார்த்தபோது பணம் கொள்ளைபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போடி டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கொள்ளைச்சம்பவங்கள் அரங்கேறி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து செயின்பறிப்பது, கடைகளை உடைத்து பணம் கொள்ளையடிப்பது தொடர் கதையாகி வருகிறது. எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தேனி:
போடி அருகே உள்ள புதுக்காலனி சுப்புராஜ்நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி வனிதா (வயது 40). இவருக்கும் உறவினராக காளியப்பன் (56) என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று துக்க வீட்டு நிகழ்ச்சியில் காளியப்பனும், வனிதாவும் கலந்து கொண்டனர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த காளியப்பன், அவரது மனைவி கச்சம்மாள், மகன்கள் மாரிமுத்து, தங்கபாண்டி ஆகியோர் வனிதாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து காளியப்பனை கைது செய்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் மணல் கடத்தல் மற்றும் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள், மாணவர்களை குறிவைத்து வியாபாரிகள் கஞ்சாவை விற்பனை செய்து வருகின்றனர்.
கஞ்சா கும்பலை போலீசார் கைது செய்தாலும் தொடர்ந்து விற்பனை அதிகரித்து உள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு போடி டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கீழத்தெரு பகுதியில் உள்ள வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பதாக போலீசாருக்கு தகவல் எட்டியது. போலீசார் அந்த வீட்டில் சோதனை போட்டனர். அப்போது அங்கு 2 கிலோ கஞ்சா பதுக்கி இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்.
வீட்டில் இருந்த முருகேசன், அவரது மனைவி சரசு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் தொடர்ந்து அந்த பகுதியில் கஞ்சா பதுக்கி விற்று வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
போடி:
கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி மற்றும் போடிமெட்டு, கம்பம்மெட்டு ஆகிய பகுதிகளில் அதிகளவு ஏலக்காய் விளைவிக்கப்படுகிறது. இந்த ஏலக்காய் தேனி மாவட்டம் போடி முந்தல் சாலையில் உள்ள இந்திய நறுமணப்பொருட்கள் வாரியத்தில் ஏலம் எடுக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இங்கு நடந்த ஏலத்தில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டு போட்டிபோட்டு ஏலக்காயை வாங்கினர்.
அதிகபட்சமாக ஒருகிலோ ரூ.2025-க்கு விற்பனையானது. நடுத்தரவகை ஏலக்காய் ஒரு கிலோ ரூ.1500 வரை விலைபோனது. தற்போது ஏலத்தோட்டங்களில் காய்கள் இல்லை. இதனால் வரத்து குறைந்துள்ளது.
மேலும் சில வியாபாரிகள் அதிகவிலை கிடைப்பதற்காக ஏலக்காய்களை பதுக்கி வைத்து விற்பனை செய்கின்றனர். இதனால் இருப்பு ஏலக்காய் வைத்து ஏலம் எடுப்பவர்கள் மட்டுமே விலை ஏற்றத்தால் பயன்படுகிறார்கள். விவசாயிகளுக்கு விலை கிடைப்பதில்லை.
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகே உள்ள செல்லாயிபுரத்தைச் சேர்ந்தவர் செல்லையா (வயது 28). மெக்கானிக்காக இருந்தார். அவரது மனைவி பாண்டீஸ்வரி.
கணவன் மனைவி 2 பேரும் சிலமலையில் உள்ள சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் காய்கறி வாங்க சென்றனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.
சங்கராபுரம் கூட்டுறவு வங்கி எதிரே வந்த போது சரவணன் என்பவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். கண் இமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் செல்லையா தனது மனைவி கண் முன்னே துடிதுடித்து இறந்தார்.
படுகாயமடைந்த சரவணன் போடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் குருநாதன். பால்வியாபாரி. இவரது வீடு அந்த பகுதியில் ஏ.டி.எம். எதிரே உள்ளது. சம்பவத்தன்று குருநாதன் தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று விட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் மாடி வழியாக ஏறினர். பின்னர் அங்குள்ள கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து அதில் இருந்த நகை, ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இன்று காலை குருநாதன் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 50 பவன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளைபோனதாக தெரிவித்தார்.
இது குறித்து போடி தாலுகா போலீசில் குருநாதன் புகார் செய்தார் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்க மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. இது வீட்டில் இருந்து சாலை ஓரம் நின்றது.
எனவே கொள்ளையர்கள் அந்த வழியாக தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டத்தில் இருந்து கேரள பகுதிக்கு அதிக அளவு ரேசன் அரிசி கடத்தப்படுகிறது. அரசு பஸ் எஸ்டேட் தொழிலாளர்கள், மோட்டார் சைக்கிள் மேலும் கழுதைகள் மூலமும் ரேசன் அரிசியை கடத்தி வருகின்றனர்.
உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது ரோந்து சென்று அரிசி கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்த போதும் ரேசன் அரிசி கடத்தல் குறையவில்லை. விற்பனையாளர்கள் மொத்தமாக வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனை ஒரு கும்பல் கேரளாவுக்கு கடத்தி வருகிறது.
இது குறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. கலெக்டர் உத்தரவுப்படி போடி தாசில்தார் ஆர்த்தி, போடி வட்ட வழங்கல் துறை அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் குழுவினர் பஸ் நிலைய பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
மூணாறு செல்லும் அரசு பஸ்சில் ஒரு நபர் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருந்தார். அதிகாரிகள் மற்றும் குழுவினரை பார்த்ததும் அந்த நபர் அரிசி மற்றும் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றார்.
அதிகாரிகள் அதனை சோதனையிட்ட போது கேரளாவுக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்த 200 கிலோ ரேசன் அரிசி என தெரிய வந்தது. ரேசன் மூட்டைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த அதிகாரிகள் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் அவற்றை ஒப்படைத்து தப்பி ஓடிய நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பெண்கள் பீதியில் உறைந்து போனார்கள்.
எனவே கொள்ளையர்களை பிடிக்கும் வகையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மாயன் அடங்கிய தனிப்படை குழு அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் இரவு பகலாக போடி நகர் மற்றும் புறநகர் பகுதியில் ரோந்து வந்தனர்.
அப்போது வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் படியாக போலீஸ் பிடியில் சிக்கினார். அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போடி நகரை கலக்கிய பிரபல கொள்ளையன் மனோஜ் என்பது தெரிய வந்தது.
போடி தேவர் காலனியைச் சேர்ந்த இவர் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியுள்ளார். இவரிடம் இருந்து 16 பவுன் நகை, ரூ.20 ஆயிரம ரொக்கப்பணம் ஆகியவை மீட்கப்பட்டது. கொள்ளையனை போலீசார் கைது செய்து போடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மூலம் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாயனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தேவர் காலனி, கிருஷ்ணாநகரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். நகர் பகுதியில் வரும் மோட்டார் சைக்கிள்களை நோட்டமிட்டனர்.
அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சந்தேகப்படும்படியாக வந்தனர். அவர்களை போலீசார் மடக்கி சோதனை போட்டனர். சோதனையில் மோட்டார் சைக்கிளில் 150 மதுப்பாட்டில்கள் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக போடி சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த கருப்பையா, சின்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ரேசன் அரிசிகளை கடத்தி கேரளாவிற்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மலைச்சாலையில் வாகனங்கள் மூலமாகவும். கூலி வேலைக்குச்செல்லும் பெண்கள் தலைச்சுமையாகவும் எடுத்துச்சென்று அரிசி கடத்தப்பட்டது.
போலீசார் மற்றும் வருவாய்த்துறையினரின் தீவிர சோதனையால் இது ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் அடிக்கடி அரிசி கடத்தல் குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
போடி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் பால் கேன்களில் அரிசி கடத்தி வருவதாக வருவாய்த்துறையினருக்கு கிடைத்த தகவலின்பேரில் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வள்ளுவர் சிலை அருகே பைக்கில் வந்த அவரை மடக்கிப்பிடித்து 8 கேன்களில் இருந்த 500 கிலோ அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் வாலிபரையும் போலீசில் ஒப்படைத்தனர்.
உத்தமபாளையம்:
போடி மற்றும் தேவாரம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஆட்கொல்லி யானை அட்டகாசம் செய்து வருகிறது. நள்ளிரவு சமயத்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் புகுந்து தாக்கியதில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர்.
எனவே மக்னா யானையை பிடித்து இடமாற்றம் செய்ய வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அதன்படி கடந்த ஜூலை மாதம் கலீம், மாரியப்பன் 2 கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டன.
இதனை தொடர்ந்து மக்னா யானை கேரளாவில் உள்ள மதிகெட்டான் கானல் பகுதிக்கு இடம் பெயர்ந்தது. ஆனால் மீண்டும் தேவாரம் வனப்பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்யத்தொடங்கியது.
தற்போது அம்பேத்கார்காலனி, மூணான்டிபட்டி ஆகிய குடியிருப்பு பகுதியில் சுற்றி வருகிறது.
எனவே மக்னா யானையை பிடிக்க சாக்கலூத்து, தாழையூத்து உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் டாப்சிலிப் காப்பகத்திலிருந்து விஜய், வாசிம் ஆகிய 2 கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டு கம்பம் வனஅலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன.
கேமிராவில் பதிவாகும் மக்னா யானையின் நடமாட்டத்தை வைத்து கும்கி யானைகள் மற்றும் சிறப்பு வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் கால்நடை மருத்துவர் குழுவினர் வனப்பகுதிக்கு சென்று மக்னா யானையை விரட்டும் பணியில் ஈடுபடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். #MagnaElephant
மேலசொக்கநாதபுரம்:
போடி பஸ்நிலையத்தில் இருந்து முந்தல் வழியாக மூணாறு பகுதிக்கு அரசு பஸ்சில் ரேசன் அரிசி கடத்துவதாக புகார் எழுந்தது.
அதனடிப்படையில் தேனி பறக்கும்படை தாசில்தார் ஜாகீர்உசேன், வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணி ஆகியோர் தலைமையில் பறக்கும்படையினர் போடி முந்தல் வாகன சோதனைச்சாவடியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக வந்த அரசு பஸ்சில் ஏறி சோதனைபோட்டனர். அப்போது 10 சிப்பம் கொண்ட 320 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் கண்டக்டர், டிரைவரிடம் விசாரணை மேற் கொண்டனர்.
அப்போது அவர்கள் இதுபற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என்றனர். எனினும் ரேசன் அரிசியை பஸ்சில் கடத்திவந்தவர் யார்? இதற்கு மூளையாகஇருப்பது யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்