என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
- மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக போலீசாருக்கு மர்ம நபர் போனில் தகவல் தெரிவித்தார்.
- கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது.
இந்த மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக போலீசாருக்கு மர்ம நபர் போனில் தகவல் தெரிவித்தார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த தகவல் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அவரது உத்தரவின் பேரில் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






