என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Babies"

    • குழந்தைகள், முதல் சிரிப்பை வெளிப்படுத்த சுமார் 6-8 வாரங்கள் ஆகும்.
    • பிறந்த குழந்தை எவ்வளவு அழுதாலும் கண்களில் இருந்து கண்ணீர் வராது.

    ஒரு உடலுக்குள் ஒரு உயிர் கருவாகி உருவாகி பூமியில் பிறத்தல் என்பது இறைவன் படைப்பில் ஆச்சர்ய விஷயங்களில் ஒன்று. அந்தவகையில் பிறந்த குழந்தைகள் பற்றி நாம் பலரும் அறிந்திடாத சில சுவாரசிய தகவல்கள் குறித்து பார்ப்போம். 

    குழந்தைகள் கண்ணீர் விட்டு அழுவதில்லை...

    உலகிற்கு வரும்போதே குழந்தை அழுதுகொண்டேதான் வருகிறது. அப்படி பிறக்கும்போது குழந்தை அழவில்லை என்றால், அதனை அழவைக்க மருத்துவர்கள் சில உத்திகளை பயன்படுத்துவர். குழந்தை அழுதால்தான் தாயிடம் கொடுப்பர். இதில் ஒரு விஷயத்தை கவனித்துள்ளீர்களா? பிறந்த குழந்தை எவ்வளவு அழுதாலும் கண்களில் இருந்து கண்ணீர் வராது. இதற்கு என்ன காரணம் தெரியுமா..? பிறந்த குழந்தைகளுக்கு அவர்களது கண்ணீர் குழாய்கள் முழுமையாக வளர்ச்சியடைந்திருக்காது. கண்ணீர் குழாய்கள் முழுமையாக வளர்ச்சியடைய சில வாரங்கள் ஆகும். அதற்கு பின்தான் குழந்தைகள் கண்ணீர்விட்டு அழுவார்கள். 

    300 எலும்புகளுடன் பிறக்கின்றனர்

    பொதுவாக மனிதர்களுக்கு 206 எலும்புகள்தான் இருக்கும் என்பதை நாம் அறிவோம். ஆனால் புதிதாக பிறக்கும் குழந்தைகளின் உடலில் 300 எலும்புகள் இருக்கும் என்றால் நம்புவீர்களா? ஆம். அப்போது மீதமுள்ள 94 எலும்புகள் எங்கு செல்லும் என நாம் யோசிப்போம். குழந்தைகளின் எலும்புகள் பல குறுத்தெலும்புகளால் ஆனவை. இவை வளரும்போது ஒன்றாக இணைகின்றன. காலப்போக்கில் குறுத்தெலும்புகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து பெரியவர்களில் காணப்படும் எலும்பு அமைப்பை உருவாக்குகின்றன. 

    10,000 சுவை மொட்டுகள்

    புதிதாக பிறக்கும் குழந்தைகள் சுமார் 10 ஆயிரம் சுவை மொட்டுகளுடன் பிறக்கின்றன. சுவை மொட்டுகள் என்பது நாக்கில் உள்ள சுவை உணர்திறன் கொண்ட செல்களாகும். இவை சுவையை உணர உதவுகின்றன. இந்த எண்ணிக்கை பெரியவர்களுக்கு இருப்பதைவிட பலமடங்கு அதிகம். இந்த மொட்டுகள் அவர்களின் நாக்கில் மட்டுமல்ல, கன்னங்களின் உட்புறத்திலும், வாயின் மேற்புறத்திலும், தொண்டையிலும் உள்ளன. இவை குழந்தைகளுக்கு இனிப்பு, கசப்பு, புளிப்பு போன்ற சுவை உணர்வுகளை வேறுபடுத்தி அறிய உதவுகின்றன. அதனால்தான் குழந்தைகளுக்கு தேன் அல்லது புதிதாக சில பொருட்களை கொடுக்கும்போது அவ்வளவு பாவனைகளை முகத்தில் காட்டுவர். குழந்தைகள் வளர வளர இந்த சுவை மொட்டுகளின் எண்ணிக்கை குறைந்து நம்மை போலவே சுவைதிறனை கொண்டிருப்பர்.


