search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் அருகே வியாபாரி வீட்டில் நகை, பணம் கொள்ளை
    X

    வேலூர் அருகே வியாபாரி வீட்டில் நகை, பணம் கொள்ளை

    வேலூர் வியாபாரி வீட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    வேலூர்:

    வேலூர் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்தவர் ரபியுல்லா (வயது 50). வீட்டின் அருகில் பெட்டிக்கடை வைத்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் நாகூர் தர்காவுக்கு சென்றிருந்தார்.

    மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    இன்று வீடு திரும்பிய ரபியுல்லா வீட்டில் கொள்ளை நடந்தது கண்டு திடுக்கிட்டார். இதுபற்றி வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் குற்றபிரிவு இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×