search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிக்கன் பிரியாணி சாப்பிட்ட வாலிபர் திடீர் மரணம்- போலீசார் விசாரணை
    X

    சிக்கன் பிரியாணி சாப்பிட்ட வாலிபர் திடீர் மரணம்- போலீசார் விசாரணை

    • அருண்குமார் தனது அறையில் நண்பர்களுடன் சிக்கன் பிரியாணி உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது.
    • மூச்சு திணறல் ஏற்பட்டு நெஞ்சு வலிப்பதாக அருண்குமார் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த லக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தீர்த்தகிரி.

    இவரது மகன் அருண்குமார் (வயது24). இவர் தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை பகுதியில் தங்கி இருந்து அங்குள்ள பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

    நேற்று அருண்குமார் தனது அறையில் நண்பர்களுடன் சிக்கன் பிரியாணி உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது.

    பின்னர் மூச்சு திணறல் ஏற்பட்டு நெஞ்சு வலிப்பதாக அவர் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.

    உடனடியாக அவரை நண்பர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பிரியாணி சாப்பிட்டவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×