    குழந்தைகள் தங்கள் முதல் புன்முறுவலை வெளிப்படுத்த 6-8 வாரங்கள் ஆகும்

    வலது பக்கம் தலைசாய்க்க விரும்புவார்கள்

    பிறந்த குழந்தைகளை படுக்க வைக்கும்போது அவர்கள் பெரும்பாலும் கழுத்தை வலதுபக்கம் வைத்து தூங்கவே விரும்புவர். இதை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? சுமார் 70-80% குழந்தைகள் இதைத்தான் செய்கிறார்கள். 2017ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இது அவர்களின் மூளை வளர்ச்சி மற்றும் இயக்க ஒருங்கிணைப்புடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டது.

    புன்னகைக்காக காத்திருக்க வைப்பர்

    பிறந்த குழந்தைகள் அதிகம் அழுதுதான் பார்த்திருப்போம். அவர்கள் முதல் வாரத்திலேயே சிரித்து யாரும் பார்த்திருக்கமாட்டார்கள். பெரும்பாலான குழந்தைகள் தங்கள் முதல் புன்முறுவலை வெளிப்படுத்த சுமார் 6-8 வாரங்கள் ஆகும். அதற்கு முன்னர் நீங்கள் பார்த்திருக்கும் முக அசைவுகள் அல்லது சிரிப்பு அனிச்சையானவை. அவர்களாக செய்திருக்க மாட்டார்கள். உங்கள் குரலை உணர தொடங்கும்போது உங்களுக்கு புன்னகையை பரிசாக அளிப்பார்கள். இதற்கு குறைந்தது 6 வாரங்கள் எடுக்கும்.

    • குழந்தைகளின் செரிமான அமைப்பு மிகவும் குறைந்த திறனை கொண்டது.
    • குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும்போது காற்றை விழுங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    பிறந்தது முதல் தவழும்வரை குழந்தைகளிடம் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை அடிக்கடி எதுக்களிப்பது, சாப்பிட்ட உடன் வாந்தி எடுப்பது. இது நோய் அல்ல. ஆனால் உணவு உடனேயே வெளியேவந்தால், போதுமான அளவு வயிறு நிறையாது. சத்தும் கிடைக்காது. பிறந்த குழந்தைகளின் செரிமான அமைப்பு மிகவும் மென்மையாக இருக்கும். மேலும் அவர்களின் வயிற்றில் உள்ள வால்வுகள் இணக்கமாக வேலை செய்யாது. இதன் விளைவாக, தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தைகள் காற்றை எளிதில் விழுங்கலாம். இந்த அதிகப்படியான காற்று அசௌகரியத்தை ஏற்படுத்தி, உணவளித்த பிறகு எச்சில் ஊறவும், வாந்தி எடுக்கவும் வழிவகுக்கும். குழந்தைகள் சாப்பிட்ட உடனேயே அதனை வெளியே உமிழாமல் இருக்க தாய்மார்கள் தங்கள் தாய்ப்பால் கொடுக்கும் நுட்பங்களை கொஞ்சம் மாற்றினாலே அவற்றை தடுக்கலாம். 

    கொஞ்சம் கொஞ்சமாக...

    குழந்தைகளின் செரிமான அமைப்பு மிகவும் குறைந்த திறனை கொண்டது. இதனால் குழந்தைக்கு ஒரே நேரத்தில் அதிகமாக உணவளிக்காமல், நேர இடைவெளி எடுத்து கொடுக்கவேண்டும். ஒவ்வொரு முறையும் குறைந்த அளவு பால் கொடுக்க வேண்டும். இது விரைவாகவும், எளிதிலும் ஜீரணமாக உதவும். 

    தாய்ப்பால் கொடுத்த உடன் படுக்க வைக்கக்கூடாது

    பிறந்த குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும்போது காற்றை விழுங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் பால் கொடுத்தவுடன் உடனேயே குழந்தையை படுக்கவைக்கக்கூடாது. கொஞ்சநேரம் தோளில் வைத்துக்கொண்டு, பின்னர் படுக்கவைக்கலாம். குழந்தையை உடனடியாக படுக்க வைத்தால், எச்சில் ஊறவும், வாந்தி எடுக்கவும் அதிக வாய்ப்புள்ளது.  

