search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman attack"

    • பொதுக்குழாய் தண்ணீரை வீணாக்க வேண்டாம் என அறிவுறுத்திய பெண்ணை கிரிக்கெட் மட்டையால் அடித்து, உதைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • பானுப்பிரியா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அனு, பிரியதர்ஷினி மற்றும் ஷாலினி உள்பட 13 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு ஸ்ரீராமபுரா அருகே உள்ள நாராயண் ராவ் காலனியை சேர்ந்தவர் பானுப்பிரியா (30).

    இவர் சம்பவத்தன்று அங்குள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவரது பக்கத்து வீட்டுக்காரர்களான அனு, பிரியதர்ஷினி மற்றும் ஷாலினி ஆகிய 3 பேர் தண்ணீரை வீணடிப்பதை பானுப்பிரியா பார்த்துள்ளார்.

    இதையடுத்து குழாய் தண்ணீரை வீணாக்க வேண்டாம் என அறிவுரை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அனு உள்ளிட்ட 3 பேரும் எங்களுக்கு அறிவுரை கூற நீ யார்? என்று கூறி பானுப்பிரியாவை தாக்கினர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானப்படுத்தினர்.

    இருப்பினும் ஆத்திரம் அடங்காத அந்த 3 பெண்களும் மேலும் 10 ஆண்களுடன் சம்பவத்தன்று இரவு 9.30 மணியளவில் பானுப்பிரியா வீட்டிற்கு சென்றனர். அங்கு பானுப்பிரியா மட்டும் தனியாக இருந்துள்ளார்.

    இதையடுத்து அந்த கும்பல் பானுப்பிரியாவை வீட்டிற்கு வெளியே அழைத்து வந்து சாலையில் தள்ளி கிரிக்கெட் மட்டை உள்ளிட்டவற்றால் சரமாரியாக தாக்கினர். மேலும் அவரது வயிற்றில் பலமுறை எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது.

    இதில் பானுப்பிரியா பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக பானுப்பிரியா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அனு, பிரியதர்ஷினி மற்றும் ஷாலினி உள்பட 13 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    பொதுக்குழாய் தண்ணீரை வீணாக்க வேண்டாம் என அறிவுறுத்திய பெண்ணை கிரிக்கெட் மட்டையால் அடித்து, உதைத்து தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சப்-இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வனுக்கும், பணகுடி பகுதியில் வசிக்கும் ஒரு 44 வயது பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளாக பழக்கம் இருந்து வருகிறது.
    • சப்-இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வன் மீது ஏற்கனவே ஒரு வழக்கு உள்ளது.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் பணகுடி கோரி காலனியை சேர்ந்தவர் சித்திரை செல்வன்(வயது 36). இவர் குமரி மாவட்டம் நாகர்கோவிலில் கைரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் இவர் மீது பணகுடி போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரு பெண் புகார் அளித்தார். அதில் சித்திரை செல்வன் தனக்கு பணம் தராமல் ஏமாற்றியதோடு தன்னை தாக்கியதாக தெரிவித்திருந்தார். தொடர்ந்து அவர் புகார் மனு அளித்துவிட்டு வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.

    இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:-

    சப்-இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வனுக்கும், பணகுடி பகுதியில் வசிக்கும் ஒரு 44 வயது பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளாக பழக்கம் இருந்து வருகிறது. இதனால் அந்த பெண் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அந்த பெண்ணுடன் சித்திரை செல்வன் அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாகவும், அவருக்கு ஆடம்பர செலவுக்காக பணம் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டதால், அந்த பெண் மீண்டும் தனது கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் சித்திரை செல்வன் தன்னை ஏமாற்றி பணம் பறித்து விட்டதாகவும், அதனை திருப்பி தருமாறும் அந்த பெண் அவரிடம் அடிக்கடி கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த சித்திரை செல்வன், நேற்று அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி காரில் அழைத்து சென்றுள்ளார். பின்னர் அந்த பெண்ணை காட்டுப்பகுதியில் வைத்து தாக்கி, பணம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என அவதூறாக பேசி மீண்டும் பணகுடியில் இறக்கி விட்டுள்ளார்.

