என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
வியாபாரி மீது தாக்குதல்
- புதுவை முதலியார்பேட்டை தியாகு முதலியார் நகரை சேர்ந்தவர் நாகராஜ்.
- கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் கண்பார்வை இழந்தவர்.
புதுச்சேரி:
புதுவை முதலியார்பேட்டை தியாகு முதலியார் நகரை சேர்ந்தவர் நாகராஜ். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் கண்பார்வை இழந்தவர். தற்போது அவர், சிறிய அளவில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி, மகள் உள்ளனர். கடந்த 12-ந்தேதி காலையில் இவர் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார்.
வீட்டில் மனைவி மட்டும் தனியாக இருந்தபோது, மாரியம்மன் நகரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர், நாகராஜின் மனைவிடம் தகராறு செய்து சென்றுள்ளார். இதனையடுத்து நாகராஜ், தனது மனைவியுடன் சென்று கடந்த 15-ந்தேதி தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர், அவரது தம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் தரக்குறைவாக திட்டி, கல்லால் தாக்கியதாக தெரிகிறது.
இதுகுறித்து நாகராஜ், உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஸ்ரீதர், ஸ்ரீகாந்த் ஆகிய 2 பேர் மீதும் தரக்குறைவாக திட்டி தாக்குதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்