    அளவு

    நாம் குழந்தைகளுக்கு எந்த அளவு பால் அல்லது உணவுக் கொடுக்கிறோம் என்பது மிக முக்கியம். பால் கொடுத்த கொஞ்ச நேரத்திலேயே குழந்தை அழுதால், பசிக்கிறது என்று மீண்டும் பால் கொடுப்பார்கள். அப்போது வயிற்றில் இடம்கொள்ளாமல் உணவு மேலே எகித்து கொண்டுவரும். அதுபோல குழந்தைகளை வேகமாக பால்குடிக்க விடக்கூடாது. புரை ஏறிவிடும். இதனால் குடித்த மொத்த பாலும் வெளியே வந்துவிடும். குழந்தையை மெதுவாக மட்டுமே பால் குடிக்க பழக்க வேண்டும். அதேபோல் ஒரேநேரத்தில் அதிகமாக பால் கொடுக்கக்கூடாது.


    குழந்தைகளுக்கு ஒரேநேரத்தில் அதிகமாக பால் கொடுக்கக்கூடாது

    சிகரெட் புகையை தவிர்க்க வேண்டும்

    சிகரெட் புகை குழந்தைகளின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும். சிகரெட் புகையை குழந்தை சுவாசித்தால், வயிற்றில் அதிக அமிலம் உற்பத்தியாக வழிவகுக்கும். இதனால் குழந்தைக்கு அருகில் யாரேனும் புகைபிடித்தால் அவர்களை தள்ளி செல்ல சொல்லுங்கள். அல்லது குழந்தையை வேறு இடத்திற்கு மாற்றுங்கள். 

    கால்சியம் குறைபாடு

    தூக்கத்தில் சிரமம் அல்லது இருமல், அடிக்கடி எச்சில் துப்புதல், வாந்தி எடுத்தல் போன்றவை குழந்தைக்கு கால்சியம் குறைபாடு இருப்பதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். இதனால் கால்சியம் உள்ள உணவுப்பொருட்களை குழந்தைக்கு வழங்கலாம்.

    • குழந்தையின் கனவில் நரி வந்து விளையாட்டு காட்டுமா?
    • அனிச்சை போன்றது! வலிப்புத் தாக்கத்தால் கூட குழந்தை சிரிக்கக்கூடும்?

    குழந்தை சிரிப்பை பார்த்தாலே நம் மனதில் ஒரு புன்னகை எழும். குழந்தைகள் சிரிக்கும்போது நாமும் அவர்களோடு சேர்ந்து புன்னகைப்போம். அவர்களின் சிரிப்பை ரசிப்போம். குழந்தை விழித்திருக்கும்போது சிரிப்பது சரிதான். ஆனால் தூங்கும்போதும் சிலநேரங்களில் சிரிப்பார்கள். இதனை பலரும் கவனித்திருப்போம். அந்தப் புன்னகையின் அர்த்தம் என்ன? தூங்கும்போது குழந்தை சிரிப்பதற்கான காரணம் என்னவென பலரும் யோசித்திருப்போம். அதற்கு பலரும் நரி கனவில் வந்து விளையாட்டு காட்டும் எனக்கூறுவார்கள். ஆனால் அதற்கான உண்மையான காரணத்தைத்தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

    மூன்று தூக்க நிலைகள்...

    பெரியவர்கள், கனவில் நேர்மறையான விஷயங்கள் நடந்தால் சிரிப்பார்களாம். ஆனால் குழந்தை விஷயத்தில் அது உண்மையா என தெரியவில்லை. இதற்கான ஆராய்ச்சிகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. குழந்தையின் வயது, தூக்கத்தின் நிலையை பொறுத்து அவர்கள் சிரிப்பதற்கான காரணங்கள் மாறுபடும் எனக் கூறப்படுகிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தூக்க சுழற்சியில் மூன்று நிலைகள் உள்ளனவாம். அமைதியான தூக்கம், நிச்சயமற்ற தூக்கம் மற்றும் சுறுசுறுப்பான தூக்கம். சுறுசுறுப்பான தூக்கம் என்பது பெரியவர்களில் காணப்படும் விரைவான கண் அசைவு (REM) தூக்க நிலையைப் போன்றது. விரைவான கண் அசைவு தூக்கநிலையில் தூங்குபவர் தெளிவாக கனவு காணும் போக்கைக் கொண்டுள்ளனர்.

