என் மலர்
நீங்கள் தேடியது "108 ambulance"
- 108 ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
- 135 அழைப்புகள் தீக்காயங்களுக்காக வந்ததாக ஆம்புலன்ஸ் நிர்வாகம் கூறியுள்ளது.
சென்னை:
தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் களை கட்டியது. மழை குறுக்கிட்டாலும் பெரும்பாலான பகுதிகளில் பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடினர்.
இந்த நிலையில், நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை 108 ஆம்புலன்ஸுகளுக்கு தமிழகம் முழுவதும் இருந்து 4,635 அழைப்புகள் வந்ததாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் 61 சதவீதம் வந்த கூடுதல் அழைப்புகளுக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர் என்றும் அதில் 135 அழைப்புகள் தீக்காயங்களுக்காக வந்ததாகவும் ஆம்புலன்ஸ் நிர்வாகம் கூறியுள்ளது.
- அ.தி.மு.க. தொண்டர்கள் தாக்கியதால் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் துறையூர் மருத்துவமனையில் அனுமதி.
- ஆம்புலன்ஸை அழைத்தது யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்சி துறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களிடையே பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அக்கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று செல்ல முயன்றது. ஆம்புலன்ஸை சுற்றிவளைத்த அ.தி.மு.க.வினர் அதற்குள் ஏறி சென்று நோயாளி இருக்கிறாரா எனவும் பரிசோதித்தனர்.
இதனை தொடர்ந்து ஆம்புலன்சில் நோயாளி இல்லை என்பதால் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கியதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க. தொண்டர்கள் தாக்கியதால் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் துறையூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆம்புலன்ஸை அழைத்தது யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
மேலும், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் வாகனத்தைத் தாக்கினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆம்புலன்ஸை தடுத்து, ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய அதிமுகவினர் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக நகரச் செயலாளர் பாலு உள்பட 14 பேர் மீது 6 பிரிவுகளில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- ஆம்புலன்ஸை அழைத்தது யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
- ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
திருச்சி துறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களிடையே பேசிக்கொண்டிருந்தார். அப்போது அக்கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று செல்ல முயன்றது. ஆம்புலன்ஸை சுற்றிவளைத்த அ.தி.மு.க.வினர் அதற்குள் ஏறி சென்று நோயாளி இருக்கிறாரா எனவும் பரிசோதித்தனர். இதனை தொடர்ந்து ஆம்புலன்சில் நோயாளி இல்லை என்பதால் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கியதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க. தொண்டர்கள் தாக்கியதால் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் துறையூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆம்புலன்ஸை அழைத்தது யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் வாகனத்தைத் தாக்கினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 108 ஆம்புலன்ஸ் நோயாளிகளை அழைக்கச் செல்லும்போது சைரன் சப்தத்துடனே செல்லும்; அதனால் வெறும் ஆம்புலன்ஸ் செல்கின்றது என்று நினைக்க வேண்டாம்.
அழைப்புகள் ரெக்கார்ட் செய்யப்பட்டு முறையான விசாரணைக்குப் பிறகே ஆம்புலன்ஸ் நோயாளிகளை அழைக்கச் செல்கின்றது.
108 ஆம்புலன்ஸ் மற்றும் பணியாளர்களை தாக்கினால் வன்முறை தடுப்பு மற்றும் உடைமைகள் சேதார தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தாக்கும் நபர்கள் மீது மருத்துவ பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தாக்கினால் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்த பதாகைகளை 108 ஆம்புலன்ஸ் கதவுகளில் வலது புறத்தில் ஒட்டவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- சாலை விபத்துகளில் சிக்கிய 10 ஆயிரத்து 906 பேருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.
- 80 கர்ப்பிணிகளுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்க்கப்பட்டு இருக்கிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 95 ஆயிரம் பேர் பயன் அடைந்து உள்ளனர். அவர்களில் 25 ஆயிரத்து 998 பேர் கர்ப்பிணிகள் ஆவர்.
