search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bus Stop"

    நெல்லை மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் வண்ணார்பேட்டையில் 2 இடங்களில் நிழற்குடை அமைக்க மேயரிடம் கவுன்சிலர் கோரிக்கை வைத்துள்ளார்.
    நெல்லை: 

    நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. 

    மேயர் சரவணன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் மாநகராட்சி பொறியாளர் நாராயணன், மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாநகராட்சி 11-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கந்தன் அளித்த மனுவில், மாநகர பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் கொண்ட பகுதியாக வண்ணாரப்பேட்டை விளங்கிவருகிறது.

    இந்த இடத்தில் பிரபல ஜவுளிக்கடை முன்பு பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு எதிர்புறம் ஒரு பஸ் நிறுத்தம் இருந்தது. தற்போது சாலை விரிவாக்கத்தின் போது அதனை எடுத்து விட்டார்கள்.

     இதனால் பொதுமக்கள் வெயிலில் காத்து நிற்க வேண்டி உள்ளது. எனவே இந்த 2 இடத்திலும் மாநகராட்சி சார்பில் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என கூறியிருந்தார்.

    பாளை முஸ்லிம் நடுத்தெருவை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அளித்த மனுவில், பாளையம் கோட்டூர் வார்டு எண் 8, பஜனைமடம் பகுதியில் பாளையம் கால்வாய் ஓடுகிறது. இந்த கால்வாயில் உள்புறமாக பொதுமக்கள் தொடர்ந்து குப்பைகளை கொட்டி தீயிட்டு எரித்து வருகின்றனர்.

    இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிப்பதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதனை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். 

    இந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து குப்பைகளை சேகரிக்க தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குப்பை வண்டிகள் மிகவும் குறைவான அளவிலேயே உள்ளதாக தகவல்கள் வருகிறது. 

    எனவே கூடுதலாக பணியாளர்களை பணிக்கு அமர்த்தி ராமயன்பட்டி குப்பை கிடங்கிற்கு இந்த குப்பைகளை சேகரித்து கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
    வண்ணார்பேட்டை மேம்பாலம் பஸ் நிறுத்தம் பகுதியில் தற்காலிக கழிப்பிடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே செல்கிறது.

    டவுன், வண்ணார் பேட்டை, பாளை, சமாதானபுரம் உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்புகள் காரணமாக போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கித் தவிக்கின்றனர்.

    அதேநேரத்தில் வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியாக உள்ளது.

    இங்கு தினமும் பணி நிமித்தமாகவும் பல்வேறு காரணங்களுக்காகவும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு மேம்பாலம் பகுதியில் கழிப்பிட வசதி இல்லாமல் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.

    வண்ணார்பேட்டை மேம்பாலத்திற்கு கீழே பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்ட உடனேயே இது தொடர்பான கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து மாநகராட்சி சார்பில் மேம்பாலத்தின் அருகே தற்காலிகமாக கழிப்பிடம் அமைக்கப்பட்டது.

    ஆனால் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் சிறுநீர் சாலைகளில் ஓடியது. தற்போது அந்த தற்காலிக கழிப்பிடத்தை பொதுமக்கள் யாரும் பயன்படுத்தவில்லை.

    ஆனால் அதன் பின்னர் வேறு தற்காலிக கழிப்பிடம் அமைக்கப்படாததால் பஸ் ஏறுவதற்கு வரும் பயணிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இதேபோல் அங்கு காவல் பணியில் ஈடுபடும் போலீசாரும் கழிப்பிடம் செல்லமுடியாமல் சிரமம் அடைகின்றனர். குறிப்பாக பெண் பயணிகள் அதிக அளவில் சிரமம் அடைகின்றனர்.

    எனவே மாநகராட்சி நிர்வாகம் அந்த பகுதியில் தற்காலிக கழிப்பிடங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    ×