    ஆனால் சுறுசுறுப்பான தூக்கத்திற்கும், REM தூக்கத்திற்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால், சுறுசுறுப்பான தூக்கத்தின் போது குழந்தைகள் முடங்கிப் போவதில்லை. சுறுசுறுப்பான தூக்கத்தில் இருக்கும்போது, ஒரு குழந்தை நடுங்கலாம், உறிஞ்சும் அசைவுகளைச் செய்யலாம், கைகால்களை அசைக்கலாம், புன்னகைக்கலாம் அல்லது முகம் சுளிக்கலாம். தூக்கத்தின் போது குழந்தை சிரிப்பது அனிச்சை போன்றது என்று பழைய ஆராய்ச்சிகள் விவரித்துள்ளன. தூக்கத்தின்போது ஏற்படும் தன்னிச்சையான புன்னகைகள், புன்னகைக்கப் பயன்படுத்தப்படும் தசைகளை வளர்க்க உதவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். 


    குழந்தைகள் தூக்கத்தில் சிரிக்க வலிப்புத் தாக்கமும் முக்கிய காரணமாக இருக்கலாம்

    வலிப்புத் தாக்கம்...

    பொதுவாக, ஜெலாஸ்டிக் வலிப்புத் தாக்கத்தால் (சிரிக்கும் வலிப்புத் தாக்கம்) ஒரு குழந்தை சிரிக்கக்கூடும். ஜெலாஸ்டிக் வலிப்புத் தாக்கம் என்பது ஒரு வகை வலிப்புத் தாக்கமாகும். இது திடீரென சிரிப்பை ஏற்படுத்துகிறது. குழந்தைகள் தூங்கும் தருவாயில் இருக்கும்போது ஜெலாஸ்டிக் வலிப்பு ஏற்படலாம். தூக்கத்தின் போது ஜெலாஸ்டிக் வலிப்பு ஏற்பட்டால், குழந்தை விழித்தெழுந்து, வலிப்பு முடிந்ததும் மீண்டும் தூங்கச் செல்லலாம். ஜெலாஸ்டிக் வலிப்புத் தாக்கங்கள் 10 அல்லது 20 வினாடிகள் மட்டுமே நீடிக்கும். மேலும் அவை முகம் சுருங்குதல், முணுமுணுத்தல் அல்லது உதடுகளை அசைத்தல் போன்ற பிற அறிகுறிகளுடன் ஏற்படலாம். பொதுவாக, புதிதாகப் பிறந்த குழந்தையின் முகபாவனைகள், ஒரு பெரியவரின் முகபாவனைகளைப் போல் இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது, எல்லா உணர்ச்சிகளையும் ஒரு மனிதன் வெளிக்காட்டமாட்டான். சில சூழல்களை புன்னகையுடன் கடப்பான். அதுபோல சில நேரங்களில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் உண்மையில் மகிழ்ச்சியற்ற நிலையில் இருக்கும்போதும் கூட சிரிப்பார்களாம். 1 வயதான குழந்தைகளிலும் கூட சிரிப்பு என்பது மகிழ்ச்சியாக இருப்பதற்கான வெளிப்பாடு இல்லை எனக் கூறப்படுகிறது. 2 மாதம்வரை குழந்தைகள் தங்கள் முழு புன்னகையை வெளிப்படுத்தமாட்டார்கள். குழந்தைகள் நேரடியாக ஒருவரைப் பார்க்காமலேயே புன்னகைப்பார்கள். இது சாதரணமானது. ஆனால் குழந்தையுடன் அதிகம் இருப்பவர்கள் அதாவது அவர்களின் பெற்றோர்களோ அல்லது பராமரிப்பாளர்களோ அல்லது அவர்களை கவனித்து கொள்பவர்களோ சோகமாகவோ அல்லது மனசோர்வுடனோ இருந்தால் குழந்தைகள் குறைவாகவே சிரிக்கிறார்கள் என்று ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. இதனால் முடிந்தவரை குழந்தை பராமரிப்பாளர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். 

    • குழந்தைகள் அழும்போது பெற்றோர்கள் பலரும் நினைப்பது, எப்படியாவது குழந்தையை தூங்க வைத்துவிடவேண்டும் என்பதுதான்.
    • மென்மையான இசை, ஹம்மிங் மற்றும் பாடல் போன்ற அமைதியான ஒலிகள் குழந்தையை அமைதிப்படுத்த உதவும்.

