search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளது
    X

    தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்படவுள்ள இடங்களை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டார்.

    தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளது

    • சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழாவுக்காக தாணிப்பாறையில் தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளது.
    • துணை சூப்பிரண்டு முகேஷ் ஜெயக் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், தாணிப்பாறையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு வருகிற 12-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை 6 நாட்க ளுக்கு பக்தர்கள் கோவி லுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்படவுள்ள தற்காலிக பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் போதிய பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ளவும், கூட்ட நெரிசலை ஒழுங்குப் படுத்தவும் போலீசார் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் குடிநீர், சுகாதார வசதிகள் செய்து தரப்படும். வனத்துறையின் மூலம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வண்ணம் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப் படும்.

    மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் கூடிய மருத்துவக் குழு அமைக்கப் பட உள்ளது. ஆம்புலன்ஸ் வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும். மேலும் சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக், போதை பொருட்களை கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் துணிப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

    தாணிப்பாறை அடி வாரத்தில் சேரும் குப்பை களை அகற்றுவதற்கு போதுமான துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படுவர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    வெளியூர் பஸ்கள், தனி நபர்களுக்கு சொந்தமான வாகனங்கள் போன்ற அனைத்து வாகனங்க ளையும் நிறுத்துவதற்கு வசதியாக தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளது. சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது துணை இயக்குநர் மேகமலை புலிகள் காப்பகம் (ஸ்ரீவில்லி புத்தூர்) திலீப்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சூரியமூர்த்தி, சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், ஸ்ரீவில்லி புத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு முகேஷ் ஜெயக் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×