search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parental Guide"

    உங்கள் குழந்தையை அவர்களுக்குத் தேவையானவற்றை தேர்ந்து எடுத்துக்கொள்ளவும், தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தவும் அனுமதியுங்கள். இவ்வாறு செய்வது, அவர்களுடைய விருப்பங்கள் மற்றும் தெரியப்படுத்த விரும்புகிறவற்றை பேசுவதற்கு துணை செய்யும்.
    ‘ஒன்றை நீ முடிவு செய்யகூடாது. ஏனென்றால், உனக்கு வயசு போதாது அல்லது பெரியவர்களுக்கு எல்லாம் தெரியும்’ அன்றாட வாழ்க்கையில் நாம் அடிக்கடி கேட்ககூடிய வார்த்தைகள்தான் இவை. உண்மையைச் சொல்வது என்றால் இவை போன்றவற்றைக் கேட்பது இனிமையான ஒன்றாக இருக்க வாய்ப்பு இல்லை. உதாரணத்துக்கு, உங்கள் குழந்தை தவறு இழைத்தல் என்பது ஒன்றும் மோசமான செயல் அல்ல.

    எந்த ஒரு குழந்தையின் கருத்து அடிக்கடி நிராகரிக்கப்படுகிறதோ அக்குழந்தை ஒருவிதமான பாதுகாப்பு அற்ற சூழலிலே வளரக்கூடும். உண்மையிலேயே, இது சரியான உணர்வைத் தோற்றுவிக்கும். உங்களுக்காக வேறொருவர் எல்லா முடிவுகளையும் மேற்கொள்ளும்போது, வாழ்க்கையிடம் இருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை உங்களால் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்?

    உங்கள் குழந்தையை அவர்களுக்குத் தேவையானவற்றை தேர்ந்து எடுத்துக்கொள்ளவும், தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தவும் அனுமதியுங்கள். இவ்வாறு செய்வது, அவர்களுடைய விருப்பங்கள் மற்றும் தெரியப்படுத்த விரும்புகிறவற்றை பேசுவதற்கு துணை செய்யும்.

    மகிழ்ச்சியாக வைக்க மறுத்தல்குழந்தைப் பருவத்தின் இனிமையான நினைவுகள் மிகவும் மதிக்க தகுந்தவையாகும். அவற்றை யாராலும் நம்மிடம் இருந்து ஒருபோதும் எளிதாகப் பிரித்துவிட முடியாது.

    இன்னும் ஒருபடி மேலாக, சின்னசின்ன விடுமுறை காலங்கள் பின்னாளில், பெரிய நிறைவேறுதல்களாக உருமாற்றம் பெறுகின்றன. ஒரு குழந்தை ஆரோக்கியமான சூழலில் வளரும்பட்சத்தில், எண்ணற்ற புதிய அனுபவங்களைப் பெறுகின்றது. இது அவர்கள் விரைவாக வளர்வதைக் காட்டுகின்றது. மகிழ்ச்சி நிறைந்த குழந்தை எளிதாக வாலிபப் பருவத்தினை ஏற்றுக்கொள்வதோடு, புதிய வாழ்க்கையையும் தொடங்குகின்றது.



    உண்மை என்னவென்றால் பெற்றோராக மற்றவர்கள் கூறுவதைவிட எது குழந்தைக்கு நல்லது? எது கெட்டது? என்பது உங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். மற்றவர்கள் கூறுகிற அறிவுரையை நீங்கள் கேட்கலாமே தவிர அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்ற அர்த்தம் இல்லை.

    தனிமைப்படுத்துதல் நமக்கு முக்கியத்துவம் இல்லாமல் தெரிகிற விஷயங்கள், குழந்தைகளுக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகத் தெரியலாம். அனைத்து மக்களுக்கும், குறிப்பாக, மழலைகளுக்குச் சிலராவது, அவர்களிடம் விழாக்காலங்களில் அன்பாக அரவணைப்பாக இருக்க வேண்டும் என்பது தேவையாக உள்ளது.