சாலை விபத்துகளில் சிக்கிய 10 ஆயிரத்து 906 பேருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.
மேலும் 80 கர்ப்பிணிகளுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்க்கப்பட்டு இருக்கிறது.
இந்த தகவலை சென்னை-திருவள்ளூர் ஆம்புலன்சு சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திப்குமார் தெரிவித்து உள்ளார்.
- ஈரோடு அரசு மருத்துவமனை டி.பி.ஹாலில் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர், ஓட்டுனர் பணிக்கான நேர்காணல் நடக்க உள்ளது.
ஈரோடு:
ஈரோடு அரசு மருத்துவமனை டி.பி.ஹாலில் வரும் 28-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர், ஓட்டுனர் பணிக்கான நேர்காணல் நடக்க உள்ளது.
மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்.சி., நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி., பி.எஸ்.சி., விலங்கியல், உயிரியல், தாவரவியல், பயோகெமிஸ்டரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, பிளான்ட் பயாலஜி படித்திருக்கலாம். இவர்களுக்கு மாதம் 15,435 ரூபாய் ஊதியம்.
இதில் 19 முதல் 30 வயதினர் பங்கேற்கலாம். எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முகம், உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பான நேர்காணல் நடக்கும்.
ஓட்டுனர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 24 முதல் 35 வயதினர் இலகு ரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று 3 ஆண்டுகள் அனுபவம் பேட்ஜ் பெற்றவர்கள் பங்கேற்கலாம்.
இவர்களுக்கு 15,235 ரூபாய் ஊதியம். எழுத்து தேர்வு, தொழில் நுட்ப தேர்வு, மனித வள துறை நேர்காணல், கண் பார்வை, வாகனம் ஓட்டி தேர்வு நடத்தப்படும்.
கூடுதல் விபரம் அறிய 73388 94971, 73977 24829, 73977 24813 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- 108 ஆம்புலன்சை வரவழைத்து ஜெனிபரை திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
- ஆம்புலன்சை டிரைவர் விஜயகுமார் ஓட்டினார். உடன் நர்சு தாட்சாயினி இருந்தார்.
திருத்தணி:
திருத்தணியை அடுத்த அருங்குளம் காலனியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி ஜெனிபர் (23). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜெனிபருக்கு நேற்று இரவு பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து 108 ஆம்புலன்சை வரவழைத்து ஜெனிபரை திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆம்புலன்சை டிரைவர் விஜயகுமார் ஓட்டினார். உடன் நர்சு தாட்சாயினி இருந்தார். போகும் வழியிலேயே ஜெனிபருக்கு பிரசவ வலி அதிகமானது. இதைத்தொடர்ந்து ஆம்புலன்சிலேயே ஜெனிபருக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது.
பின்னர் தாயையும், குழந்தையையும் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்கள் தற்போது நலமாக உள்ளனர். ஜெனிபருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் தற்போது இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பெண்கள் துணிவு மிக்கவர்களாக செயல்பட வேண்டும்.
- பெண்கள் அனைவரும் வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
சென்னை:
சென்னை ராணி மேரி கல்லூரியில் "பெண்களின் ஆரோக்கியம்" குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு இன்று நடந்தது. கல்லூரி முதல்வர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி பேசியதாவது:-
பெண்களுக்கு பேறுகால பிரசவம் மிகவும் சவால் மிக்கதாகும். கிராமங்களில் இரவு நேரங்களில் பெண்களுக்கு பிரசவவலி ஏற்படும்போது கர்ப்பிணிகள் துயரம் அடைவார்கள். அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல மிகவும் கஷ்டப்படுவார்கள்.
இந்த வேதனையை போக்குவதற்காக தான் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. அதனை எனது கணவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் சுகாதார மந்திரியாக இருந்தபோது தொடங்கி வைத்தார்.
