search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "108 ambulance"

    • அன்னக்கொடிக்கு திடீரென பிரசவ வலி அதிகமானது.
    • 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினருக்கு அன்னக்கொடி உறவினர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா, கல்வாரை பகுதியை சேர்ந்தவர் தனபால். கூலி தொழிலாளி. இவரது மனைவி அன்னக்கொடி. கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக தேவர் மலையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அன்னக்கொடி மற்றும் உறவினரை ஏற்றுக்கொண்டு பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அன்னக்கொடிக்கு திடீரென பிரசவ வலி அதிகமானது.

    நிலைமையை புரிந்து கொண்ட அவசரகால மருத்துவ நுட்புநர் பூபதி சாலை ஓரமாக வாகனத்தை நிறுத்தி 108 ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். அப்போது அன்னக்கொடிக்கு பெண் குழந்தை பிறந்தது.

    பின்னர் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு தாயும், குழந்தையும் நன்றாக உள்ளனர். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினருக்கு அன்னக்கொடி உறவினர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

    • சிறுவனின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல உதவுமாறு ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் லிங்கப்பா அழுதபடி கேட்டார்.
    • 108 ஆம்புலன்சில் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று கூறி சென்று விட்டனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் அமரபுரம் மண்டலம் அனுமந்துனி பல்லே என்ற கிராமத்தை சேர்ந்தவர் லிங்கப்பா. விவசாயி. இவருடைய மகன் ருஷி கடந்த சில நாட்களாக சிறுவனுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.

    அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக லிங்கப்பா 108 ஆம்புலன்சை தொடர்பு கொண்டார். ஆம்புலன்ஸ் மூலம் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதக சிறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிறுவனை கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

    ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனையடுத்து சிறுவனின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல உதவுமாறு ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் லிங்கப்பா அழுதபடி கேட்டார்.

    ஆனால் 108 ஆம்புலன்சில் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று கூறி அவர்கள் சென்று விட்டனர்.

    இதனால் லிங்கப்பா அவரது உறவினர் ஒருவரை வரவழைத்தார். பின்னர் சிறுவன் உடலை 40 கிலோ மீட்டர் தூரம் பைக்கில் தூக்கிச் சென்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து மதகசிறை மற்றும் அமரபுரம் மண்டல வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருபுவனை பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது
    • இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதி நாம் தமிழர் கட்சி தலைவர் ஜெயக்குமார், பொதுச்செயலாளர் முத்து குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    திருபுவனை பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. விபத்தில் சிக்குபவர்களை மீட்டு சிகிச்சை அளிக்க ஆஸ்பத்தி ரிக்கு அழைத்துச்செல்ல 108 ஆம்புலன்ஸ் சேவை தாமதமாக வருகிறது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

    எனவே இது போன்று உயிரிழப்புகளை தடுக்க திருபுவனை பகுதியில் 108 ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்த வேண்டும். மேலும் திருபுவனை, திருவ ண்டார் கோவில் மற்றும் மதகடிப்பட்டு பகுதியில் பொதுக்கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    • 108 ஆம்புலன்சு உதவியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள முதலிப்பட்டிைய சேர்ந்தவர் சமுத்திரகனி. இவரது மகன் சண்முககனி(வயது29). இவர் 108 ஆம்புலன்சில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சண்முககனி தான் ஒரு பெண்ணை காதலிப்ப தாகவும் திருமணம் செய்து வைப்பதாகவும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

    அதற்கு அவர்கள் சிறிது காலத்திற்கு பின் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சண்முககனி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காஞ்சீபுரத்தை சேர்ந்தவர்கள்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    காஞ்சீபுரம் தாலுகா புஞ்சையரசங் தாங்கல் கிராமம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி.

    இவர்களது மகள்கள் சுப்புலட்சுமி (வயது 29), பாவணா (16). இருவரும் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பாண் டியம்பாக்கம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மொபட்டில் சென்றனர். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

    வந்தவாசி - காஞ்சீபுரம் சாலையில் தூசி கிராமம் அருகே வந்தபோது எதிரே வந்த கார் இவர்களது மொபட் மீது மோதியது. இதில் அக்காள் தங்கை இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர் .

    பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்புலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தாயார் மலர்கொடி தூசி போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாலு, சப்- இன்ஸ் பெக்டர் சுரேஷ் பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வேலை முடிந்து வீடு திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 25) பெயிண்டர் இவருக்கு கடந்த வருடம் திருமணம் ஆகி மாலா என்ற மனைவி உள்ளனர்.

    தற்போது 5 மாதம் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் அண்ணாமலை கடந்த

    19-ந் தேதி ஆசிரியர் பகுதியில் வேலை முடித்துவிட்டு தனது மொபட்டில் வீடு திரும்பினார்.

    அப்போது அச்சமங்கலம் அருகே சென்ற போது பின்னால் வந்த தனியார் பஸ் அண்ணாமலை மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அண்ணாமலை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

    சேலம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.

    • தாராபுரம் ஐ.டி.ஐ. கார்னரில் உள்ள 108 ஆம்புலன்சு கட்டிடத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
    • ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் அவசர கால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) தாராபுரம் ஐ.டி.ஐ. கார்னரில் உள்ள 108 ஆம்புலன்சு கட்டிடத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. வாகன ஓட்டுனருக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும். 24 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும். உரிய ஆவணங்களை சரிபார்ப்புக்கு கொண்டு வர வேண்டும்.

    மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்சி.நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி. படிப்புகளை 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும். பி.எஸ்சி. விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பையாலஜி படித்திருக்க வேண்டும். 19 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். பகல் மற்றும் இரவு நேரங்களில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கொரோனா கால கட்டத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 542 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
    • கிட்டத்தட்ட 6 லட்சத்து 30 ஆயிரத்து 500 பேர் வரை ஆம்புலன்ஸ் மூலம் பயன் அடைந்தனர்.

    மதுரை:

    தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் முதல் மாநில மாநாடு, மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் நடந்தது. இதில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    கடந்த 2008-ம் ஆண்டு 200 வாகனங்களுடன் தொடங்கப்பட்ட 108 ஆம்புலன்சு திட்டத்தில் தற்போது 1,353 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் 205 வாகனங்கள் மேம்படுத்தப்பட்ட உயிர் காக்கும் கருவிகளுடன் அமைந்து உள்ளன. மீதம் உள்ளவற்றில் 65 ஆம்புலன்சுகள் குழந்தைகளுக்கானவை.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற ஒரே ஆண்டில் 293 ஆம்புலன்சுகள் புதிதாக வாங்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.102 கோடியே 28 லட்சத்து 37 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் மிகப்பெரிய அடையாளமாக 108 ஆம்புலன்ஸ் திட்டம் உள்ளது. இதனை அனைத்து மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன.

    அவசர தொலைபேசி எண் 108-க்கு தினமும் 12 ஆயிரத்து 500 அழைப்புகள் வருகின்றன. இலவச ஆம்புலன்ஸ் மூலம் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தற்போது வரை 1 கோடியே 46 லட்சத்து 71 ஆயிரத்து 266 பேர் பயன் அடைந்துள்ளனர்.

    கொரோனா கால கட்டத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 542 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. அப்போது கிட்டத்தட்ட 6 லட்சத்து 30 ஆயிரத்து 500 பேர் வரை ஆம்புலன்ஸ் மூலம் பயன் அடைந்தனர். இதற்காக 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநாட்டில் அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் தளபதி, பூமிநாதன், 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கலந்து கொண்டனர். 

    • 108 ஆம்புலன்சு டிரைவர் மீது தாக்குதல் நடந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள சவ்வாஸ்புரத்தை சேர்ந்தவர் மருதுபாண்டி (வயது32). இவர் செங்கல்பட்டில் 108 ஆம்புலன்சு டிரைவராக பணிபுரிகிறார். இந்த நிலையில் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்தார்.