    உங்கள் குழந்தையின் பிறந்த நாள் விழாவில், பங்கேற்காமல் இருக்க சரியான காரணம் இருந்தாலும், அவ்வாறு நடக்க முயற்சி செய்யாதீர்கள். ஏனென்றால், எதிர்காலத்தில் எவ்வளவு முக்கியமான தருணத்தை இழந்து விட்டீர்கள் என்பதை உணர்ந்து, அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை உண்டாகும்.

    குழந்தைகளுடன் சேர்ந்து விழாக்காலத்தில் வீட்டினை அலங்கரிக்கவும், சினிமாவிற்குப் போகவும், பாட்டியுடன் ஒன்றாக இருக்கவும் நேஇரத்தை ஒதுக்கி கொள்ளுங்கள். ஏனென்றால் வாழ்வில் இவையெல்லாம் முக்கிய மணித்துளிகள். மழலைகள் வளரும்பட்சத்தில், இவற்றை நீங்கள் இழக்க நேரிடும்.

    குழந்தைகளை சட்டப்படி தத்தெடுப்பதே பாதுகாப்பானது. குழந்தைகளை தத்தெடுப்பது எப்படி? அதற்கான நடைமுறைகள் என்னென்ன? என்பது பற்றி இப்போது பார்ப்போம்.
    குழந்தை தத்தெடுப்புக்காக தமிழகத்தில் 21 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. குழந்தை தத்தெடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டு உண்டு. அதற்குக் காரணம் பதிவு செய்திருக்கும் அளவிற்கு குழந்தைகள் இல்லாததே. முன்எப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் பிரச்சினையாக ‘குழந்தைப் பேறின்மை’ உருவெடுத்து நிற்கிறது.

    நகரங்கள்தோறும் பெருகியிருக்கும் கருத்தரிப்பு மையங்கள், அதில் குவியும் இளைஞர்கள், நடுத்தர வயதினர் என சொல்லிக்கொண்டே செல்லலாம். அவற்றில், நேரத்தையும் பணத்தையும் செலவிட விரும்பாத சிலர், காப்பகங்களில் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க விரும்புகின்றனர். ஆனால், அதன் நடைமுறைகளை அறியாமல், இடைத்தரகர்கள், நண்பர்கள் காட்டும் குறுக்கு வழிகளில் சென்று சட்டத்துக்குப் புறம்பாக குழந்தைகளை வாங்குகிறார்கள். இதனால் குழந்தை கடத்தல் மற்றும் விற்பனை போன்ற குற்றவியல் நடவடிக்கைகள் பெருகியுள்ளன.

    குழந்தைகளை சட்டப்படி தத்தெடுப்பதே முறையானது. பாதுகாப்பானது. குழந்தைகளை தத்தெடுப்பது எப்படி? அதற்கான நடைமுறைகள் என்னென்ன? என்பது பற்றி இப்போது பார்ப்போம்.

    சமூகத்தில் ஆதரவற்ற, பராமரிப்பின்றி கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு குடும்பப் பாதுகாப்பை அமைத்துத்தருவதே தத்தெடுத்தலின் நோக்கம். இதற்காகவே மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘மத்திய தத்துவள ஆதார மையம்’ செயல்படுகிறது.

    சுருக்கமாக இதை ‘கர’ என்று அழைக்கிறார்கள். இதுபோக அனைத்து மாநிலங்களிலும் ‘மாநில தத்துவள ஆதார மையம்’ இருக்கின்றன. தமிழகத்தில், சமூக நலத்துறை ஆணையர் தலைமையில் ‘தத்துவள மையம்’ செயல்படுகின்றது.

    தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் திருமண பந்தத்தில் உள்ளவராக இருக்க வேண்டும். 4 வயதுடைய குழந்தையை தத்தெடுக்க, அந்த தம்பதியின் கூட்டு வயது அதிகபட்சமாக 90-ஆக இருத்தல் அவசியம். இதில் தனிநபர் வயது 25-க்கு குறையாமலும் 50-க்கு மிகாமலும் இருக்கவேண்டும். 4 முதல் 8 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை தத்தெடுக்க, தம்பதியின் கூட்டு வயது 100-க்குள் இருக்கவேண்டும். இதில் தனிநபர் வயது 25-க்குக் குறையாமலும் 55-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

