search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Recruitment camp"

    • பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.
    • சான்றிதழ் பெற்றவர்களுக்கு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும்.

    ஈரோடு:

    தேசிய தொழிற்பழகுநர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக ஈரோடு மாவட்ட அளவில் தொழில்பழகு நர்களுக்கான "பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 8-ந தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

    இம்முகாமில் அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று 500- க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளனர். இதில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்த 2017, 2018, 2019, 2020, 2021, மற்றும் 2022-ம் ஆண்டு அகில இந்திய தொழில் தேர்வில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் பங்கேற்று தேர்வு பெற்றவர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்பட்டு மத்திய அரசின் தொழிற்பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும்.

    தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையில் முன்னுரிமை வழங்கப்படும்.

    மேலும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கிறது.

    தற்போது தொழிற்பழகுநருக்கான உயர்த்தப்பட்ட உதவித்தொகை தொழிற்பிரிவுகளுக்கு ஏற்ப வழங்கப்படும். ஐ.டி.ஐ பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் உரிய அசல் சான்றிதழ்களுடன் தொழிற்பழகுநர் முகாமில் பங்கேற்று பயன் அடையலாம்.

    மேலும் தகவலுக்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஈரோடு என்ற முகவரி அல்லது 9442494266, 9443384133 எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    • ஓட்டுனர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • காலை 9மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.

    திருப்பூர் :

    108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்க ளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள திருப்பூர் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் காலை 9மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.

    மேலும் விவரங்களுக்கு 7397724811 , 8925506308 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தஞ்சை மருத்துவ கல்லுாரியில் 108 ஆம்புலன்ஸ்க்கு ஆட்கள் தேர்வு முகாம் நாளை நடை பெறுகிறது
    • அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் 10 நாட்களுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர், நாகப்பட்டி னம், திருவாரூர், மயிலா டுதுறை ஒருங்கிணைந்த 108 ஆம்புலன்ஸ் சேவை திட்ட மேலாளர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது;-

    தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ்சில் பணிபுரிய டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் நாளை ( சனிக்கிழமை) தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    இதில், ஓட்டுநருக்கான பணியில் சேர, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    விண்ணப்பதாரருக்கு 24 வயதுக்கு மேலும் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 162.5 சென்டி மீட்டர் குறையாமல் இருக்க வேண்டும்.

    இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓர் ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

    தேர்வு பெற்றவர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 15,235 (மொத்த ஊதியம்) வழங்கப்படும்.

    எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், கண் பார்வை திறன் மற்றும் மருத்துவம் சம்பந்தபட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு முறையில் தேர்வு செய்யப்படும்.

    அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் 10 நாட்களுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும்.

    பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.

    இதே போல மருத்துவ உதவியாளருக்கான தகுதிகள் பி.எஸ்.சி., நர்சிங், ஜிஎஸ்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி (பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைப் சயின்ஸ், பிஎஸ்சி சுவாலஜி, பாட்னி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயோலஜி, பயோ டெக்னாலஜி இதில் ஏதோ ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ஊதியம் ரூபாய் 15,435 (மொத்த ஊதியம்) நேர்முகத் தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம் உடற்கூறியல் முதலுதவி அடிப்படை செவிலியர் பணி, மனிதவளத்துறையின் நேர்முகத் தேர்வு ஆகிய முறையில் தேர்வு நடைபெறும்.

    இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும்.

    பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும். மேலும் விவரங்களுக்கு 7397701807 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில் வருகிற 1-ந் தேதி நடக்கிறது
    • கலெக்டர் முருகேஷ் தகவல்

    திருவண்ணாமலை:

    சென்னையில் வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ள விமானப்படை குழு மருத்துவ உதவியாளர் பிரிவுக்கான ஆட்சேர்ப்பு முகாமில் திருவண்ணாமலையில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மருத்துவ உதவியாளர் பிரிவு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த ஆண் இந்திய குடிமக்களை விமானப்படை குழு (ஒய் பிரிவு) மருத்துவ உதவியாளர் பிரிவில் சேர்ப்பதற்கான ஆள் சேர்ப்பு தேர்வு சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை நிலையத்தில் வருகிற 1-ந் தேதி (புதன்கிழமை) முதல் 8-ந் தேதி (புதன்கிழமை) வரை நடைபெற உள்ளது.