    இதில் காயம் அடைந்த அந்த பெண் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து பணகுடி போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் 294(பி), 323 ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வன் மீது ஏற்கனவே ஒரு வழக்கு உள்ளது. திருச்சியில் விபத்தில் இறந்த அவர்களது பேட்ஜ் போலீஸ்காரர் ஒருவரின் குடும்பத்திற்கு வழங்குவதற்காக நண்பர்களிடம் பிரித்த ரூ.28 லட்சம் பணத்தை அவர் வழங்காமல் மோசடி செய்ததாக புகார் வந்தது. அதன்பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    • சம்பவத்தன்று அசோக் செல்போன் மூலம் லட்சுமியை தொடர்பு கொண்டு அரசு வேலைக்காக ரூ.5 லட்சம் வைத்துள்ளேன்.
    • விடுதி அறையில் பெண்ணை அடைத்து அடித்து உதைத்து சித்ரவதை செய்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே நாச்சியார்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி லட்சுமி (வயது45). இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    கடந்த 3 மாதத்துக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு மணி இறந்து போனார். இதனால் லட்சுமி விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் மனு எழுதி கொடுக்கும் வேலை செய்து வருகிறார்.

    இதற்கிடையே நெய்வேலியை சேர்ந்த பிரபாகரன் மூலம் புதுவையை சேர்ந்த அசோக் என்பவர் லட்சுமிக்கு அறிமுகமானார். அப்போது அசோக் தனக்கு அரசு வேலை வாங்கி தர ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டதால் லட்சுமி ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து ரூ.35 ஆயிரம் பெற்றார்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று அசோக் செல்போன் மூலம் லட்சுமியை தொடர்பு கொண்டு அரசு வேலைக்காக ரூ.5 லட்சம் வைத்துள்ளேன். அந்த பணத்தை புதுவைக்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறு அழைத்தார். அதன்படி லட்சுமி அன்று இரவு புதுவைக்கு வந்தார்.

    அப்போது திருவள்ளுவர் சாலையில் உள்ள தனியார் விடுதிக்கு லட்சுமியை அசோக் அழைத்து சென்றார். அதனை நம்பி லட்சுமி விடுதி அறைக்கு சென்ற போது அங்கிருந்த அசோக்கின் நண்பர்கள் பிரபாகரன், சூர்யா, முருகன், சொர்ணராஜ் மற்றும் புவனேஸ் ஆகியோர் கொண்ட கும்பல் விடுதியை பூட்டிக்கொண்டு அசோக் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு மிரட்டினர்.

    மேலும் அவர்கள் கையில் வைத்திருந்த தடியால் லட்சுமியை அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். அதோடு பணத்தை திருப்பி கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். தொடர்ந்து 4 நாட்கள் அவர்கள் இதுபோல் விடுதி அறையில் அடைத்து வைத்து லட்சுமியை சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    ஒருவேளையாக அந்த கும்பல் அசந்து இருந்த நேரத்தில் அவர்களிடமிருந்து தப்பிய லட்சுமி இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • படுகாயமடைந்த பெண்ணை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • படுகாயமடைந்த பெண்ணை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் தவசிகனி, தொழிலாளி.

    இவரிடம் அப்பகுதியில் உள்ள பீடி கடை ஒன்றில் வேலை பார்க்கும் விதவை பெண் ஒருவர் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார்.

    சம்பவத்தன்று அந்த பெண் தான் வாங்கிய கடன் தொகையை தவசிக்கனியிடம் திருப்பிக் கொடுத்துள்ளார். அப்போது அவர், கடன் தொகையை தர வேண்டாம், எனது ஆசைக்கு இணங்கினால் போதும் என கூறி உள்ளார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் அவரை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த தவசிக்கனி நேற்று மாலை அந்த பெண்ணை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்.

    படுகாயமடைந்த பெண்ணை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்த புகாரின்பேரில் களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தவசிக்கனியை தேடி வருகின்றனர்.

    • நேற்று முருகனின் மனைவி சரிதா வீட்டின் முன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
    • படுகாயம் அடைந்த சரிதா இது குறித்து திருநாவலூர் போலீசில் புகார் தெரிவித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கோட்டியாம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 45) விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி அலமேலு. இவர்களுக்கும் அருகிலுள்ள முருகன் வீட்டாருக்கும் இடையே முன்னதாகவே இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முருகனின் மனைவி சரிதா வீட்டின் முன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது குப்புசாமியின் மனைவி அலமேலு வந்து ஏன் என் வீட்டின் முன் வேலை செய்கிறாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதனால் சரிதா மற்றும் அலமேலுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவருக்கொருவர் தகாத வார்த்தையால் திட்டிக் கொண்டனர்.

    அப்போது அங்கு வந்த குப்புசாமி மனைவி அலமேலுடன் முருகனின் மனைவி சரிதாவை தகாத வார்த்தையால் திட்டி அடித்து உதைத்து கீழே தள்ளினார். இதில் படுகாயம் அடைந்த சரிதா இது குறித்து திருநாவலூர் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை வழக்கு பதிவு செய்து குப்புசாமி கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலை மறைவாக உள்ள அலமேலுவை வலைவீசி தேடி வருகின்றனர். 

    • ரோகினி வசந்தி கணவர் கார்த்திகேயனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று 2 பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
    • திருவள்ளூர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்றபோது மாதம் தோறும் ரோகினி வசந்திக்கு அவரது கணவர் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரோகினி வசந்தி (வயது 40). திருவள்ளூர் ராஜாஜி புரத்தில் தையல் கடை வைத்து உள்ளார்.

    இவர் கணவர் கார்த்திகேயனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று 2 பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

    திருவள்ளூர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்றபோது மாதம் தோறும் ரோகினி வசந்திக்கு அவரது கணவர் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து கார்த்திகேயன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளார்.

    இதன் காரணமாக கார்த்திகேயன் குடும்பத்தினர் மற்றும் ரோகினி வசந்தி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் ரோகிணி வசந்தி தனது தையல் கடையில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் கடைக்குள் புகுந்து ரோகிணி வசந்தியிடம் தகராறில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரோகிணி வசந்தியை சரமாரியாக வெட்டினர்.

    இதனை தடுக்க முயன்ற கடை ஊழியர் பாபு என்பவரையும் அவர்கள் மிரட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயமடைந்த ரோகிணி வசந்தி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை முயற்சிக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தஞ்சை அருகே முன் விரோத தகராறில் வீடு புகுந்து பெண்ணை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த குருங்குளம் மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 33). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பாலன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் பாலன் அடியாட்களுடன் வல்லத்தில் வசிக்கும் ராஜாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு ராஜாவின் சகோதரி சந்திரா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இதையடுத்து பாலன் தரப்பினர் சந்திராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதையடுத்து ஆத்திரமடைந்த பாலன் உள்ளிட்ட 5 பேரும் சேர்ந்து சந்திராவை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரது வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

    இந்த தாக்குதலில் சந்திரா பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் சந்திராவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராஜா வல்லம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பாலன், விஜயா, குமார் , குப்பன் மற்றும் சிங்கா ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீமுஷ்ணத்தில் இன்று அதிகாலை வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் நகர் செங்குந்தர் தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 58). இவர் பிளாஸ்டிக் பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயக்கொடி (45). இன்று அதிகாலை 5 மணி அளவில் மனோகரன் எழுந்து வீட்டின் கதவை பூட்டாமல் அருகில் உள்ள டீ கடைக்கு டீ குடிக்க சென்றார். வீட்டில் ஜெயக்கொடி அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். இந்த நிலையில் முகமூடி அணிந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென்று மனோகரின் வீட்டுக்குள் புகுந்தார்.

    பின்னர் அவர் அங்கு தூங்கி கொண்டிருந்த ஜெயக்கொடியின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றார். அப்போது திடுக்கிட்டு எழுந்த ஜெயக்கொடி அதிர்ச்சியடைந்து கூச்சல்போட முயன்றார்.

    இதனால் ஆத்திரமடைந்த மர்ம வாலிபர் கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை ஜெயக்கொடியின் முகத்திலும், வீட்டிலும் தூவினான். பின்பு அவர் கழுத்தில் கிடந்த நகையை பிடித்து இழுத்தான்.

    இதில் பாதி சங்கிலி ஜெயக்கொடி கையிலும், பாதி நகை மர்ம வாலிபர் கையிலும் சிக்கியது. பின்பு அவன் அங்கிருந்து தப்ப முயன்றான். ஆனால் ஜெயக்கொடி அவன் தப்பி ஓடி விடாமல் இருக்க அவனது 2 கால்களையும் பிடித்துக் கொண்டார்.

    இதனைத்தொடர்ந்து மர்ம வாலிபர் ஜெயக்கொடியின் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்து தாக்கினான். தாக்குதலில் காயமடைந்த ஜெயக்கொடி மயங்கிவிழுந்தார். அதன் பின்பு கொள்ளையன் பறித்த 6 பவுன் நகையுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

    டீ குடிக்க சென்ற மனோகரன் சிறிதுநேரம் கழித்து வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடப்பதையும், மனைவி ஜெயக்கொடி மயங்கி கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்பு அவரது முகத்தில் தண்ணீர் தெளித்தார். அதன்பின்பு எழுந்த ஜெயக்கொடி கொள்ளையன் வீட்டுக்குள் புகுந்து தன்னை தாக்கி தாலிசங்கிலியை பறித்து சென்றுவிட்டதாக கண்ணீர் மல்க கூறினார்.

    இதுகுறித்து மனோகரன் ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து பெண்ணை தாக்கி கொள்ளையடித்து சென்ற மர்ம வாலிபரை தேடி வருகின்றனர்.

    கொள்ளையன் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஜெயக்கொடி ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பெரியகுளம் அருகே இடப்பிரச்சினையில் பெண்ணை தாக்கிய தம்பதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    பெரியகுளம் அருகே உள்ள சருக்குபட்டி முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கமுத்து. இவரது மனைவி பாப்பா (வயது 48). தங்கமுத்துவுக்கும் அவரது தம்பி அன்னக்கொடி (42) என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.

    கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தங்கமுத்து இறந்து விட்டார். அதன் பிறகும் அன்னக்கொடியும், அவரது மனைவி கலா ஆகிய இருவரும் பாப்பாவிடம் தகராறு செய்து வந்தனர்.

    சம்பவத்தன்று பாப்பாவை அன்னக்கொடியும், அவரது மனைவியும் தரக்குறைவாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயமடைந்த அவர் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து அன்னக்கொடியை கைது செய்தனர்.

    ஈரோடு அருகே அழகு நிலையம் நடத்தும் பெண்ணை கட்டி போட்டு 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு அடுத்த நொச்சிக்காட்டு வலசு, பிரியா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜாபர்பாபு (வயது48). இவர் சங்ககிரி பகுதியில் தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி பெயர் ஜெசிமாபேகம்(45). ஈரோட்டில் பெண்கள் அழகு நிலையம் நடத்தி வருகிறார். வழக்கம் போல் ஜாபர்பாபு தொழிற்சாலைக்கு சென்று விட்டார். ஜெசிமாபேகம் அழகு நிலையம் சென்று விட்டார்.

    இரவு 8.30 மணியளவில் அழகு நிலையத்திலிருந்து வீட்டுக்கு திரும்பிய ஜெசிமாபேகம் பின்னால் அவருக்கு தெரியாமல் 8 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

    ஜெசிமாபேகம் கதவை திறந்து உள்ளே சென்ற போது அவரது பின்னாலேயே 8 பேர் கொண்ட கும்பலும் உள்ளே புகுந்தது. அந்த 8 ஆசாமிகளும் முகமூடி அணிந்திருந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெசிமாபேகத்தை அந்த ஆசாமிகள் கத்தியை காட்டி மிரட்டினார்கள். பிறகு கை, கால்களையும் கட்டினர்.

    பிறகு அவர் அணிந்திருந்த நகைகள் மேலும் பீரோவில் இருந்த நகைகள் என மொத்தம் 40 பவுன் நகைகளை அந்த ஆசாமிகள் கொள்ளையடித்தனர். மேலும் வீட்டில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தையும் கொள்ளையர்கள் மிரட்டி பறித்து கொண்டனர்.

    தங்கள் காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொண்ட கொள்ளையர்கள் பிறகு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    கொள்ளையர்கள் சென்றதும் ஜெசிமாபேகத்தின் சத்தத்தை கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டுக்கு வந்து ஜெசிமாபேகத்தின் கை-கால்களில் கட்டப்பட்டிருந்த கட்டுகளை அவிழ்த்து விட்டனர். பிறகு அவர் ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமிராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கொள்ளையர்களை பிடிக்க உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு அவர்கள் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    சினிமா பாணியில் நடந்துள்ள இந்த கொள்ளை சம்பவம் ஈரோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கண்ணகி நகரில் பெண்ணை வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழிங்கநல்லூர்:

    சென்னை சோழிங்கநல்லூரை அடுத்த கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ஒரு வழக்கில் 3 மாதங்களா புழல் சிறையில் இருந்தார். தன் மனைவி ஜெயிலில் வந்து பார்க்காததால் அவரது நடத்தையில் சந்தேகப்பட்டார்.

    ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர் தனது நண்பர்களுடன் தனது மனைவியை வெட்டி கொலை செய்ய முயன்றார். திருவான்மியூர் போலீசார் விரைந்து வந்து சரண்யாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இது தொடர்பாக திரு வான்மியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திசென்னை கண்ணகி நகரை சேர்ந்த பிரபு, விக்கி, ஆட்டோ டிரைவர் விமல், சென்னை பெரியார் நகரை சேர்ந்த பார்த்தசாரதி ஆகிய 4 பேரை கைது செய்தனர். ராஜேஸ் உல்பட 2 பேரை தேடி வருகின்றனர்.


    சொத்து தகராறில் பெண் மீது தாக்குதல் நடத்திய தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.

    சங்கரன்கோவில்:

    பனவடலிசத்திரம் அருகே உள்ள கற்படத்தை சேர்ந்தவர் வெயிலுமுத்து மனைவி அங்கயற்கண்ணி (வயது 35). இதே ஊரை சேர்ந்த இவரின் தாய்மாமா ராஜேந்திரன் (49). ராஜேந்திரனிடம் கடந்த 20 வருடத்திற்கு முன்பு அங்கயற்கண்ணியின் தாயார் 45ஆயிரம் ரூபாய் கொடுத்து தற்போது குடியிருந்து வரும் வீட்டை வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இருவரும் உறவினர்கள் என்பதால் நம்பிக்கையின் பேரில் பத்திரம் எழுதி வாங்க வில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் அங்கயற்கண்ணியிடம், ராஜேந்திரன் வீட்டை காலி செய்ய வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு அங்கயற்கண்ணி நான் தான் வீட்டை விலைக்கு வாங்கி விட்டேனே என கூறி மறுத்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டு உள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த அங்கயற்கண்ணியை அங்கு வந்த ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் கற்பகபாண்டியன் (25) ஆகியோர் சேர்ந்து வீட்டை காலி செய்ய வலியுறுத்தியுள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ராஜேந்திரன் அரிவாளால் அங்கயற்கண்ணியை வெட்டி விட்டு வீட்டில் உள்ள பொருள்களை அடித்து உதைத்து சேதப்படுத்தி விட்டு சென்று விட்டார்.

    இதில் காயமடைந்த அங்கயற்கண்ணி மருத்து மனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அய்யாபுரம் போலீசார் ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் கற்பகபாண்டியனை கைது செய்தனர்.

    ×