search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்ைத முற்றுகையிட்ட பா.ஜ.க.வினர் 350 பேர் மீது வழக்கு
    X

    தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்ைத முற்றுகையிட்ட பா.ஜ.க.வினர் 350 பேர் மீது வழக்கு

    • காப்பக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட 350-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    வடவள்ளி:

    கோவை மாநகரில் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் என 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தங்கியிருந்த ஆதரவற்றவர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் கோவை அருகே தொண்டாமுத்தூர் கெம்பனூர் பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் அடைக்கப்பட்டனர். இவர்களில் 100-க்கும் மேற்பட்டவர்களை மொட்டை அடித்து தாக்கி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் காப்பகத்தை முற்றுகையிட்டனர். அங்கிருந்த நிர்வாகிகளிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேரூர் தாசில்தார் இந்துமதி, கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் அந்த காப்பகம் அனுமதியின்றி செயல்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விழுப்புரத்தைச் சேர்ந்த காப்பக நிர்வாகி ஜிபின் பேபி (வயது 44), பி.என். புதூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் (43), சென்னையைச் சேர்ந்த செல்வின் (49), அருண் (36), தர்மபுரியைச் சேர்ந்த பாலச்சந்திரன் (46), சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜார்க் (45) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    அவர்கள் மீது மிரட்டல், தாக்குதல், அத்துமீறி அடைத்து வைத்தல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 6 பேரும் ஜாமீனில் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் மைதானத்தில் காப்பக நிர்வாகிகளை கண்டித்தும், எளிதில் வெளியில் வர கூடிய வகையில் வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கட்சியினர் தொண்டாமுத்தூர் போலீசை கண்டித்து போலீஸ் நிலையத்முதை ற்றுகையிட்டனர். போலீசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    ஆசிரம நிர்வாகிகளால் தாக்கப்பட்டு மொட்டை அடிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் 5 பேரை பா.ஜ.க.வினர் அழைத்து வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.போராட்டத்தால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினால் மட்டுமே கலைந்து செல்வோம் என கூறி போலீஸ்நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு வந்து போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கட்சியினரி டையே பேச்சுவார்த்தை நடத்தினார். வேலைக்கு சென்று வந்த நபர்களை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து தாக்கி மொட்டை அடித்ததால் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரில் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய இருப்பதாக உறுதி கூறப்பட்டது.

    தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 350-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அனுமதியின்றி பொது மக்களுக்கு இடையூறாக சாலைமறியலில் ஈடுபட்டது தொடர்பாக பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உள்ளிட்ட 350 பேர் மீது தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    Next Story
    ×