என் மலர்

    செய்திகள்

    போடியில் வியாபாரி வீட்டில் 50 பவுன் நகை-பணம் கொள்ளை
    X

    போடியில் வியாபாரி வீட்டில் 50 பவுன் நகை-பணம் கொள்ளை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    போடியில் வியாபாரி வீட்டில் 50 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளைபோனது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் குருநாதன். பால்வியாபாரி. இவரது வீடு அந்த பகுதியில் ஏ.டி.எம். எதிரே உள்ளது. சம்பவத்தன்று குருநாதன் தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று விட்டார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் மாடி வழியாக ஏறினர். பின்னர் அங்குள்ள கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து அதில் இருந்த நகை, ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இன்று காலை குருநாதன் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 50 பவன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளைபோனதாக தெரிவித்தார்.

    இது குறித்து போடி தாலுகா போலீசில் குருநாதன் புகார் செய்தார் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்க மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. இது வீட்டில் இருந்து சாலை ஓரம் நின்றது.

    எனவே கொள்ளையர்கள் அந்த வழியாக தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×