    பெற்றோர்கள் குழந்தை அழும்போது குழந்தையை சமாதானப்படுத்த, எதற்காக அழுததோ, அதிலிருந்து கவனத்தை திசைதிருப்ப பல முயற்சிகளை மேற்கொள்வர். சிலநேரங்களில் இந்த செயல் வெற்றியடையும். ஆனால் சிலநேரங்களில் என்ன செய்தாலும் குழந்தைகளின் அழுகையை நிறுத்தமுடியாது. அப்போது பெற்றோர்கள் பலரும் நினைப்பது, எப்படியாவது குழந்தையை தூங்க வைத்துவிடவேண்டும் என்பதுதான். பகலிலேயே இப்படித்தான் நடக்கும். அப்போது இரவில் குழந்தைகள் அழுவதை நினைத்துப் பாருங்கள். சிலநேரங்களில் இரவில் திடீரென குழந்தைகள் அழ ஆரம்பிப்பார்கள். இரவில் திடீரென குழந்தை அழுவதற்கான காரணங்கள் பலருக்கும் தெரியாது. இதற்கு சில பொதுவான காரணங்கள் சில உள்ளன. அதுகுறித்து பார்ப்போம்.

    பசி

    இளம் குழந்தைகளின் வயிறு சிறியதாக இருப்பதால் அடிக்கடி உணவளிக்க வேண்டும். உணவளிக்கும் இடைவெளி மாறலாம் என்றாலும்,  ஒவ்வொரு 2-3 மணி நேரத்திற்கும் ஒருமுறை குழந்தைக்கு பால் அல்லது திரவ உணவுகளை கொடுக்கவேண்டும். புதிதாகப் பிறந்த குழந்தைகள் பகலில் எழுந்திருப்பதைப் போலவே இரவில் அடிக்கடி பசியில் எழுந்திருப்பார்கள். குழந்தைகளின் தூக்கமுறை பகல், இரவு என பெரிய வித்தியாசத்தை கொண்டிருக்காது. முதல் மூன்றுமாதம் வரை குழந்தைகள் அதிகநேரம் தூங்குவார்கள். 

    பல் முளைப்பு

    குழந்தைகள் அழ மற்றொரு காரணமாக இருப்பது பல் முளைப்பது. பொதுவாக குழந்தைகளுக்கு 6 மாத வயதில் இருந்து பல் முளைக்கத் தொடங்கும். இது பொதுவானது. ஒவ்வொரு குழந்தைக்கும் பல்முளைக்கும் காலம் மாறுபடும். பல் முளைப்பது குழந்தைக்கு வலியை கொடுக்கும். மேலும் பல் முளைப்பது குழந்தைக்கு காய்ச்சலை ஏற்படுத்தும். அந்த காலக்கட்டத்தில் குழந்தைகள் அழுவார்கள். அப்போது காய்ச்சலுக்கான மருந்து கொடுக்கலாம். அல்லது குழந்தையில் ஈறில் சுத்ததான விரலால் மெதுவாக தேய்ப்பதன் மூலம் குழந்தையை ஆற்றலாம். 

    வயிற்றுவலி

    குழந்தை ஆரோக்கியமாக இருந்தும், இரவில் காரணமே இல்லாமல், ஒரு நாளைக்கு 3 மணி நேரத்திற்கும் மேலாகவும், வாரத்தில் குறைந்தது 3 நாட்களாவது அழுகிறதென்றால், அவர்களுக்கு வயிற்று வலி இருக்கலாம். 5 குழந்தைகளில் 1 குழந்தையை வயிற்று வலி பாதிக்கலாம். இது ஆரம்பகாலத்தில் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனைதான். குழந்தைக்கு 3 முதல் 4 மாதங்கள் ஆகும்போது இந்தப் பிரச்சினை சரியாகிவிடும். அப்போதும் சரியாகவில்லை என்றால் மருத்துவரை அணுகலாம். 

    மலச்சிக்கல்

    மலச்சிக்கல் இருந்தாலும் குழந்தைகள் அழுவார்கள். தாய்ப்பால் இல்லாமல் ஃபார்முலா பால் குடிக்கும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஃபார்முலா பால் குடிக்கும் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்படுவதைத் தவிர்க்க, பரிந்துரைக்கப்பட்டபடி சரியான அளவு ஃபார்முலா பவுடர் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்துகிறீர்களா என்பதைச் சரிபார்க்கவும். வேறு ஏதேனும் காரணங்களால் மலச்சிக்கல் ஏற்பட்டால்  மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும். 


