search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajiv Gandhi Hospital"

    • செவிலியர்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
    • தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.

    சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.

    • ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் தவறாக சிகிச்சையே காரணம் என்று குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டினர்.
    • விசாரணைக் குழு சமர்ப்பித்த அறிக்கையில், தவறான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை, ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தைக்கு ரத்த உறைதலால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. இக்குழந்தைக்கு கடந்த மாதம் 2-ந்தேதி டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து வலது கையை அகற்றினர். தொடர்ந்து மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், குழந்தை இன்று உயிரிழந்தது.

    முன்னதாக, குழந்தையின் கையை அகற்ற வேண்டிய நிலைமைக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் தவறாக சிகிச்சையே காரணம் என்று குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டினர். குழந்தையின் கை வீங்கியதால் செவிலியர்களை தாய் அழைத்ததாகவும், ஆனால், அவர்கள் அலட்சியமாக இருந்ததாகவும் குற்றம்சாட்டினர்.

    இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு சமர்ப்பித்த விசாரணை அறிக்கையில், தவறான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், மருந்து கசிவால் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்படவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    ரத்தநாள அடைப்பு செலுத்தப்பட்ட மருந்தினாலோ மற்ற சிகிச்சை முறைகளாலோ பாதிப்பு ஏற்படவில்லை. Pseudomonas கிருமியால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்த நாளத்தை பாதித்ததால், குழந்தைக்கு வலது கையில் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரை காப்பாற்றும் முயற்சியில் குழந்தையின் வலது கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

    • கிண்டி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிண்டி தபால் நிலையம் அருகில் ஒரு பஸ் நிலையம் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
    • பூங்கா ரெயில் நிலைய சுரங்கப்பாதை நீட்டிப்பு செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் சென்னை நகரம் முழுவதும் சோதனை செய்து ஒரு சில இடங்களில் புதிய பஸ் நிலையங்களை நிறுவவும், நடை பாதைகள் அமைக்கவும், பஸ் நிறுத்தத்தை மாற்றவும் பரிந்துரை செய்துள்ளனர்.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முன்புறம் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பஸ் நிறுத்தத்தை வேறு இடத்துக்கு மாற்ற அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

    அண்ணாசாலையில் உள்ள நடைபாதையை சிட்கோ பஸ்நிறுத்தம் வரை நீட்டிப்பதன் மூலம் ரெயில்வே நடைபாலத்தை ஒருங்கிணைக்க பரிந்துரை செய்துள்ளனர். இதே போல் நுங்கம்பாக்கத்தில் உள்ள காதர் நவாஸ்கான் சாலை நடைபாதையாக மாற்றப்பட உள்ளது.

    கிண்டி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிண்டி தபால் நிலையம் அருகில் ஒரு பஸ் நிலையம் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மேலும் சின்ன மலை மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் ஒரு பஸ் நிலையம் அமைக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு நடைபாதை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பூங்கா ரெயில் நிலைய சுரங்கப்பாதை நீட்டிப்பு செய்யப்பட உள்ளது.

    இதற்கிடையே சில அமைப்புகள் சென்னையில் உள்ள 10 பஸ் நிறுத்தங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதாக கண்டறிந்து உள்ளன. சென்னை கொருக்குப்பேட்டை, அம்பேத்கர் கல்லூரி, அசோக் பில்லர், சின்னாண்டி மடம், ஐ.ஓ.சி. நகர், முத்தமிழ் நகர், வியாசர் பாடி மார்க்கெட், சிட்கோ, வாசுகி நகர், சைதாப்பேட்டை ஆகிய பஸ் நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளன.

    சில பஸ் நிறுத்தங்கள் மதுக்கடை அருகில் அமைந்துள்ளன. சில பஸ் நிறுத்தங்களில் ஆண்கள் மது அருந்துகிறார்கள். விளக்குகள் இல்லாத சில பஸ் நிறுத்தங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன என்றும் தெரிவித்துள்ளன.

