search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Exhibition"

    • சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • அரசு பொருட்காட்சி பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் வருகின்ற 12-ந்தேதி (திங்கட்கிழமை) வரை நடைபெறவுள்ளது.

    சேலம்:

    தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் அடங்கிய பொழுதுபோக்கு அம்சங்க–ளுடன் கூடிய சேலம் அரசு பொருட்காட்சி சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.

    இந்த பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, சேலம் மாநகராட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வனத்துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, காவல்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, கூட்டுற–வுத்துறை, வருவாய்துறை, சமூகநலத்துறை, தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும், தனியார் அரங்குகள் மற்றும் குழந்தைகளுக்கென அனைத்து பொழுதுபோக்கு அம்சங்கள், கலை நிகழ்ச்சிகள் ஆகியனவும் இப்பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளன. சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் 35 நாட்களாக மிகச்சிறப்பாக நடைபெற்று வரும் சேலம் அரசுப் பொருட்காட்சியினை இதுவரை பெரியவர்கள், குழந்தைகள் என மொத்தம் 1.17 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

    மாவட்டத்தில் நடை–பெற்று வருகின்ற அரசு பொருட்காட்சி பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் வருகின்ற 12-ந்தேதி (திங்கட்கிழமை) வரை நடைபெறவுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் பொருட்காட்சிக்கு அனைவரும் வருகைதந்து பார்த்து பயனடைய வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • நெல்லை மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் அரசு பொருட்காட்சி கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக நடத்தப்படவில்லை.
    • தொடக்க விழா நிகழ்ச்சி மாநகராட்சி திடல் அருகில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடத்தப்ப டும் அரசு பொருட்காட்சி கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக நடத்தப்படவில்லை.

    இந்நிலையில் இந்த ஆண்டு அரசு பொருட் காட்சி வ.உ.சிதம்ப ரனார் மணி மண்டபத்தின் அருகே நாளை நாளை (செவ்வாய்க் கிழமை) தொடங்குகிறது.

    தொடக்க விழா நிகழ்ச்சி மாநகராட்சி திடல் அருகில் உள்ள அண்ணா கலையரங் கத்தில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

    சபாநாயகர் அப்பாவு பொருட்காட்சியை தொடங்கி வைக்கிறார். விழாவில் செய்தித்துறை அமைச்சர்கள் சாமிநாதன், ராஜகண்ணப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். விழாவில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு வரவேற்று பேசுகிறார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ெஜயசீலன், மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மேயர், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

    பொருட்காட்சியில் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்படுகிறது.

    அரசு பொருட்காட்சி தினசரி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். அரசுத்துறை அரங்குகளில் தமிழக அரசின் சாதனைகளை பற்றியும், அரசின் நலத்திட்ட உதவிகளை எப்படி பெறுவது என்பது பற்றியும் துறை அலுவலர்கள் பொது மக்களுக்கு விளக்கம் அளிப்பார்கள்.

    பொதுமக்களின் வசதிக்காக நாளை முதல் நிறைவு நாள் வரை தினமும் மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து கழகத்தின் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த, பொருட்காட்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர் கள் வரை கண்டுகளித்திடும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள், ராட்டினங்கள் உள்ளன. பெண்களுக்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்களின் அரங்குகள் மற்றும் சிற்றுண்டிகள் உள்ளன. 

    • கோவையில் நாளை தொடங்குகிறது
    • நிகழ்ச்சியில் எம்.பி, எம்.எல்.ஏ.க்க ள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

    கோவை,

    கோவை செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் கோவை மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்கும் வகையிலான அனைத்து துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறும்வகையில் அரசு பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது.

    அதன்படி, இந்த ஆண்டும் நாளை (11-ந் தேதி) சனிக்கிழமை அமைச்சர் செந்தில்பாலாஜி, செய்தித்துறை அமைச்சர்மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் எம்.பி, எம்.எல்.ஏ.க்க ள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

    இப்பொருட்காட்சியில் செய்தி - மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, கூட்டுறவுத்துறை உள்பட 27 அரசுத் துறைகளுக்கு தங்கள் துறையின் மூலம் செயல்படுத் தப்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வண்ணம் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    மேலும், அனைத்து அரசு துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொது மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும், தங்கள் துறையால் மேற்கொ ள்ளப்பட்ட சாதனைகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்களை காட்சி ப்படுத்தும் வகையிலும் சிறப்பாக அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இப்பணிகளை கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும், பொழுதுபோக்கு அம்சத்துடன் தொடங்க ப்பட உள்ள அரசு பொரு ட்காட்சியில் பொது மக்கள் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை அறிந்து க்கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொண்டார்.

    புதுக்கோட்டையில் அரசு பொருட்காட்சி நடைபெறவுள்ள தற்காலிக பேருந்து நிலைய மைதானத்தில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை தற்காலிக பேருந்து நிலைய மைதானத்தில் வருகிற 10ந்தேதி அன்று செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய அரசுப் பொருட்காட்சி 45 நாட்கள் நடைபெறவுள்ளது.

    இந்த அரசு பொருட்காட்சியில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் சாதனைகள் தொடர்பாக பல்வேறு அரசுத்துறைகளின் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படுவதுடன், அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய மாபெரும் பொருட்காட்சி நடைபெறவுள்ளது.

    இந்தநிலையில் பொருட்காட்சி நடைபெறவுள்ள தற்காலிக பேருந்து நிலைய மைதானத்தில் நடைபெற்று வரும் மேற்கூரை அமைத்தல், அரங்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் மேற்கொள்ள வேண்டிய பணிகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்த தகவல்களை கேட்டறிந்ததுடன், அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட கால அளவிற்குள் முடித்து அரசுப் பொருட்காட்சி சிறப்பாக நடைபெற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர் பி.கே.வைரமுத்து, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம், மத்திய தொலை தொடர்பு ஆலோசனை குழு உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×