search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Vocational"

    • பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.
    • சான்றிதழ் பெற்றவர்களுக்கு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும்.

    ஈரோடு:

    தேசிய தொழிற்பழகுநர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக ஈரோடு மாவட்ட அளவில் தொழில்பழகு நர்களுக்கான "பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 8-ந தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

    இம்முகாமில் அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று 500- க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளனர். இதில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்த 2017, 2018, 2019, 2020, 2021, மற்றும் 2022-ம் ஆண்டு அகில இந்திய தொழில் தேர்வில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் பங்கேற்று தேர்வு பெற்றவர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்பட்டு மத்திய அரசின் தொழிற்பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும்.

    தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையில் முன்னுரிமை வழங்கப்படும்.

    மேலும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கிறது.

    தற்போது தொழிற்பழகுநருக்கான உயர்த்தப்பட்ட உதவித்தொகை தொழிற்பிரிவுகளுக்கு ஏற்ப வழங்கப்படும். ஐ.டி.ஐ பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் உரிய அசல் சான்றிதழ்களுடன் தொழிற்பழகுநர் முகாமில் பங்கேற்று பயன் அடையலாம்.

    மேலும் தகவலுக்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஈரோடு என்ற முகவரி அல்லது 9442494266, 9443384133 எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    ×