என் மலர்

    நீங்கள் தேடியது "passengers injured"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ் ஒன்று பழுதாகி சாலையில் நின்றது.
    • பின்னால் வந்த அரசு விரைவு பஸ்சும், மற்றொரு ஆம்னி பஸ்சும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் வந்த 2 பயணிகள் காயம் அடைந்தனர்.

    விழுப்புரம்: 

    திண்டிவனம் பைபாஸ் சாலை, நத்தைமேடு என்ற இடத்தில் விழுப்புரதில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ் ஒன்று பழுதாகி சாலையில் நின்றது. அப்போது அதன் பின்னால் வந்த அரசு விரைவு பஸ்சும், மற்றொரு ஆம்னி பஸ்சும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் வந்த 2 பயணிகள் காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் போலீசார், காயமடைந்த பொள்ளாச்சியை சேர்ந்த கேமாவதி (வயது 30), சென்னையை சேர்ந்த ரேவதி (23) ஆகியோரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செஞ்சியில் பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • தனியார் பஸ் கர்நாடகா பஸ் மீது மோதி இடது பக்கம் திரும்பி அருகில் உள்ள போர்வெல் கடை மீது மோதி நின்றது.

    விழுப்புரம்:

    புதுவையில் இருந்து பெங்களூருக்கு நேற்று இரவு கர்நாடகா அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அதேபோல் திருவண்ணாமலை யிலிருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பஸ் ஒன்று செஞ்சி வழியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த 2 பஸ்களும் செஞ்சிநகரம் திண்டிவனம் சாலையில் பி.எஸ்என்.எல்அலுவலகம் எதிரே வரும்போது ஒன்றுக்கு ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் தனியார் பஸ் கர்நாடகா பஸ் மீது மோதி இடது பக்கம் திரும்பி அருகில் உள்ள போர்வெல் கடை மீது மோதி நின்றது. இதனால் கடையின் முன் பகுதி சேதம் அடைந்தது.

    இந்த விபத்தில் 2 பஸ்களில் பயணம் செய்த நரசிங்கராயன் பேட்டையை சேர்ந்த கலீல் அகமத் (வயது 25) பெங்களூர் கர்நாடகா பஸ் டிரைவர் ஓம் சரவணபவன் (51), திருவண்ணாமலையை சேர்ந்த சுரேஷ் (32) தேவனூரை சேர்ந்த கங்காதரன் (22), விஜி, அர்ஜுனன், ராஜேஷ் குமார், சசிகாந்தன் அயோத்தி உத்திரகுமார், கெங்கைஅம்மாள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக செஞ்சி , முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து செஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருத்துறைப்பூண்டி அருகே 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பயணிகள் 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியிலிருந்து செம்போடை நோக்கி ஒரு தனியார் பேருந்தும், இதேபோல வேதாரண்யத்தில் இருந்து திருத்துறைப்பூண்டியை நோக்கி தனியார் பேருந்தும் வந்து கொண்டிருந்தது. 2 பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. கட்டிமேடு அருகே உள்ள தேவர் பண்ணை என்ற இடத்தில் வந்த போது 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் பஸ் டிரைவர் பாண்டியன்( வயது 42), காடுவாகுடியை சேர்ந்த பாலகவுரி(40), வாட்டாரை சேர்ந்த சத்யா(40), வெள்ளிகிடங்கு பகுதியை சேர்ந்த ருக்மணி(30) உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் குணா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே 15 அடி பள்ளத்தில் ஆம்னி பஸ் கவிழ்ந்த விபத்தில் 20 பயணிகள் படுகாயமடைந்தனர்.
    உளுந்தூர்பேட்டை:

    மதுரையில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் ஒன்று சென்றது. இதில் மொத்தம் 36 பயணிகள் இருந்தனர்.

    இந்த பஸ் நள்ளிரவு 1 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே புறவழிச்சாலை திருச்சி- சென்னை மேம்பாலத்தை கடந்து சென்றது. அப்போது திடீரென்று டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பஸ் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் உள்ளே இருந்த பயணிகள் கூச்சல்போட்டு அலறினர். இந்த விபத்தில் பஸ்சில் இருந்த மதுரையை சேர்ந்த பிரபாகரன்(45), முத்துக்குமார்(50), சென்னையை சேர்ந்த கிருத்திகா(24), லட்சுமி பிரியா(23), பாலுசாமி(52), நெல்லையை சேர்ந்த கணேசமூர்த்தி(52) உள்பட 20 பேர் இடிபாடுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உளுந்தூர் பேட்டை போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×