search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "merchant home"

    மதுரை உத்தங்குடியில் 2 வீடுகளில் 20 பவுன் நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை உத்தங்குடியில் உள்ள வளன் நகரைச் சேர்ந்தவர் ரகுராமன். இவரது மனைவி வாசுகி (வயது 41). சம்பவத்தன்று இவர்கள் குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டனர்.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த 16 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடினர். தொடர்ந்து மர்ம நபர்கள் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை திருடிக் கொண்டு தப்பினர்.

    தொடர்ந்து அந்த கும்பல், அதே பகுதியில் உள்ள சிவகாமி (53) என்பவரின் வீட்டு முன்பு 4 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பியது.

    இது குறித்த புகாரின் பேரில் கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வீடுகளில் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    வேலூர் வியாபாரி வீட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    வேலூர்:

    வேலூர் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்தவர் ரபியுல்லா (வயது 50). வீட்டின் அருகில் பெட்டிக்கடை வைத்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் நாகூர் தர்காவுக்கு சென்றிருந்தார்.

    மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    இன்று வீடு திரும்பிய ரபியுல்லா வீட்டில் கொள்ளை நடந்தது கண்டு திடுக்கிட்டார். இதுபற்றி வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் குற்றபிரிவு இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போடியில் வியாபாரி வீட்டில் 50 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளைபோனது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் குருநாதன். பால்வியாபாரி. இவரது வீடு அந்த பகுதியில் ஏ.டி.எம். எதிரே உள்ளது. சம்பவத்தன்று குருநாதன் தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று விட்டார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் மாடி வழியாக ஏறினர். பின்னர் அங்குள்ள கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து அதில் இருந்த நகை, ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இன்று காலை குருநாதன் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 50 பவன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளைபோனதாக தெரிவித்தார்.

    இது குறித்து போடி தாலுகா போலீசில் குருநாதன் புகார் செய்தார் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்க மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. இது வீட்டில் இருந்து சாலை ஓரம் நின்றது.

    எனவே கொள்ளையர்கள் அந்த வழியாக தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வியாபாரி வீட்டுக்குள் புகுந்து 500 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை கீரைத்துறை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட காமராஜர்புரம், குமரன் குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் தங்கவேலு (வயது 74). இவர் மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் விறகுகடை நடத்தி வருகிறார்.

    இன்று அதிகாலை 4 மணிக்கு தங்கவேலு வேலை காரணமாக வெளியே சென்று விட்டார். அவரது மனைவி வீட்டை சாத்திவிட்டு நடைபயிற்சிக்கு சென்றார். தங்கவேலுவின் குடும்பத்தினர் வீட்டின் முதல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் நைசாக வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள் பீரோவை திறந்து அதில் இருந்த 500 பவுன் நகை, ரூ.8 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

    இதற்கிடையே நடைபயிற்சி முடிந்து 6 மணிக்கு வீட்டுக்கு வந்த தங்கவேலுவின் மனைவி கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்தன. மேலும் நகை, பணமும் கொள்ளை போயிருந்தது.

    இது குறித்து கீரைத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை கமி‌ஷனர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

    தடயவியல் நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகளை சேகரித்தனர். மோப்ப நாய்களும் வர வழைக்கப்பட்டன.

    காலையில் மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து தைரியமாக நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அந்தப்பகுதியில் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    ×