    தத்தெடுப்பவர் தனிநபராக இருக்கும் பட்சத்தில் தாய் அல்லது தந்தையின் வயது 30-க்கு குறையாமலும் 50-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு நிபந்தனைகளும் உள்ளன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு குழந்தைகளை தத்தெடுப்பதே சிறந்த வழி. இடைத்தரகர்கள் மூலம் குழந்தைகளை தத்தெடுக்கும் போது, பல்வேறு சட்ட சிக்கல்களும் வரும். குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படலாம். பாசமாக வளர்த்த குழந்தைகளும் கைவிட்டு போகக்கூடிய சூழலும் வரலாம் என்பதால் இதில் மிகவும் கவனம் தேவை.
    குழந்தைகள் எப்போது பேசும்? இயல்பாக குழந்தைகள் பேசுவதற்கு என்னென்ன பயிற்சிகளைக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு பேச பெற்றோர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? என்று பார்க்கலாம்.
    சில குழந்தைகள் விரைவில் பேச தொடங்கும். சில குழந்தைகளுக்கு பேசுவதில் தாமதமாகும். குழந்தைகள் எப்போது பேசும்? இயல்பாக குழந்தைகள் பேசுவதற்கு என்னென்ன பயிற்சிகளைக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு பேச (helping your child speech) பெற்றோர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? என்று பார்க்கலாம்.

    ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு பேசும் திறன், கேட்கும் திறன் இருக்கிறதா என சரிபார்த்துக் கொள்வது நல்லது. 6 மாத குழந்தைகளுக்கு, வாயிலிருந்து ‘ஜொள்ளு வழிதல்’ அறிகுறி தெரியும். பேச முயற்சி செய்யும் அறிகுறிகளும் தென்படும். இதனால் பேச்சு திறனை உறுதி செய்யலாம்.

    குழந்தையிடம் பேசும்போது, வாய் அசைவைப் பார்த்து, சத்தம் வருவதைக் குழந்தை உணர்ந்து கொண்டு ‘உர்’ என எச்சிலை ஊதி தள்ளும். இதுவே குழந்தை பேச தொடங்குவதற்கான முதல் அறிகுறி. நீங்கள் பேசும்போது உங்களையே பார்த்துக்கொண்டு தானும் பேச முயலுவதைப் போல ‘ங்… ஞ…ங்க…ஞ…’ என்று குரல் எழுப்பும்.

    நீங்கள் பேசும் சத்தம் பார்த்து தன் கவனத்தைத் திருப்புவதும் நல்ல அறிகுறிதான். காது நன்றாக கேட்கிறது. எனவே, பேச்சும் இயல்பாக வரும் என அர்த்தம். குழந்தை பேசுவதற்கு முன்பு அதன் கேட்கும் திறன் நன்றாக இருக்க வேண்டும். நாம் பேசுவதை குழந்தை நன்கு கூர்ந்து கவனித்த பின்பு, அதற்கு பதில் சொல்லவோ செய்கை செய்யவோ முயற்சி செய்யும்.

    கேட்கும் திறன், புரிந்து கொள்ளும் திறன் சரியாக இருக்க வேண்டும். அதற்கான வளர்ச்சி இருந்தால் மட்டுமே, விரைவில் குழந்தையால் பேச முடியும். பேசவும் தொடங்கும். முதல் ஒன்றிரண்டு மாதங்கள் நாம் பேசுவதை நாம் வாய் அசைப்பதைக் கவனிக்கும். தலை அசைப்பதைக் கவனிக்கும். கை, கால் ஆட்டுவதைப் பார்க்கும்.

    ‘ங்ஞா, ங்ஞா’ என்ற வார்த்தைதான் குழந்தைக்கு பேச வரும். பசி வரும் போது, தன்னை யாரும் கவனிக்காதபோது இப்படி சத்தமிடும். அடித்தொண்டையிலிருந்து இப்படி கத்தி சத்தம் போடும். பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்கள் தினமும் குழந்தையிடம் பேசி, சிரித்து, கொஞ்சி விளையாட வேண்டும்.

    என்ன பன்றீங்க… சாப்டீங்களா… பாப்பாக்கு பசிக்குதா… பாப்பாக்கு தூக்கம் வரலையா என எதாவது குழந்தையிடம் பேசி கொண்டு இருப்பது நல்லது. இதுவே மிகவும் முக்கியமான பயிற்சி. குழந்தைகள் நீங்கள் பேசுவதைௐ கவனிக்கும். மெல்ல மெல்ல ஒவ்வொரு எழுத்தாக குழந்தையும் சத்தம் போட ஆரம்பிக்கும்.

    குழந்தையை சுற்றி பெரியவர்கள் உட்கார்ந்து பேசும் வீட்டில், வெகு விரைவில் குழந்தைகள் பேசுவார்கள்… 10 மாதத்திலே ஒரு குழந்தை இரண்டு எழுத்துகளை கோர்த்து பேசும் அளவுக்கு திறன் கொண்டிருந்தான். அதற்கு காரணம் அந்த வீட்டில் உள்ள அனைவரும் குழந்தையிடம் அவ்வப்போது பேசி கொஞ்சி விளையாடியதே முக்கிய காரணம்.

    அம்மா சொல்லு, அப்பா சொல்லு, அண்ணா சொல்லு என உறவுகளின் பெயரை சொல்ல சொல்லி பழக்குவது குழந்தைகளுக்கான சிறந்த பயிற்சி. மா, ப்பா, தா, வா இப்படி ஒவ்வொரு எழுத்தாக குழந்தையிடம் பேசி பேசி கற்பிக்கலாம்.
    சில குழந்தைகள், பிறந்தது முதல் நான்கு மாதங்கள் வரையில் தூங்குவதற்கு சிரமப்படும். காரணம், பிரசவம் வரை தாயின் கருவறைச் சூழலில் இருந்த குழந்தை அதன் பின்னர் புறஉலகுச் சூழலுக்கு பழகிக்கொள்வதில் எதிர்நோக்கும் சிரமங்கள்தான்.
    சில குழந்தைகள் இரவில் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் அழுதுகொண்டே இருக்கும். இதனால் தாயின் தூக்கம் கெடுவது மட்டுமே பிரச்சினை அல்ல. தூக்கமின்மை காரணமாக உடல்நல, மனநல பிரச்சினைகளும் பிரசவித்த தாய்க்கு ஏற்படக்கூடும்.

    சில குழந்தைகள், பிறந்தது முதல் நான்கு மாதங்கள் வரையில் தூங்குவதற்கு சிரமப்படும். காரணம், பிரசவம் வரை தாயின் கருவறைச் சூழலில் இருந்த குழந்தை அதன் பின்னர் புறஉலகுச் சூழலுக்கு பழகிக்கொள்வதில் எதிர்நோக்கும் சிரமங்கள்தான். தாயின் வயிற்றுக்குள் பனிக்குடத்தில் இருக்கும் குழந்தை, தன் அம்மா நடக்கும்போதும், குனிந்து நிமிரும் போதெல்லாம், பனிக்குடத்தில் தூளி ஆடுவதுபோல, ஆடிக்கொண்டே உறக்கத்தில் இருக்கும்.

    இரவு அம்மா தூங்கும்போது அதற்குத் தூளி அசைவு கிடைக்காது என்பதால், தூக்கம் வராமல் விழித்துக்கொள்ளும். இதனால்தான் கர்ப்பிணிகள் பகலைவிட இரவு நேரத்தில் தங்கள் சிசுவின் அசைவுகளை அதிகமாக உணர்வார்கள். இந்த தூக்க முறையை, சில குழந்தைகள் பிறந்து நான்கு மாதங்கள் வரையிலும் தொடர்வார்கள். இரவில் குழந்தைகள் தூங்காமல் இருக்க இதுவும் ஒரு காரணம். இந்த முறையை மாற்றுவதற்கு, குழந்தையின் பகல் தூக்கத்தின் அளவைக் குறைப்பதிலிருந்து ஆரம்பித்து சில விஷயங்களை மேற்கொள்ளலாம்.

    பகல் நேரத்தில் குழந்தையைக் கதவுகள், ஜன்னல்கள் அனைத்தும் சாத்தப்பட்ட கும்மிருட்டு சூழலில் தூங்க வைக்காமல், இயல்பான வெளிச்சம் உள்ள சூழலில் உறங்க வைக்கலாம். இது நீடித்த உறக்கத்தை தவிர்க்கச் செய்யும். இரவில் குழந்தை உறங்கும் அறை வெளிச்சம், ஓசைகள், ஒளிர்திரைகள் இன்றி இருக்க வேண்டும்.

