search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "maths"

    சமூகவாரியாக பார்த்தால், பொதுப்பிரிவு மாணவர்களை விட எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினரின் கல்வித்திறன் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.
    புது டெல்லி:

    தேசிய அளவில் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் சி.பி.எஸ்.இ ஆய்வு நடத்தியது. 

    கடந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி, 720 மாவட்டங்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த சுமார் 34 லட்சம் மாணவர்கள் இதில் பங்கேற்றனர். கிராமப்புறம், நகர்ப்புறங்களை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் ஆகியவற்றை சேர்ந்த மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 

    தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரித்த கேள்விகள், 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. 3, 5, 8, 10 ஆகிய வகுப்புகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இந்த ஆய்வு முடிவுகளில் கூறியிருப்பதாவது:- 

    கணித பாடத்தை கற்றுக்கொள்ளும் திறனில் தொடக்க வகுப்புகளில் மாணவ, மாணவிகள் இடையே சமமான நிலை காணப்படுகிறது. ஆனால் அடுத்தடுத்த வகுப்புகளில் இருதரப்புக்கும் இடையே இடைவெளி அதிகரிக்கிறது. 3-ம் வகுப்பில் கணித பாடத்தில் மாணவிகளின் தேசிய சராசரி மதிப்பெண் 301 ஆகவும், மாணவர்களின் தேசிய சராசரி மதிப்பெண் 300 ஆகவும் இருந்தது. 

    ஆனால், 10-ம் வகுப்பில் கணித பாடத்தில், மாணவிகளின் தேசிய சராசரி மதிப்பெண் 216 ஆகவும், மாணவர்களின் மதிப்பெண் 219 ஆகவும் இருந்தது. இதன்மூலம் கணித பாடத்தை மாணவிகளை விட மாணவர்கள் சிறப்பாக கற்றுக்கொள்வது தெரிய வந்துள்ளது. அதே சமயத்தில், கணிதத்தை தவிர மற்ற பாடங்களில் மாணவர்களை விட மாணவிகள் சிறப்பாக செயல்படுகிறார்கள். 

    அதுபோல், சமூகவாரியாக பார்த்தால், பொதுப்பிரிவு மாணவர்களை விட எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினரின் கல்வித்திறன் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டும் இதேபோன்ற ஆய்வை மத்திய அரசு எடுத்தது. அந்த ஆய்வுடன் ஒப்பிடுகையில், தற்போதைய ஆய்வில் குறிப்பாக கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் மாணவ-மாணவிகளின் கல்வித்திறன் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

    இவ்வாறு ஆய்வின் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கணிதத்துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ஃபீல்ட்ஸ் பதக்கத்தை இந்திய வம்சாவளி ஆசிரியர் அக்‌ஷய் வெங்கடேஷ் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. #FieldsMedal #AkshayVenkatesh
    பிரேசிலியா:

    கணிதத்துறையில் மிக சிறப்பாக தங்களது பங்களிப்பை வெளிப்படுத்தும் மேதைகளுக்கு சர்வதேச கணித கூட்டமைப்பு சார்பில் ஃபீல்ட்ஸ் பதக்கம் வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விருது வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஃபீல்ட்ஸ் விருதுக்கு 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.



    அதில் அக்‌ஷய் வெங்கடேஷும் ஒருவர். அக்‌ஷய் தனது 2 வயதில் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். சிறுவயதிலேயே படிப்பில் சிறந்து விழங்கிய அக்‌ஷய் தனது 20-வது வயதில் பி.எச்.டி பட்டத்தை வென்றார். இவர் தற்போது ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    36 வயதான அக்‌ஷய் வெங்கடேஷ், கணிதத்துறையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பு காரணமாக ஃபீல்ட்ஸ் பதக்கம் பெற்றுள்ளார்.

    நோபல் பரிசுக்கு இணையாக கணிதத்துறையில் இந்த ஃபீல்ட்ஸ் பதக்கம் கவுரவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #FieldsMedal #AkshayVenkatesh
    பிரேசிலில் நோபல் பரிசுக்கு நிகராக கணிதத்துறைக்கு வழங்கப்படும் ஃபீல்ட்ஸ் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில், விருது திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #FieldsMedal #NobelPrize #CaucherBirkar
    பிரேசிலியா:

    உலகின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான நோபல் பல்வேறு முக்கிய துறைகளில் சிறப்பாக செயல்படும் மேதைகளுக்கு வழங்கப்படுவது வழக்கம். கணிதத்துறைக்கு நோபல் பரிசுக்கு இணையாக ஃபீல்ட்ஸ் பதக்கம் வழங்கப்படும். ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச கணித கூட்டமைப்பின் சார்பில் சிறந்த கணித மேதை தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு இந்த பதக்கம் வழங்கப்படும்.

    இந்த ஆண்டு கணிதத்துறைக்கான ஃபீல்ட்ஸ் பதக்கம் காவ்சர் பிர்கார் என்பவருக்கு வழங்கப்பட்டது. இவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலை கழகத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.



    இவருக்கு அளிக்கப்பட்ட பதக்கத்தை தனது பெட்டியில் வைத்திருக்கிறார் காவ்சர் பிர்கார். சிறிது நேரத்துக்கு பிறகு பெட்டி திருடு போனதை அறிந்த அவர், உடனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் புகார் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக உடனடியான சோதனை செய்து பார்த்தபோது, அரங்கத்தில் காலியாக இருந்த பெட்டியை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் திருடனை கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த ஃபீல்ட்ஸ் பதக்கத்தின் விலை 4 ஆயிரம் டாலர்கள் எனவும், அரங்கத்துக்குள்ளேயே உயர்ந்த பரிசு திருடு போனது இதுவே முதல்முறை என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.  #FieldsMedal #NobelPrize #CaucherBirkar
    தமிழகம் முழுவதும் பிளஸ்- 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் கணிதத்தில் 96.19 சதவீதம் மற்றும் இயற்பியல் பாடத்தில் 96.44 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் #PlusTwoExamResults #Plus2Result
    சென்னை:

    பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

    மொழிப்பாடத்தில் 8,60,434 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 8 லட்சத்து 33 ஆயிரத்து 319 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.85 ஆகும்.

    ஆங்கிலம் பாடத்தில் 8,34,370 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.97 ஆகும்.

    இயற்பியல் பாடத்தில் 96.44 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 5 லட்சத்து 44 ஆயிரத்து 553 பேர் தேர்வு எழுதினர். இதில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 163 மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றனர்.

    வேதியியல் பாடத்தில் 5 லட்சத்து 17 ஆயிரத்து 419 பேர் தேர்ச்சி பெற்றனர். 95.02 சதவீதம் தேர்ச்சியாகும்.

    உயிரியல் பாடத்தில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 325 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 10 பேர் வெற்றி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.34 ஆகும்.

    கணிதம் பாடத்தை 4 லட்சத்து 39 ஆயிரத்து 518 பேர் எழுதினார்கள். இதில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 775 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.19 ஆகும்.


    கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை 3,18,167 பேர் எழுதினார்கள். இதில் 3,05,899 பேர் வெற்றி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.14 ஆகும்.

    புவியியல் பாடத்தை 13,972 பேர் எழுதினர். இதில் 13,862 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 99.21 ஆகும். ஹோம் சயின்ஸ் பாடத்தில் 99.78 சதவீதமும், புள்ளியியல் பாடத்தில் 98.31 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர்.

    231 மாணவ-மாணவிகள் 1180 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று சாதனை புரிந்துள்ளனர். இதில் 181 மாணவிகள் அடங்குவர். மீதியுள்ள 50 பேர் மாண வர்கள்.

    1151 -1180 மதிப்பெண் வரை 4847 பேரும், 1126-1150 மார்க்வரை 8510 பேரும், 1101-1125 மதிப்பெண் வரை 11,739 பேரும் பெற்று உள்ளனர். 1001-1,100 மார்க்வரை 71,368 பேரும், 901-1000 மதிப்பெண்வரை 1 லட்சத்து 7 ஆயிரத்து 266 பேர் பெற்றுள்ளனர்.  #PlusTwoExamResults #PlusTwoResults #Plus2Result
    ×