search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cremation of bodies"

    • பென்னாத்தூர் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம்
    • வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்

    அடுக்கம்பாறை:

    பென்னாத்தூர் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. பேரூராட்சி தலைவர் பவானிசசிகுமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஜீவசத்தியராஜ் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் அர்ச்சுனன் வரவேற்றார்.

    கூட்டத்தில், பென்னாத்தூர் பேரூராட்சியில் கலெக்டர் உத்தரவின் படி, எரிவாயு மின்மயானம் தகனமேடை மூலம் உடல்கள் தகனம் செய்ய வேண்டும். இதற்காக தகன மேடை அமைக்க இடம் தேர்வு செய்தல், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் அயோத்தி தாஸ் பண்டிதர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.30 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள அனுமதி கோருதல், பேரூராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்து, பணியினை மேற்கொள்ள அனுமதி கேட்டு அரசுக்கு அறிக்கை அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்ப்போம் என அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×