    குழந்தைக்கு வீட்டுப் பெரியவர்களின் பேச்சு, கிரைண்டர், மிக்ஸி, தொலைக்காட்சி போன்ற சத்தங்களைப் பழக்க வேண்டும். அப்போதுதான் புற ஒலிகளுக்கும், புறச்சூழலுக்கும் இணக்கம் ஆவார்கள். கடைகளில் ‘நேப் பெட்‘ என்பது கிடைக்கும். அது கருவறை போன்றதோர் உணர்வை கொடுக்கும் என்பதால் அதைப் பயன்படுத்தி குழந்தைகளை உறங்க வைக்கலாம்.

    குழந்தை விழித்திருக்கும்போது பாலூட்டுவது, குளிக்க வைப்பது, சிறுநீர், மலம் சுத்தம் செய்வது என அம்மாவுக்கு தொடர்ச்சியாக வேலை இருந்துகொண்டே இருக்கும். அதனால், பகலோ இரவோ, குழந்தை உறங்கும் நேரமெல்லாம் தாயும் உறங்கி ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்.

    தூக்கமின்மை பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுகிற தாய்மார்கள், இரவு வேளைகளில் தூக்கம் தொலைக்காமல் இருக்க, பிரஸ்ட் பம்ப்‘ மூலம் பாலை எடுத்துச் சேமித்து வைத்து, குழந்தைக்கு வேறு யார் மூலமாகவாவது அதைப் புகட்டச் சொல்லலாம். பசி, அழுத்தும் உடைகள், மூச்சு விடுவதில் சிரமம், உடல்நலக் குறைவு எனக் குழந்தைகள் இரவில் தூங்காமல் அழுவதற்குக் காரணங்கள் பல என்பதால், அவற்றையும் கண்காணிக்க வேண்டும்.
    பெற்றோர் குழந்தைகள் தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும். பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.
    பெற்றோர் குழந்தைகள் தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும். பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.

    * குழந்தை தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும். பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.

    * தண்டனையின் அளவு குற்றத்தைப் பொறுத்ததாக இருக்க வேண்டும். மாறாக பெற்றோரின் மன நிலையைப் பொறுத்ததாக இருக்கக் கூடாது.

    * தண்டனை குழந்தை செய்த தவறைப் புரிய வைப்பதாக இருக்க வேண்டும். உடலைக் காயப்படுத்துவதாக அமையக் கூடாது.

    * தண்டித்த உடனே பாசத்தைக் காட்டாது, குழந்தை தன தவறைப் புரிந்து கொண்டவுடன் அதிகப் பாசத்தைக்காட்டலாம்.

    * தண்டனை கொடுத்தது குழந்தை செய்த தவறுக்குத்தான், அதன் மீதுள்ள வெறுப்பினால் அல்ல என்பதைக் குழந்தைக்குப் புரிய வைக்க வேண்டும்.

    * குழந்தை தவறு செய்தால் உடனே தண்டிக்க வேண்டும். நீண்ட நேரம் கழித்துத் தண்டிப்பது முறையல்ல.

    * குழந்தை தவறு செய்தால், தொடர்ந்து தண்டிக்க வேண்டும். ஒரு முறை தண்டிப்பதும், மறுமுறை ஊக்குவிப்பதாகவும் இருந்தால் குழந்தையின் தவறுகள் தொடரும்.

    * குழந்தை மீது பாசம் உள்ளவர்கள் தண்டித்தால் உடனடி பலன் கிடைக்கும். தொடர்ந்து வெறுப்புக் காட்டி வருபவர் தண்டித்தால் எதிர் விளைவுகள் தான் உருவாகும்.

    * குழந்தையைத் தண்டிக்கும் முன் செய்த தவறு பற்றியும் கொடுக்கப் போகும் தண்டனை பற்றியும் குழந்தையிடம் சொல்லி விட வேண்டும்.

    * தண்டனைக்கு உடல் ரீதியான அணுகு முறையை விட மனரீதியான அணுகு முறையே சிறந்தது.
    ×