search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாம்பவர்வடகரையில்  மோட்டார் சைக்கிள்  விபத்தில் வாலிபர் பலி
    X

    சாம்பவர்வடகரையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

    • மேலப்பாட்டாக்குறிச்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் கனகராஜ் படித்து முடித்துவிட்டு தந்தையுடன் விவசாயம் செய்து வருகிறார்
    • கடையநல்லூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்

    சாம்பவர்வடகரை:

    சாம்பவர்வடகரை அருகே உள்ள மேலப்பாட்டாக்குறிச்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் அழகு(வயது 45). இவரது மகன் கனகராஜ்(22). இவர் படித்து முடித்துவிட்டு தந்தையுடன் விவசாயம் செய்து வருகிறார்.

    நேற்று இரவு கனகராஜ் கடையநல்லூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். கம்புளி சாலையில் வந்து கொண்டிந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் வயலுக்கு போடப்பட்டு இருந்த வேலிக்கான கல்லில் மோதியது.

    இந்த விபத்தில் கனகராஜின் தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். தகவல் அறிந்த சாம்பவர் வடகரை போலீசார் அங்கு விரைந்து சென்று உயிரிழந்த கனகராஜ் உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×