என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆம்னி பஸ்சில் கொண்டுவரப்பட்ட ரூ. 40 லட்சம் பணம் பறிமுதல்- ஹவாலா பணமா?
- சோதனை சாவடியில் பஸ்சை நிறுத்தி போலீசார் அதிரடி சோதனையில் மேற்கொண்டனர்.
- ஹவாலா பணமா அல்லது கணக்கில் வராத கருப்பு பணமா? என போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் போலீசார் சோதனை பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு செல்லக்கூடிய ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது. சோதனை சாவடியில் பஸ்சை நிறுத்தி போலீசார் அதிரடி சோதனையில் மேற்கொண்டனர்.
அப்போது வாலிபர் ஒருவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் பண்டல் பண்டலாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பண்டல்களை பிரித்து சோதனை செய்தனர்.
இதில் கட்டு கட்டாக பணம் இருந்தது. இதனை தொடர்ந்து போலீசார் உடனடியாக அந்த வாலிபரையும் பண்டல்களையும் பறிமுதல் செய்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து கடலூர் புதுநகர் போலீசார் அந்த வாலிபரை விசாரித்தனர். அப்போது அவரது பெயர் நவீன் அன்வர்(வயது 30) என்பது தெரிய வந்தது. அவர் வைத்திருந்த பையில் ரூ.40 லட்ச ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது ஹவாலா பணமா அல்லது கணக்கில் வராத கருப்பு பணமா? என போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது குறித்து வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் வருமான வரித்துறையினர் நேரில் வந்து சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
இந்த சம்பவத்தால் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது






