என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கடலூரில் பயங்கர விபத்து: கார்கள் மீது அரசு பேருந்து மோதியதில் 9 பேர் உயிரிழப்பு
- அரசு பேருந்தின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து 2 கார்கள் மீது மோதியது.
- 2 கார்களில் பயணித்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே எழுத்தூரில் அரசு பேருந்து 2 கார்கள் மீது மோதியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அரசு பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து மோதியதில் 2 கார்களில் பயணித்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு பேருந்தின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து 2 கார்கள் மீது மோதியது.
கட்டுப்பாட்டை இழந்த அரசு விரைவு பேருந்து சாலை தடுப்பை தாண்டி எதிர்திசையில் வந்த 2 கார்கள் மீது மோதியது.
விபத்தை தொடர்ந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story