இப்போது கர்ப்பிணி பெண்களின் பிரசவ மரணங்கள் குறைந்து வருகின்றன. இரவு நேரங்களில் எப்போது வேண்டுமானாலும் 108 ஆம்புலன்சை அழைத்தால் உடனே வருகிறார்கள். இதனால் பிரசவங்கள் எளிதாக நடைபெற்று வருகின்றன. இதனால் நாடு முழுவதும் கர்ப்பிணி தாய்மார்கள் மரண விகிதம் குறைந்துள்ளது.
கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் போது உடனடியாக அது குறித்து தைரியமாக புகார் செய்ய வேண்டும். பெண்கள் துணிவு மிக்கவர்களாக செயல்பட வேண்டும். பெண்கள் அனைவரும் வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான் பிரச்சினைகளை தீர்க்க முடியும்.
மகளிர் சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல்நலம் பேண வேண்டும். மனநல பாதிப்புகளில் இருந்து விடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தஞ்சை மருத்துவ கல்லுாரியில் 108 ஆம்புலன்ஸ்க்கு ஆட்கள் தேர்வு முகாம் நாளை நடை பெறுகிறது
- அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் 10 நாட்களுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர், நாகப்பட்டி னம், திருவாரூர், மயிலா டுதுறை ஒருங்கிணைந்த 108 ஆம்புலன்ஸ் சேவை திட்ட மேலாளர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது;-
தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ்சில் பணிபுரிய டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் நாளை ( சனிக்கிழமை) தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இதில், ஓட்டுநருக்கான பணியில் சேர, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரருக்கு 24 வயதுக்கு மேலும் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 162.5 சென்டி மீட்டர் குறையாமல் இருக்க வேண்டும்.
இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓர் ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு பெற்றவர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 15,235 (மொத்த ஊதியம்) வழங்கப்படும்.
எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், கண் பார்வை திறன் மற்றும் மருத்துவம் சம்பந்தபட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு முறையில் தேர்வு செய்யப்படும்.
அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் 10 நாட்களுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும்.
பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.
இதே போல மருத்துவ உதவியாளருக்கான தகுதிகள் பி.எஸ்.சி., நர்சிங், ஜிஎஸ்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி (பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைப் சயின்ஸ், பிஎஸ்சி சுவாலஜி, பாட்னி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயோலஜி, பயோ டெக்னாலஜி இதில் ஏதோ ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ஊதியம் ரூபாய் 15,435 (மொத்த ஊதியம்) நேர்முகத் தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம் உடற்கூறியல் முதலுதவி அடிப்படை செவிலியர் பணி, மனிதவளத்துறையின் நேர்முகத் தேர்வு ஆகிய முறையில் தேர்வு நடைபெறும்.
இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும். மேலும் விவரங்களுக்கு 7397701807 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஓட்டுனர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
- காலை 9மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.
திருப்பூர் :
108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்க ளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள திருப்பூர் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் காலை 9மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.
மேலும் விவரங்களுக்கு 7397724811 , 8925506308 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வழக்கு பதிவு செய்த போலீசார், ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.
- 4 மாத கர்ப்பிணி பெண் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே மணக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகள் சந்தியா (வயது 25). இவருக்கும் விழுப்புரத்தை அடுத்த சத்தியகண்டநல்லூரை சேர்ந்த திருமலை என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் ஆனது. இதில் கருவுற்ற சந்தியா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதையடுத்து தனது தாய் வீட்டில் சில நாள் தங்கி ஓய்வு எடுக்க சந்தியா மணக்குப்பம் கிராமத்திற்கு வந்தார்.
இந்நிலையில் சந்தியாவிற்கு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து சந்தியாவை அவரது பெற்றோர், பாவந்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பணியில் இருந்த நர்ஸ் சந்தியாவை பரிசோதித்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பரிந்துரைத்தார். இதையடுத்து 108 ஆம்புலன்சிற்கு போன் செய்யப்பட்டது.
