என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Anganwadi Employees"
- அரசு ஊழியரை போல் மகப்பேறு விடுப்பு 1 வருடம் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.
- அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் வரையறுக்கப்பட்ட ஒய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தென்காசி:
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்க பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்குவது போல், பச்சிளம் குழந்தைகளை பாதுகாக்க மே மாதம் முழுவதும் அங்கன்வாடி மையங்க ளுக்கு விடுமுறை வழங்கிட வும், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் வரையறுக்கப்பட்ட ஒய்வூதியம், 10 ஆண்டு பணி முடித்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு உடன் பதவி உயர்வு, 10 வருடம் பணி முடித்து 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எவ்வித நிபந்தனை இன்றி அங்கன்வாடி பணியாளராக பதவி உயர்வு வழங்கவும், குறுமையத்திலிருந்து பிரதான மையத்திற்கு பதவி உயர்வில் சென்றவர்களுக்கு ஊதிய உயர்வு, குழந்தைகள் வருகை குறைவாக உள்ள அங்கன்வாடி மையங்களை இணைக்கும் திட்டத்தை கைவிடவும், பொது வருங்கால வைப்பு நிதியில் இருந்து ஊழியர்களுக்கு லோன் வழங்க வேண்டும், பணி ஒய்வு பெற்றவர்களுக்கு உடனடியாக பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வட்டியுடன் வழங்குமாறும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள ஆயிரக்கணக்காண காலிப் பணியிடங்களை உடளே நிரப்பிடவும், மகப்பேறு விடுப்பு அரசு ஊழியரை போல் 1 வருடம் வழங்கிடவும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவூட்டு செலவீனத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்த தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் தென்காசியில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் திருப்பதி முன்னிலை வகித்தார். சண்முக சுந்தரி, லெட்சுமி, செல்லத்துரைச்சி, ராதா உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொருளாளர் சி.ஐ.டி.யு. தர்மராஜ் ,மாவட்ட செயலாளர் தேவி ஆகியோர் விளக்க உரையாற்றினார். மாவட்ட தலைவர்அயூப்கான், சி.ஐ.டி.யு. மார்த்தாண்ட பூபதி, மாவட்ட துணை தலைவர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாடசாமி, மாவட்ட தலைவர் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம், மாவட்ட செயலாளர் ராஜசேகர் , தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் , சங்கத்தினர், மாவட்ட செயலாளர் சி.ஐ.டி.யு. மணிகண்டன் ஆகியோர் நிறைவுரை யாற்றினர். மாவட்ட துணை தலைவர் சரஸ்வதி நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்