    இப்பணிக்கு திருமணம் ஆகாதவராகவும், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்த்தில் இருந்து குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலத்துடன் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடந்த 27-6-2002 முதல் 27-6-2006 வரையிலான காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.

    இளைஞர்களுக்கு உடல் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவ தேர்வு ஆகிய தேர்வுகள் வருகிற 1-ந் தேதி மற்றும் 2-ந் தேதிகளில் நடத்தப்படும். மருத்துவ உதவியாளர் பணிக்கு 12-ம் வகுப்பு, டிப்ளமோ, பி.எஸ்சி. மருத்துவம் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து முடித்து திருமணம் ஆகாதவர்கள் 27-6-1999 முதல் 27-6-2004 வரையிலான காலத்தில் பிறந்தவராகவும், திருமணமான விண்ணப்பதாரர்கள் 27-6-1999 முதல் 27-6-2002 வரையில் காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.

    இணையதள முகவரி பயிற்சியின் போது உதவித்தொகையாக மாதம் ரூ.14 ஆயிரத்து 600 வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் ராணுவ சேவை ஊதியம் உள்பட குறைந்தபட்ச மொத்த ஊதியம் ரூ.26 ஆயிரத்து 900 ஆகும்.

    இப்பணிக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு உடல் தகுதித் தேர்வு, எழுத்து தேர்வு மற்றும் மருத்துவ தேர்வு ஆகிய தேர்வுகள் வருகிற 7 மற்றும் 8-ந் தேதிகளில் நடத்தப்படும்.

    எனவே ஆர்வமுள்ளவர்கள் MY IAF என்ற செயலி மூலமாகவோ, http://airmenselection.cdac.in./CASB என்ற இணையதளத்திலும் வெளியிட்டு உள்ள அறிவிப்பை பார்த்து தேர்வு முறை, தேர்வு நாளன்று எடுத்து செல்ல வேண்டிய ஆவணங்கள் உள்பட அனைத்து விவரங்களையும் அறிவித்து தகுதியுடைவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு 04175- 233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வேவைாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம் வருகிற 11-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
    • முகாமில் நேரடியாக பங்கேற்று தொழிற்பழகுநர்களை தேர்வு செய்து பயன்பெறலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளி–யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டம் மற்றும் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக, நாமக்கல் மாவட்ட அளவில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் நாமக்கல் வளாகத்தில் வருகிற 11-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    அரசு, தனியார் தொழிற்– பயிற்சி நிலை–யங்க–ளில் ஐ.டி.ஐ பயின்று வெற்றிகரமாக பயிற்சியினை நிறைவு செய்து இதுநாள் வரை தொழிற்–பழகுநர் பயிற்சியினை மேற்கொள்ளாத பயிற்சியா–ளர்கள் மற்றும் பட்டய படிப்பு , பொறியியல் படிப்பு, பட்டப் படிப்பு பயின்ற–வர்கள் தங்களது கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு போட்டோ –-2 , ஆதார் அட்டை, தேசிய, மாநில தொழிற் சான்றிதழ் (COE தொழிற்பிரிவு சான்றிதழ்கள் உட்பட) ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் பங்கேற்று தொழிற்பழகுநர்களாக சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    தொழிற்பழகுநர் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிற்–நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் காலியாக உள்ள தொழிற்பழகு–நர்களின் எண்ணிக்கையை நிறைவு செய்திடும் பொருட்டு உரிய நிறுவன பதாகைகளுடன் இம்முகாமில் நேரடியாக பங்கேற்று தொழிற்பழகு நர்களை தேர்வு செய்து பயன்பெறலாம்.

    மேலும் விபரங்களை அறியும் பொருட்டு நாமக்கல் மாவட்டம் பெரியப்பட்டி அஞ்சல் கொண்டி–செட்டிப்பட்டியில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் உதவி இயக்குநரை நேரிலும் மற்றும் தொலைபேசி 04286 - 290297 வாயிலாகவும் தொடர்பு கொண்டு அறிந்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×