search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "students pass"

    தமிழகம் முழுவதும் பிளஸ்- 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் கணிதத்தில் 96.19 சதவீதம் மற்றும் இயற்பியல் பாடத்தில் 96.44 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் #PlusTwoExamResults #Plus2Result
    சென்னை:

    பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

    மொழிப்பாடத்தில் 8,60,434 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 8 லட்சத்து 33 ஆயிரத்து 319 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.85 ஆகும்.

    ஆங்கிலம் பாடத்தில் 8,34,370 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.97 ஆகும்.

    இயற்பியல் பாடத்தில் 96.44 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 5 லட்சத்து 44 ஆயிரத்து 553 பேர் தேர்வு எழுதினர். இதில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 163 மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றனர்.

    வேதியியல் பாடத்தில் 5 லட்சத்து 17 ஆயிரத்து 419 பேர் தேர்ச்சி பெற்றனர். 95.02 சதவீதம் தேர்ச்சியாகும்.

    உயிரியல் பாடத்தில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 325 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 10 பேர் வெற்றி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.34 ஆகும்.

    கணிதம் பாடத்தை 4 லட்சத்து 39 ஆயிரத்து 518 பேர் எழுதினார்கள். இதில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 775 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.19 ஆகும்.


    கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை 3,18,167 பேர் எழுதினார்கள். இதில் 3,05,899 பேர் வெற்றி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.14 ஆகும்.

    புவியியல் பாடத்தை 13,972 பேர் எழுதினர். இதில் 13,862 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 99.21 ஆகும். ஹோம் சயின்ஸ் பாடத்தில் 99.78 சதவீதமும், புள்ளியியல் பாடத்தில் 98.31 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர்.

    231 மாணவ-மாணவிகள் 1180 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று சாதனை புரிந்துள்ளனர். இதில் 181 மாணவிகள் அடங்குவர். மீதியுள்ள 50 பேர் மாண வர்கள்.

    1151 -1180 மதிப்பெண் வரை 4847 பேரும், 1126-1150 மார்க்வரை 8510 பேரும், 1101-1125 மதிப்பெண் வரை 11,739 பேரும் பெற்று உள்ளனர். 1001-1,100 மார்க்வரை 71,368 பேரும், 901-1000 மதிப்பெண்வரை 1 லட்சத்து 7 ஆயிரத்து 266 பேர் பெற்றுள்ளனர்.  #PlusTwoExamResults #PlusTwoResults #Plus2Result
    தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் -2 தேர்வு எழுதியவர்களில் 92.79 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 91.23 சதவீதம் பேரும், மாணவிகள் 94.92 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். #PlusTwoExamResults #Plus2Result
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் 93 அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 154 பள்ளிகளில் இருந்து 10 ஆயிரத்து 747 மாணவர்களும்,10 ஆயிரத்து 267 மாணவிகளும் என மொத்தம் 21ஆயிரத்து014 பேர் 64 மையங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினர்.

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. தருமபுரி மாவட்டத்தில் இன்று காலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அப்போது உடன் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) பொன்முடி உடனிருந்தார்.

    தேர்வு முடிவுகளில் 9ஆயிரத்து 804 மாணவர்களும், 9 ஆயிரத்து 694 மாணவிகள் என மொத்தம் 19ஆயிரத்து 498 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் கண் பார்வையற்றவர்கள் 5பேர் தேர்வு எழுதி 4 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். காதுகேளாதவர்களில் 15 பேர் எழுதி 13 பேர் தேர்ச்சி பெற்றுள்னர். ஊனமுற்றவர்களில் 46 பேர் தேர்வு எழுதி 37 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், கையால் எழுத முடியதாவர்கள், காயம் அடைந்தவர்கள் உள்பட 12 பேர் தேர்வு எழுதி 11 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் -2 தேர்வு எழுதியவர்களில் 92.79 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 91.23 சதவீதம் பேரும், மாணவிகள் 94.92 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கடந்த ஆண்டு 92.23 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு 92.79 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பதால் இது கடந்த ஆண்டைவிட 0.56 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

    தருமபுரி மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்களில் 2 பேர் 1180க்கும் மேல் மதிப் பெண்களும், 78 பேர் 1151க்கு மேல் மதிப்பெண்களும், 196 பேர் 1125-க்கும்மேல் மதிப்பெண்களும், 315 பேர் 1000-க்கும் மேல் மதிப் பெண்களும் பெற்றுள்ளனர். #PlusTwoExamResults #PlusTwoResults #Plus2Result
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை இணையதளங்களில் அறிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. #Plus2Result #HSCResult #+2Result
    சென்னை:

    தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 8 லட்சத்து 66,934 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. காலை 9.30 மணிக்கு சென்னை டிபிஐ வளாகத்தில் அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசந்தராதேவி, தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, ww.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

    மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

    பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்பட்டுள்ளது. தனித்தேர்வர்களுக்கும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.


    இந்த ஆண்டு 91.1 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் குறைவு ஆகும்.  இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் (94.1 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களில் 87.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1907 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

    கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ரேங்க் பட்டியல் வெளியிடப்படவில்லை என்பது குறிப்படத்தக்கது. #Plus2Result #HSCResult #+2Result 
    ×