search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    108 ஆம்புலன்சு டிரைவர் மீது தாக்குதல்
    X

    108 ஆம்புலன்சு டிரைவர் மீது தாக்குதல்

    • 108 ஆம்புலன்சு டிரைவர் மீது தாக்குதல் நடந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள சவ்வாஸ்புரத்தை சேர்ந்தவர் மருதுபாண்டி (வயது32). இவர் செங்கல்பட்டில் 108 ஆம்புலன்சு டிரைவராக பணிபுரிகிறார். இந்த நிலையில் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்தார்.

    அப்போது கருப்பசாமி என்பவர் மருதுபாண்டியிடம், உனது மனைவிக்கும், உறவினரான விஜயகுமாருக்கும் பழக்கம் இருக்கிறது என்று கூறினார். பொது இடத்தில் கருப்பசாமி அருகில் இருந்தபோதே விஜயகுமாரிடம் மருதுபாண்டி இதுகுறித்து கேட்டார். ஆனால் விஜயகுமார் அதற்கு பதில் அளிக்காமல் அமைதியாக சென்று விட்டார். தான் கூறியதை விஜயகுமாரிடம் கேட்டதால் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி தனது நண்பர் ராமர் என்பவருடன் சேர்ந்து மருதுபாண்டியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் காயம் அடைந்த மருதுபாண்டி அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருச்சுழி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×