search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vanigar sanga peramaippu"

    • நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவில் ஆனித்தோரோட்டம் விரைவில் நடைபெற உள்ளது.
    • வாகையடி முனையில் கழிவுநீர் ஓடைகள் தோண்டப்பட்டு மூடப்படாமல் உள்ளது.

    நெல்லை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் மாநில இணைச்செயலாளர் நயன்சிங், மாவட்ட கூடுதல் செயலாளர் விநாயகம், துணைத்தலைவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவில் ஆனித்தோரோட்டம் விரைவில் நடைபெற உள்ளது.

    இதையொட்டி நான்கு ரத வீதியில் சாலைகளை சீரமைக்க வேண்டும். குறிப்பாக வாகையடி முனையில் கழிவுநீர் ஓடைகள் தோண்டப்பட்டு மூடப்படாமல் உள்ள நிலையில் மாநகராட்சி சார்பில் உடனடியாக செப்பனிட்டு பொது மக்களுக்கு தேரோட்ட காலத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×