    2 முதல் 3 மாதக்குழந்தைகளுக்கு இரவில் அடிக்கடி பசி எடுக்கும்

    குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் பொதுவான காரணிகள்;

    • மிக விரைவாகவோ அல்லது அதிகமாகவோ பால் குடிப்பது குழந்தைக்கு உடல்நலக் குறைவை ஏற்படுத்தும். அதனால் குழந்தைகள் அதிகமாக பால் குடிக்க கட்டாயப்படுத்தாதீர்கள்.
    • இரண்டாவது தாய்ப்பால் கொடுக்கும்போது அவர்களை எப்படி வைத்து பால் கொடுக்கிறீர்கள் என்பது முக்கியம். அதற்கான முறையை பின்பற்றி அதற்கு தகுந்தாற்போல பால்கொடுக்கவேண்டும்.
    • குழந்தையை அசௌகரியப்படுத்தும் மற்றொரு காரணி ஈரத்துணி. குழந்தைகள் சிறுநீர் கழித்ததை கவனிக்காமல் இருக்கும்போது அந்த ஈரம் அவர்களை எரிச்சலடைய செய்யும்.
    • குழந்தைகள் அதிக சூடாகவோ அல்லது அதிக குளிராகவோ உணர்ந்தால் அழக்கூடும். மேலும் குழந்தையின் உடைகள் மிகவும் இறுக்கமாகவும், சங்கடமாகவும் இருந்தாலும் அழுவார்கள். 

    மேற்கூறியவைகளை கருத்திற்கொண்டு குழந்தையை கவனித்துப் பாருங்கள். இவையெல்லாம் பொதுவான காரணங்கள்தான். அப்படி இந்த காரணங்கள் எதுவும் இல்லையென்றால் மருத்துவரை அணுகுங்கள். 

    • நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜீனத் வஹீத்துக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
    • பிரசவத்துக்கு பின்னர் தாயும், குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டியைச் சேர்ந்தவர் முகமது வஹீத்தின் மனைவி ஜீனத் வஹீத் (வயது 27). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு ராவல்பிண்டியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு ஒரே நேரத்தில் 2 பெண் குழந்தைகள் உள்பட அழகான 6 குழந்தைகள் பிறந்தனர்.

    பிரசவத்துக்கு பின்னர் தாயும், குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். எனினும் பாதுகாப்பு கருதி தற்போது அந்த குழந்தைகள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டு உள்ளனர்.

    • இயற்கை உணவு வகைகள் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
    • உடுமலை பகுதியில் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கும் உதவி செய்து வருகிறார்.

    உடுமலை :

    உடுமலை வ. உ. சி. வீதியில் செயல்பட்டு வருகிறது ஆராதனா கபே. இங்கு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நாள்தோறும் இயற்கை உணவு வகைகள் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்த கடையின் உரிமையாளர் செல்வகுமார் அவரது மனைவி ஸ்ரீ சத்யா இருவரும் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர்.

    ஸ்ரீ சத்யா அனாதை பிணங்களை அடக்கம் செய்வதற்கு தொண்டு நிறுவனங்களுக்கு உதவி வருகிறார். மேலும் அனாதை பிணங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் வருகிறார். மேலும் உடுமலை பகுதியில் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கும் உதவி செய்து வருகிறார். கொரோனா காலங்களில் இலவச முக கவசம், சானிடைசர் போன்றவற்றை தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வழங்கி சேவை புரிந்துள்ளார்.

    வாடிக்கையாளர்களின் உடல் நலனை பேணிக்காக்கும் வகையில் இவர்கள் நடத்தி வரும் மினி ரெஸ்டாரண்டில் மாட்டுப்பால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மேலும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கிருமி நாசினி மூலம் கைகள் சுத்தப்படுத்தபட்ட பின்னரே கடைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு ஒத்துக்கொள்ளாத உணவு வகைகளை விற்பனை செய்வதில்லை என்ற குறிக்கோளுடன் தன்னலம் பாராமல் செய்துவருகின்றனர். இவர்களின் சேவையில் மற்றொரு மைல் கல்லாக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆண்டு முழுவதும் இலவசமாக பால் வழங்கும் திட்டத்தை துவக்கி இன்றுவரை செயல்படுத்தி வருகிறார்கள். ஸ்ரீசத்யாவின் சேவையை தாய்மார்கள் பாராட்டி வருகின்றனர்.  

    ×