search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் மாதர் சங்கத்தினர் திடீர் சாலை மறியல்
    X

    தஞ்சை ரெயிலடியில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    தஞ்சையில் மாதர் சங்கத்தினர் திடீர் சாலை மறியல்

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாதர் சங்க நிர்வாகிகள் சென்னைக்கு புறப்பட தயாராகினர்.
    • ரெயிலடியில் இன்று மதியம் மாதர் சங்க நிர்வாகிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை டி.ஜி.பி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக மாதர் சங்கத்தினர் அறிவித்தி ருந்தனர்.

    இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாதர் சங்க நிர்வாகிகள் சென்னைக்கு புறப்பட தயாராகினர். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான மாதர் சங்க நிர்வாகி களை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தை கண்டித்து தஞ்சை ரெயிலடியில் இன்று மதியம் மாதர் சங்க நிர்வாகிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட மாதர் சங்க நிர்வாகிகளை உடனடியாக விடுவிக்க கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து மறியலில் 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×