    அப்போது கருப்பசாமி என்பவர் மருதுபாண்டியிடம், உனது மனைவிக்கும், உறவினரான விஜயகுமாருக்கும் பழக்கம் இருக்கிறது என்று கூறினார். பொது இடத்தில் கருப்பசாமி அருகில் இருந்தபோதே விஜயகுமாரிடம் மருதுபாண்டி இதுகுறித்து கேட்டார். ஆனால் விஜயகுமார் அதற்கு பதில் அளிக்காமல் அமைதியாக சென்று விட்டார். தான் கூறியதை விஜயகுமாரிடம் கேட்டதால் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி தனது நண்பர் ராமர் என்பவருடன் சேர்ந்து மருதுபாண்டியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் காயம் அடைந்த மருதுபாண்டி அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருச்சுழி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வழக்கு பதிவு செய்த போலீசார், ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.
    • 4 மாத கர்ப்பிணி பெண் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே மணக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகள் சந்தியா (வயது 25). இவருக்கும் விழுப்புரத்தை அடுத்த சத்தியகண்டநல்லூரை சேர்ந்த திருமலை என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் ஆனது. இதில் கருவுற்ற சந்தியா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதையடுத்து தனது தாய் வீட்டில் சில நாள் தங்கி ஓய்வு எடுக்க சந்தியா மணக்குப்பம் கிராமத்திற்கு வந்தார்.

    இந்நிலையில் சந்தியாவிற்கு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து சந்தியாவை அவரது பெற்றோர், பாவந்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    பணியில் இருந்த நர்ஸ் சந்தியாவை பரிசோதித்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பரிந்துரைத்தார். இதையடுத்து 108 ஆம்புலன்சிற்கு போன் செய்யப்பட்டது.

    இதில் 108 ஆம்புலன்ஸ் தற்போது முண்டியம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், 1 மணி நேரம் கழித்தே வரும் என்று பதில் வந்துள்ளது. வேறு வழி இல்லாததால் அங்கேயே இருந்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து நள்ளிரவு 1.30 மணிக்கு ஆம்புலன்ஸ் வந்தது. இதில் சந்தியாவை ஏற்றும் போது அவர் மயக்க நிலைக்கு சென்றுவிட்டார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றவுடன், சந்தியாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சந்தியாவின் பெற்றோர் ஏழுமலை, சுமதி மற்றும் உறவினர்கள் அங்கு கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது. இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் சந்தியாவின் பெற்றோர் புகார் அளித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.

    ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததாலும், 108 ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்ததாலும், 4 மாத கர்ப்பிணி பெண் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • ஓட்டுனர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • காலை 9மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.

    திருப்பூர் :

    108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்க ளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள திருப்பூர் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் காலை 9மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.

    மேலும் விவரங்களுக்கு 7397724811 , 8925506308 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தஞ்சை மருத்துவ கல்லுாரியில் 108 ஆம்புலன்ஸ்க்கு ஆட்கள் தேர்வு முகாம் நாளை நடை பெறுகிறது
    • அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் 10 நாட்களுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர், நாகப்பட்டி னம், திருவாரூர், மயிலா டுதுறை ஒருங்கிணைந்த 108 ஆம்புலன்ஸ் சேவை திட்ட மேலாளர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது;-

    தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ்சில் பணிபுரிய டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் நாளை ( சனிக்கிழமை) தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    இதில், ஓட்டுநருக்கான பணியில் சேர, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    விண்ணப்பதாரருக்கு 24 வயதுக்கு மேலும் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 162.5 சென்டி மீட்டர் குறையாமல் இருக்க வேண்டும்.

    இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓர் ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

    தேர்வு பெற்றவர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 15,235 (மொத்த ஊதியம்) வழங்கப்படும்.

    எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், கண் பார்வை திறன் மற்றும் மருத்துவம் சம்பந்தபட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு முறையில் தேர்வு செய்யப்படும்.

    அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் 10 நாட்களுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும்.

    பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.

    இதே போல மருத்துவ உதவியாளருக்கான தகுதிகள் பி.எஸ்.சி., நர்சிங், ஜிஎஸ்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி (பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைப் சயின்ஸ், பிஎஸ்சி சுவாலஜி, பாட்னி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயோலஜி, பயோ டெக்னாலஜி இதில் ஏதோ ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ஊதியம் ரூபாய் 15,435 (மொத்த ஊதியம்) நேர்முகத் தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம் உடற்கூறியல் முதலுதவி அடிப்படை செவிலியர் பணி, மனிதவளத்துறையின் நேர்முகத் தேர்வு ஆகிய முறையில் தேர்வு நடைபெறும்.

    இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும்.

    பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும். மேலும் விவரங்களுக்கு 7397701807 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×