மயிலம் அருகே இடி தாக்கியதில் எரிந்து கருகிய மோட்டார் சைக்கிள்

பெரம்பண்டூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஏழுமலை என்பவரது மாட்டு கொட்டகையில் இடி விழுந்தது.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலம் அடுத்த பெரமண்டூரில் இடி தாக்கியதில் முற்றிலும் எரிந்து கருகிய மோட்டார் சைக்கிளை படத்தில் காணலாம்.
மயிலம் அடுத்த பெரமண்டூரில் இடி தாக்கியதில் முற்றிலும் எரிந்து கருகிய மோட்டார் சைக்கிளை படத்தில் காணலாம்.
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மயிலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதில் மயிலம் அடுத்த பெரம்பண்டூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஏழுமலை என்பவரது மாட்டு கொட்டகையில் இடி விழுந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் முற்றிலும் தீயில் கருகி சாம்பலானது.

மேலும் அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த கால் நடைகளுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துறை சார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com