இதில் 108 ஆம்புலன்ஸ் தற்போது முண்டியம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், 1 மணி நேரம் கழித்தே வரும் என்று பதில் வந்துள்ளது. வேறு வழி இல்லாததால் அங்கேயே இருந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நள்ளிரவு 1.30 மணிக்கு ஆம்புலன்ஸ் வந்தது. இதில் சந்தியாவை ஏற்றும் போது அவர் மயக்க நிலைக்கு சென்றுவிட்டார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றவுடன், சந்தியாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சந்தியாவின் பெற்றோர் ஏழுமலை, சுமதி மற்றும் உறவினர்கள் அங்கு கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது. இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் சந்தியாவின் பெற்றோர் புகார் அளித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததாலும், 108 ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்ததாலும், 4 மாத கர்ப்பிணி பெண் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- 108 ஆம்புலன்சு டிரைவர் மீது தாக்குதல் நடந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்
திருச்சுழி அருகே உள்ள சவ்வாஸ்புரத்தை சேர்ந்தவர் மருதுபாண்டி (வயது32). இவர் செங்கல்பட்டில் 108 ஆம்புலன்சு டிரைவராக பணிபுரிகிறார். இந்த நிலையில் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்தார்.
அப்போது கருப்பசாமி என்பவர் மருதுபாண்டியிடம், உனது மனைவிக்கும், உறவினரான விஜயகுமாருக்கும் பழக்கம் இருக்கிறது என்று கூறினார். பொது இடத்தில் கருப்பசாமி அருகில் இருந்தபோதே விஜயகுமாரிடம் மருதுபாண்டி இதுகுறித்து கேட்டார். ஆனால் விஜயகுமார் அதற்கு பதில் அளிக்காமல் அமைதியாக சென்று விட்டார். தான் கூறியதை விஜயகுமாரிடம் கேட்டதால் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி தனது நண்பர் ராமர் என்பவருடன் சேர்ந்து மருதுபாண்டியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த மருதுபாண்டி அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருச்சுழி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கொரோனா கால கட்டத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 542 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
- கிட்டத்தட்ட 6 லட்சத்து 30 ஆயிரத்து 500 பேர் வரை ஆம்புலன்ஸ் மூலம் பயன் அடைந்தனர்.
மதுரை:
தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் முதல் மாநில மாநாடு, மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் நடந்தது. இதில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-
கடந்த 2008-ம் ஆண்டு 200 வாகனங்களுடன் தொடங்கப்பட்ட 108 ஆம்புலன்சு திட்டத்தில் தற்போது 1,353 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் 205 வாகனங்கள் மேம்படுத்தப்பட்ட உயிர் காக்கும் கருவிகளுடன் அமைந்து உள்ளன. மீதம் உள்ளவற்றில் 65 ஆம்புலன்சுகள் குழந்தைகளுக்கானவை.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற ஒரே ஆண்டில் 293 ஆம்புலன்சுகள் புதிதாக வாங்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.102 கோடியே 28 லட்சத்து 37 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் மிகப்பெரிய அடையாளமாக 108 ஆம்புலன்ஸ் திட்டம் உள்ளது. இதனை அனைத்து மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன.
அவசர தொலைபேசி எண் 108-க்கு தினமும் 12 ஆயிரத்து 500 அழைப்புகள் வருகின்றன. இலவச ஆம்புலன்ஸ் மூலம் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தற்போது வரை 1 கோடியே 46 லட்சத்து 71 ஆயிரத்து 266 பேர் பயன் அடைந்துள்ளனர்.
கொரோனா கால கட்டத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 542 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. அப்போது கிட்டத்தட்ட 6 லட்சத்து 30 ஆயிரத்து 500 பேர் வரை ஆம்புலன்ஸ் மூலம் பயன் அடைந்தனர். இதற்காக 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநாட்டில் அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் தளபதி, பூமிநாதன், 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கலந்து கொண்டனர்.