    • சக பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியதால் போராட்டம்.
    • திடீர் போராட்டத்தால் மருத்துவமனை வளாகத்தில பதற்றமான சூழல் உருவாகியது.

    சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    சக பயிற்சி மருத்துவர் மீது தாக்கப்பட்டதை தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

    மருத்துவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் மருத்துவமனை வளாகத்தில பதற்றமான சூழல் உருவாகியது.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் லஞ்சம் மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் கூடுதலாக 125 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. #RajivGandhiHospital
    சென்னை:

    சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், பணிவிடை செய்வதற்கும் ஊழியர்கள், வார்டு ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் பணம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதேபோல் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசு ஆஸ்பத்திரிகளிலும் இதே நிலை காணப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். ஆஸ்பத்திரி ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது முறைகேடு குறித்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கணக்கில் வராத பணமும் கைப்பற்றப்பட்டது.

    இந்த நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் லஞ்சம் மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் கூடுதலாக 125 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


    இது தொடர்பாக மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் ஏற்கனவே 62 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    தற்போது லஞ்சம், ஊழல் மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் கூடுதலாக 125 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மருத்துவமனை வளாகம் முழுவதும் கண்காணிப்பில் இருக்கும்.

    21 கேமராக்கள் மருத்துவமனை வெளி வளாகத்திலும், 104 கேமராக்கள் மருத்துவமனை கட்டிடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.

    வெளி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் 280 மீட்டர் வரை பார்க்கக்கூடிய திறன் கொண்டது. இந்த கேமராக்கள் இரவு நேரங்களிலும் தெளிவாக படம் பிடிக்கும் வசதிகள் கொண்டவை.

    ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் லஞ்சம் மற்றும் ஊழலை தடுக்கும் வகையில் தினமும் 2 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது.

    இந்த குழு தினமும் மருத்துவமனையின் அனைத்து வார்டுகளையும் ஆய்வு மேற்கொண்டு அவர்களது அறிக்கையை கொடுக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தனியார் ஒப்பந்த ஊழியர்கள் மீது கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அவர்களிடம் இருந்து உரிய அறிக்கை வந்தவுடன் அதன்பேரில் ஊழியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #RajivGandhiHospital
    சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இடுப்பு எலும்பு முறிவு காரணமா சிகிச்சை பெரும் பெண் பணம் கட்டியும் முறையான சிகிச்சை கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ளார்.
    சென்னை:

    சாமானியர்களுக்கு உயர் சிகிச்சை என்பது எட்டாக்கனி என்பது தெரிந்ததே.

    சாதாரண மக்களும் தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் அரசு ஆஸ்பத்திரிகளிலும் பெற வேண்டும் என்பதற்காக அரசு ஆஸ்பத்திரிகளிலும் பணம் கட்டி வைத்தியம் பார்க்கும் முறை அமுல்படுத்தப்பட்டது. இதற்காக தனி வார்டுகளே அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பணம் கட்டியும் முறையான சிகிச்சை கிடைக்காதது அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

    சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி (60). வாடகை வீட்டில் குடியிருக்கும் ஏழை பெண். கடந்த மாதம் 16-ந்தேதி இரவு பாத்ரூம் சென்றபோது தடுமாறி விழுந்ததில் இடுப்பில் பலத்த அடிபட்டது.

    மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு சென்றபோது இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 17-ந்தேதி அரசு ஆஸ்பத்திரியில் பணம் கட்டி பார்க்கும் வார்டில் சேர்ந்தார். அவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதியும் இருக்கிறது.

    இடுப்பில் ‘பிளேட்’ பொருத்த வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதற்காக அரசு காப்பீட்டு திட்டத்தில் இருந்து ரூ.66 ஆயிரம் பணமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் பிளேட் வரவில்லை என்று ஒரு மாதமாக சிகிச்சை நடக்கவில்லை. இப்போது தினமும் அறை வாடகையை கட்டிக் கொண்டு ஒரு மாதமாக மீனாட்சி தவித்து வருகிறார்.

    தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றால் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி ஆகியவற்றை சில நாட்களில் கட்டுப்படுத்தி ஆபரேசனையும் செய்து இருப்பார்கள். அங்கு சென்றால் அதிகமாக செலவாகும் என்பதால் தான் மீனாட்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து இருக்கிறார்.

    ஆனால் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கும் காலதாமதம் வெளியே ஆகும் செலவை விட கூடுதலாகி விடும் என்று மீனாட்சி குடும்பத்தினர் ஆதங்கப்படுகிறார்கள். #tamilnews
    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை அருகே கிடந்த வெடிமருந்து பையை மோப்ப நாய் உதவியுடன் போலீசார் கைப்பற்றி சோதனை செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. #RajivGandhiHospital
    சென்னை:

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை நிலையம் இயங்கி வருகின்றது. இந்த நிலையில் நேற்று காலை அம்மா முழு உடல் பரிசோதனை மையம் அருகே உள்ள நடைமேடையில் கேட்பாரற்று பை ஒன்று கிடந்தது. இதை பார்த்த அங்குள்ள பொதுமக்கள், அந்த பையில் வெடிகுண்டு போன்ற பொருள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து இந்த மர்ம பை குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் பூக்கடை போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பாதுகாப்பு கருதி மர்ம பை இருந்த இடத்தை சுற்றிலும் போலீசார் தடுப்பு அமைத்தனர்.

    பின்னர் மோப்ப நாய் உதவியுடன் அந்த மர்ம பையை சோதனை செய்தனர். சோதனையில் முடிவில் அதில் வெடி பொருட்கள் இருப்பது தெரியவந்தது. பின்னர் அந்த மர்ம பையை போலீசார் கைப்பற்றி எடுத்துச்சென்றனர். இந்த மர்ம பை குறித்து போலீசார் கூறுகையில், ‘இந்த பையில் இருந்தது திருவிழா சமயங்களில் வேடிக்கைக்காக உபயோகப் படுத்தப்படும் வெடிமருந்து ஆகும். இதை இங்கு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்’, என்றார்.

    இந்த சம்பவம் குறித்து பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை அருகே மர்ம வெடி மருந்து பை இருந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #RajivGandhiHospital
     

    ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நோயாளிகளை வற்புறுத்தி லஞ்சம் வாங்குவதாக பணியாளர்கள் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    நெல்லையைச் சேர்ந்தவர் வக்கீல் ஜாபர்அலி. தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை பொதுச்செயலாளரான இவர், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், கடைநிலை ஊழியர்கள் ஒவ்வொரு பணிக்கும் நோயாளிகளை வற்புறுத்தி பணம் வாங்குவதாக எங்கள் அமைப்புக்கு புகார்கள் வந்தன. ஸ்கேன், எக்ஸ்-ரே, ரத்த பரிசோதனை போன்றவற்றுக்கு பணம் கொடுத்தால் தான் உடனடியாக வேலை நடக்கிறது என்றும் புகார் கூறப்பட்டது. எங்கள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் புற்றுநோய்க்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது இதை கண்கூடாக பார்த்துள்ளார். ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக சிகிச்சையும், மருந்து, மாத்திரையும் வழங்க வேண்டியது அரசின் கடமை. இதுபோன்ற குறைபாடுகளை சரி செய்ய அரசு மருத்துவமனைகளில் கண்காணிப்புக்குழு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், குழுக்கள் அமைக்கப்படவில்லை. அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே மருத்துவ சேவையை பெற முடியும் என்பது வேதனைக்குரிய விஷயமாகும். லஞ்சம் கொடுக்காதவர்களுக்கு மருத்துவ சேவை மறுக்கப்படுவது, தாமதப்படுத்துவது மனித உரிமை மீறல் ஆகும். எனவே, இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், இந்த விவகாரம் சம்பந்தமாக மருத்துவக்கல்வி இயக்குனர் 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். #tamilnews
    ×