search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வி"

    இந்தியாவில் கல்வி கற்காமல் 40 சதவீத சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் முடங்கியிருப்பதாகவும், அவர்களில் 5 சதவீதம் பேரை அடையாளம் கண்டுவிட்டதாகவும் இந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

    ‘பெண்களின் கல்வி' என்ற தொண்டு நிறுவனம், கிராமப்புறங்களில் கல்வி கற்காமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களிடத்தில் மீண்டும் கல்வியை கொண்டு சேர்க்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.
     
    கிராமப்புற பெண்களின் கல்வித்திறனை மேம்படுத்தி சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும், கல்வியிலும் சமமான உரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே இந்த தொண்டு நிறுவனத்தின் நோக்கமாகும். அதனை முன்னிறுத்தி இந்த கல்வி சேவையை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்காமல் இல்லை.

    இதுவரை இந்தியாவில் 13 லட்சம் சிறுமிகள் இந்த நிறுவனத்தின் முயற்சியால் கல்வி பயின்றிருக்கிறார்கள். இந்த நிலையில், இந்தியாவில் கல்வி கற்காமல் 40 சதவீத சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் முடங்கியிருப்பதாகவும், அவர்களில் 5 சதவீதம் பேரை அடையாளம் கண்டுவிட்டதாகவும் இந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அவர்களுக்குப் பொதுவான கல்வி அறிவைக்கொடுத்து, அவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

    இதற்காக அரசு மற்றும் தன்னார்வலர்களுடன் அந்நிறுவனம் கைகோர்த்துள்ளது. '2022 தீர்வு வகுப்புகள்' என அத்திட்டத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. மஸாசுசெட்ஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு முக்கியமான 7 பாட பிரிவுகளில் கற்பிக்கவுள்ளனர்.

    தொழில்முனைவோர்கள் இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து உரையாற்றுகிறார்கள். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் கிராமப்புறங்களில் வாழும் பள்ளியில் சேராத மற்றும் கல்வியை இடைநிற்றல் செய்த சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை இதற்காக தேர்வு செய்ய உள்ளனர்.
    அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளிகளில் சேராத அல்லது பாதியில் படிப்பை கைவிட்ட பெண்கள் மற்றும் திருநங்கைகளை கண்டறியவும், அவர்களின் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் சேர்க்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    உயர் கல்வி படிப்பை தொடரும் விஷயத்தில் மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்து வந்தது. தற்போது அந்த நிலை மாறிக்கொண்டிருக்கிறது. அதுபோல் பெண் பிள்ளைகள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிடும் நிலையும் மாறிக்கொண்டிருக்கிறது.

    இதனை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் உறுதி செய்துள்ளது. பள்ளி மாணவிகள் இடை நிற்றல் விகிதம் குறைந்துள்ளதாக மத்திய மந்திரி அன்ன பூர்ணா தேவி தெரிவித்துள்ளார்.

    2019-2020-ம் ஆண்டில் தொடக்க கல்வி பயின்ற மாணவிகளின் இடை நிற்றல் விகிதம் 1.2 சதவீதமாக இருந்தது. 2018-19-ம் ஆண்டுகளில் மேல் நிலை படிப்பில் மாணவிகளின் இடை நிற்றல் விகிதம் 17 சதவீதத்தில் இருந்து 15.1 சதவீதமாக குறைந்துள்ளது. அதுவே 2017-18-ம் ஆண்டுகளில் இடை நிற்றல் விகிதம் 18.4 சதவீதமாக இருந்தது.

    பீகார் மாநிலத்தில்தான் இடை நிற்றல் விகிதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து மூன்று ஆண்டு களாக 13.3 சதவீதம் (2017-18), 12.9 சதவீதம் (2018-19), 9.2 சதவீதம் (2019-20) இடை நிற்றல் விகிதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலம் 2017-18 மற்றும் 2019- 20-ம் ஆண்டுகளில் முறையே 35.2 சதவிகிதம், 32.9 சதவிகிதத்துடன் அதிக இடைநிறுத்தல் விகிதத்தைக் கொண்டுள்ளது. இங்கு இடை நிற்றல் விகிதம் அதிக எண்ணிக்கை கொண்டிருந்தாலும் படிப்படியாக குறைந்து வருகிறது.

    7-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு பள்ளியிலும் தனி கழிவறைகள் கட்டப்பட்டு வருவதாகவும் மத்திய மந்திரி அன்னபூர்ணா தேவி தெரித்துள்ளார்.

    மேலும் ‘‘அனைத்து நிலைகளிலும் பாலின இடைவெளியைக் குறைக்கும் முயற்சியாக, கல்வியில் பின்தங்கிய நிலையில் இருக்கும் பகுதிகளில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயாக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகள் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பின்தங்கிய வகுப்பை சேர்ந்த பெண்களுக்கான உண்டு உறைவிட பள்ளிகளாக செயல்படும்’’ என்றும் கூறி உள்ளார்.

    தற்போது, நாடு முழுவதும் 10,5018 கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகளில் 6 லட்சத்து 65 ஆயிரம் பெண்கள் சேர்ந்துள்ளனர்.

    அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளிகளில் சேராத அல்லது பாதியில் படிப்பை கைவிட்ட பெண்கள் மற்றும் திருநங்கைகளை கண்டறியவும், அவர்களின் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் சேர்க்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    சமூகவாரியாக பார்த்தால், பொதுப்பிரிவு மாணவர்களை விட எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினரின் கல்வித்திறன் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.
    புது டெல்லி:

    தேசிய அளவில் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் சி.பி.எஸ்.இ ஆய்வு நடத்தியது. 

    கடந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி, 720 மாவட்டங்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த சுமார் 34 லட்சம் மாணவர்கள் இதில் பங்கேற்றனர். கிராமப்புறம், நகர்ப்புறங்களை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் ஆகியவற்றை சேர்ந்த மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 

    தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரித்த கேள்விகள், 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. 3, 5, 8, 10 ஆகிய வகுப்புகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இந்த ஆய்வு முடிவுகளில் கூறியிருப்பதாவது:- 

    கணித பாடத்தை கற்றுக்கொள்ளும் திறனில் தொடக்க வகுப்புகளில் மாணவ, மாணவிகள் இடையே சமமான நிலை காணப்படுகிறது. ஆனால் அடுத்தடுத்த வகுப்புகளில் இருதரப்புக்கும் இடையே இடைவெளி அதிகரிக்கிறது. 3-ம் வகுப்பில் கணித பாடத்தில் மாணவிகளின் தேசிய சராசரி மதிப்பெண் 301 ஆகவும், மாணவர்களின் தேசிய சராசரி மதிப்பெண் 300 ஆகவும் இருந்தது. 

    ஆனால், 10-ம் வகுப்பில் கணித பாடத்தில், மாணவிகளின் தேசிய சராசரி மதிப்பெண் 216 ஆகவும், மாணவர்களின் மதிப்பெண் 219 ஆகவும் இருந்தது. இதன்மூலம் கணித பாடத்தை மாணவிகளை விட மாணவர்கள் சிறப்பாக கற்றுக்கொள்வது தெரிய வந்துள்ளது. அதே சமயத்தில், கணிதத்தை தவிர மற்ற பாடங்களில் மாணவர்களை விட மாணவிகள் சிறப்பாக செயல்படுகிறார்கள். 

    அதுபோல், சமூகவாரியாக பார்த்தால், பொதுப்பிரிவு மாணவர்களை விட எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினரின் கல்வித்திறன் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டும் இதேபோன்ற ஆய்வை மத்திய அரசு எடுத்தது. அந்த ஆய்வுடன் ஒப்பிடுகையில், தற்போதைய ஆய்வில் குறிப்பாக கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் மாணவ-மாணவிகளின் கல்வித்திறன் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

    இவ்வாறு ஆய்வின் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சி படிப்பு அங்கீகாரம் பெற சேலம், நாமக்கல் கல்வி நிறுவனங்களுக்கு இந்திய கல்வி அமைச்சகம் அழைப்பு
    சேலம்:

    இந்திய அரசின் உயர் கல்வி அமைச்சகம் தேசிய கவுன்சில் வகுத்துள்ளபடி ஆசிரியர் கல்விக்கான 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி படிப்பில்  இணைய கல்வி நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்றுள்ளது. 

    தேசிய கல்விக் கொள்கை வழிகாட்டுதல்படி பி.ஏ பி.எட் .,  பி.எஸ்சி. பி. எட்., பிகாம் பி. எட் ஆகிய படிப்புகள் மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் பரிசார்த்த அடிப்படையில் பயிற்றுவிக்கப்பட உள்ளன. இந்தப் படிப்புகளில்  சேருவதற்கான நுழைவுத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்த உள்ளது.

    கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் தேசிய கல்விக் கொள்கை 2020 -ன் படி இதற்கான பாடத்திட்டத்தை வகுத்துள்ளது. இதில் ஒரு மாணவர் ஆசிரியர் கல்வியோடு சேர்த்து தனக்கு வேண்டிய கணிதம், அறிவியல், கலை, பொருளாதாரம் அல்லது வணிகம் ஆகிய சிறப்புத் துறைகளில் பட்டம் பெற உதவுகிறது. 

    இந்த ஒருங்கிணைந்த படிப்பானது அதிநவீன கற்பித்தலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வி, அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல், உள்ளடக்கிய கல்வி மற்றும் இந்தியா மற்றும் அதன் மதிப்புகள், நெறிமுறைகள், கலை, மரபுகள் பற்றிய புரிதல் ஆகியவற்றிலும் ஒரு அடித்தளத்தை நிறுவும்.

    கூடுதல் விவரங்களுக்கு ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (அங்கீகாரம், விதிமுறைகள் மற்றும் நடைமுறை) திருத்த விதிமுறைகள், 2021-ஐப் பார்க்கவும். மத்திய, மாநில அரசு பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சி கல்வி அங்கீகாரம் பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தை மே மாதம் 1 -ம் தேதி முதல் மே மாதம் 31 -ந்தேதி (இரவு 11:59 மணி வரை) சமர்ப்பிக்கலாம்.

    சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், ஈரோடு உள்ளிட்ட  மாவட்டங்களில்  ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள்  பல இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    ×