என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போடியில் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற தம்பதி கைது
Byமாலை மலர்26 Feb 2019 10:59 AM GMT (Updated: 26 Feb 2019 10:59 AM GMT)
போடியில் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற தம்பதியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் மணல் கடத்தல் மற்றும் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள், மாணவர்களை குறிவைத்து வியாபாரிகள் கஞ்சாவை விற்பனை செய்து வருகின்றனர்.
கஞ்சா கும்பலை போலீசார் கைது செய்தாலும் தொடர்ந்து விற்பனை அதிகரித்து உள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு போடி டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கீழத்தெரு பகுதியில் உள்ள வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பதாக போலீசாருக்கு தகவல் எட்டியது. போலீசார் அந்த வீட்டில் சோதனை போட்டனர். அப்போது அங்கு 2 கிலோ கஞ்சா பதுக்கி இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்.
வீட்டில் இருந்த முருகேசன், அவரது மனைவி சரசு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் தொடர்ந்து அந்த பகுதியில் கஞ்சா பதுக்கி விற்று வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X