search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "150 people arrested"

    • விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ள சாராயம் மற்றும் போலி மது குடித்து 13-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • போலி மது விற்பவர்களையும் ் பிடிக்க தமிழக டி.ஜி.பி சைலேரேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

    சேலம்:

    விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ள சாராயம் மற்றும் போலி மது குடித்து 13-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இதையடுத்து தமிழக முழுவதும் சாராயம் விற்பவர்களையும், போலி மது விற்பவர்களையும் ் பிடிக்க தமிழக டி.ஜி.பி சைலேரேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

    இதனை தொடர்ந்து இன்று தமிழக முழுவதும் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள் .

    இந்த நிலையில் சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் சேலம் புறநகர் பகுதியில் சாராயம் மற்றும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து மற்ற வகையில் 100 பேரும், மாநகரில் மது பாட்டில்களை வாங்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ற 50 பேரும் என 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    தொடர்ந்து சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சோதனை இனி வரும் நாட்களிலும் தொடரும் என போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஊழியர்கள் 10 ஆண்டுகளாக வேலைபார்த்து வருகின்றனர். அவர்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்கவேண்டும். ,
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் 10 ஆண்டுகளாக வேலைபார்த்து வருகின்றனர். அவர்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்கவேண்டும். பணிநிரந்தரம் செய்து, வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்டனர்

    .அதேபோன்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத்தலைவர் அம்பிகாபதி தலைமையில் ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பெருமாள், முத்துக்குமரன், மைக்கேல், வீரமுத்து, ஜெயபாலன், கார்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஒப்பந்த தொழி லாளர்களை சாலை மறியலில் ஈடுபடவேண்டாம் என்று வலியுறுத்தினார். ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மறியலில் ஈடுபட்ட 150 பேரை கைது செய்து விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் அடைத்தனர். இதனால் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நீலகிரி மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஊட்டி:

    நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் சென்றார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கருப்புக்கொடி போராட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அந்த போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் சென்னை கவர்னர் மாளிகை முன்பு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

    சென்னையில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில் ஊட்டி காபிஹவுஸ் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதிகள் ராஜா, ருத்ரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கைது செய்யப்பட்ட தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியினரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 37 பேரை ஊட்டி நகர மத்திய போலீசார் கைது செய்தனர்.

    கூடலூர் பழைய பஸ்நிலையத்தில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசுக்கு எதிராகவும், மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதனைதொடர்ந்து தி.மு.க. நகர செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் லியாகத் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ், முருகையா, சின்னவர், சுப்பிர மணியம் உள்பட 31 தி.மு.க.வினரை இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் பந்தலூர் பஜாரில் தி.மு.க.வினர் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி, நெல்லியாளம் நகர கழக செயலாளர் காசிலிங்கம், நெல்லியாளம் முன்னாள் நகர மன்ற தலைவர் அமிர்தலிங்கம், வக்கீல் சிவசுப்பிரமணி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சேகர், நகர பொருளாளர் தென்னரசு, எல்.பி.எப். துணை பொதுசெயலாளர் மாடசாமி உள்ளிட்ட 35 பேரை கைது செய்தனர்.

    கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் ஒன்றிய பொறுப்பாளர் நெல்லை கண்ணன், முன்னாள் அமைச்சர் இளித்தொரை கா.ராமசந்திரன் தலைமையில் கோத்தகிரி மற்றும் கீழ்கோத்தகிரி ஒன்றிய தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட 47 பேரை கைது செய்தனர். 
    ×