search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொண்டாமுத்தூர்"

    • தட்டிக்கேட்ட கணவரை மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தினர்.
    • இது தொடர்பாக போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    வடவள்ளி

    கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள அருள்ஜோதி நகரை சேர்ந்தவர் 35 வயது முன்னாள் ராணுவ வீரர்.

    இவர் தற்போது வடவள்ளியில் உள்ள தனியார் ஓட்டலில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விட்டார்.

    நேற்று இரவு முன்னாள் ராணுவ வீரரின் மனைவி, அவரது வீட்டு வாசலில் நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்கள் வீட்டின் அருகே வந்ததும், அங்கு நின்றிருந்த முன்னாள் ராணுவ வீரரின் மனைவியை பார்த்து ஆபாசமான வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டனர்.

    அப்போது வீட்டிற்கு வந்த ராணுவ வீரர் தனது மனைவியிடம் வாலிபர்கள் தகராறு செய்வதை பார்த்து ஓடி வந்து, வாலிபர்களிடம் பேசினார்.

    ஆனால் அவர்கள் தொடர்ந்து அவரிடமும் தகராறு செய்து, அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தினர். இதில் அவருக்கு கழுத்து, முகத்தில் காயம் ஏற்பட்டது.

    இதை பார்த்த இளம்பெண் தனது கணவரை காப்பாற்ற சென்ற போது, இளம்பெண்ணையும் தாக்கினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் தொண்டாமுத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, 3 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    விசாரணையில், அவர்கள் குளத்து பாளையம் விஸ்வநாதபுரத்தை சேர்ந்த கண்ணதாசன்(20), வடவள்ளி பொம்மனம்பாளையம் பால சபரிஸ்(22), வடவள்ளி சிறுவாணி சாலை கமலேஷ்(27) என்பதும், போதையில் இளம்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் அவர்கள் மீது 4 பிரிவில் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    • சம்பவம் குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    வடவள்ளி,

    கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரத்தில் இருந்து கோவை டவுன்ஹால் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    இந்த பஸ்சை தேனிமாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த முருகவேல் என்பவர் ஓட்டி வந்தார். வேடப்பட்டி பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிரே கோவையில் இருந்து மாதம்பட்டி நோக்கி ஒரு கார் வந்தது. காரை மாதம்பட்டி அடுத்த தெனமநல்லூரை சேர்ந்த கோபி சங்கர் என்பவர் ஓட்டி வந்தார்.

    வேடப்பட்டி அருகே பஸ் வந்தபோது, எதிரே வந்த காரும், அரசு பஸ்சும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.

    பஸ் மீது மோதிய வேகத்தில் கார் சில அடி தூரம் தூக்கி எறியப்பட்டது. இதில் கார் முழுவதும் சுக்குநூறாக நொறுங்கியது.

    மேலும் அதில் இருந்த கோபி சங்கர் என்பவர் படுகாயங்களுடன் ரத்தம் வெளியேறிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    இதற்கிடையே காரின் மீது பஸ் மோதியதும், டிரைவர் பஸ்சை நிறுத்த முயற்சித்தார். ஆனால் பஸ் எதிர்பாராத விதமாக அந்த வழியாக சென்று கொண்டிருந்த பழ வியாபாரி சுப்பிரமணி என்பவர் மீது ேமாதியது. இதில் அவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்று காருக்குள் சிக்கி உயிருக்கு போராடிய கோபி சங்கர் மற்றும் பஸ் மோதியதில் காயம் அடைந்த சுப்பிரமணி ஆகியோரை மீட்டனர்.

    பின்னர் 2 பேரையும் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான பஸ், காரை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் காட்சி அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது பார்ப்பவர்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    • சாயக்கழிவுகள் உடலில் படுவதால் அரிப்பு ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
    • கடந்த 3 மாதங்களாக இந்த கால்வாயில் சாயக்கழிவு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    வடவள்ளி

    கோவை தொண்டாமுத்தூர் சாலையில் நாகராஜபுரம் பகுதி உள்ளது. இந்த பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    மேலும் இந்த பகுதியானது பேரூர் செல்லும் பிரிவில் உள்ளது. இதனால் நாகராஜபுரம் அருகே உள்ள பகுதிகளை சேர்ந்தவர்களும், நாகராஜபுரத்தில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு பஸ் ஏற வருவார்கள். இந்த பகுதியில் கிருஷ்ணா–ம்பதி குளத்திற்கு செல்லும் ஒரு கால்வாய் உள்ளது. சத்யா காலனி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீரும் இந்த கால்வாயில் கலந்து வீரகேரளம் வழியாக குளத்தில் சென்று கலக்கிறது. மேலும் சாயக்கழிவு நீரும் பல ஆண்டுகளாக இந்த கால்வாய் வழியாக சென்று குளத்தில் கலக்கிறது.

    கடந்த 3 மாதங்களாக இந்த கால்வாயில் சாயக்கழிவு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நுரையுடன் வரும் சாயக்கழிவு நீர் காற்றில் பறந்து நாகராஜபுரம் பகுதியில் பஸ்சுக்காக காத்திருப்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. அப்படி விழும் நுரையினால் தொற்று நோய் பரவுவதுடன், நுரை பட்டவர்களுக்கு அரிப்பு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டு–கின்றனர். இதுகுறித்து அப்ப–குதி பொதுமக்கள் கூறிய–தாவது:-

    இந்த பகுதியில் உள்ள கால்வாயில் பல ஆண்டுகளாகவே சாயக்கழிவுநீர் வெளியேறி வருகிறது. முதலில் குறைவான அளவிலேயே இருந்தது. இருப்பினும் இதனை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால் நடவடிக்கை இல்லை. தற்போது இந்த கால்வாயில், சாயக்கழிவுநீர் வரத்து அதிகமாக உள்ளது. வெள்ளை நுரையுடன் அதிகளவு வரும் சாயக்கழிவு நீர் காற்றில் பறந்து அருகே உள்ள குடியிருப்பு மற்றும் பஸ் நிறுத்த பகுதிகளில் வந்து விழுகிறது.

    அப்போது வீட்டில் இருக்கும் மக்கள், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மீது படுகிறது. இதனால் அவர்களுக்கு ஒரு சில நாட்களில் ஒரு வித அரிப்பு ஏற்படுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் அந்த பகுதியில் உள்ளது. இதுகுறித்து பல முறை நாங்கள் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் இங்கிருந்து செல்லும் சாயக்கழிவு குளத்தில் கலக்கிறது. இதனால் குளத்தில் உள்ள உயிரினங்கள் இறந்து விடுகின்றன. குளத்தின் வளமும் பாதிக்கப்படுகிறது.

    மேலும் இங்கு யார் சாயப்பட்டறை நடத்துகிறார்கள் என்பதும் தெரியவில்லை. எனவே அதிகாரிகள் இங்கு சாய பட்டறை நடத்துவது யார்? அனுமதியுடன் தான் நடத்துகிறார்களா? இல்லையா? என்பதையும் பார்க்க வேண்டும். மேலும் உரிய நடவடிக்கை எடுத்து கால்வாயில் சாயக்கழிவு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×