என் மலர்
நீங்கள் தேடியது "Wedding Venue"
- ரசாயனத் திரவத்தை அவர்கள் அருந்தியதாகக் கூறப்படுகிறது.
- குடித்த சிறிது நேரத்திலேயே 4 பேரின் உடல்நிலை மோசமடைந்தது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஆலோலி கிராமத்தில் திருமண விழா நடைபெற்றது. அந்த விழாவில் பாத்திரம் சுத்தம் செய்யும் ஒப்பந்த வேலையை ரத்தன், சுஷிலா தேவி, ஜம்னி தேவி மற்றும் பதாமி தேவி ஆகிய 4 பேரும் செய்தனர்.
வேலை முடிந்ததும் அங்கிருந்த பாத்திரம் கழுவும் திரவத்தை மது என நினைத்து, அவர்கள் தங்களது வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
நேற்று இரவு அந்த ரசாயனத் திரவத்தை அவர்கள் அருந்தியதாகக் கூறப்படுகிறது. குடித்த சிறிது நேரத்திலேயே 4 பேரின் உடல்நிலையும் மிக மோசமடைந்தது. இதில் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பதாமி தேவி என்ற பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இத்துயர சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில் ரசாயனத் திரவத்தை மது என நினைத்து குடித்ததே மரணத்திற்கு காரணம் என தெரிய வந்தது.
- 1 லட்சம் அடி உயரத்திற்கு சென்றதும், விண்வெளியில் திருமணம் செய்து கொள்ளலாம்.
- விண்வெளியில் திருமணம் செய்து கொள்ள ஏற்கனவே ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
திருமணம் செய்யும் பாரம்பரியம் தற்போது பல எல்லைகளை கடந்துவிட்டது. திருமணம் செய்து கொள்ளும் இடத்தில் துவங்கி, ஆடை, அணிகலன், உணவு என்று எல்லாவற்றுக்குமே ஏராளமான ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. வித்தியாசமான இடங்களில் திருமணம் செய்து கொள்வது, இயற்கை அழகியல் நிறைந்த பகுதியில் மாலை மாற்றிக் கொள்வது போன்ற சம்பவங்கள் தற்போதைய டிரெண்ட் ஆக இருக்கின்றன.
இந்த வரிசையில், யாரும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு விண்வெளியில் திருமணம் செய்து கொள்ளும் வசதியை தனியார் நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது. அந்த வகையில் விண்வெளியில் திருமணம் செய்து கொள்ள நபர் ஒருவருக்கு ரூ. 1 கோடி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் என்று அழைக்கப்படும் புதிய நிறுவனம் திருணம் செய்து கொள்ள விரும்பும் ஜோடிகளை கார்பன் நியூட்ரல் பலூன் ஒன்றில் விண்வெளிக்கு அனுப்புகிறது. இந்த ராட்சத பலூனில் ஏராளமான ஜன்னல்கள் உள்ளன. பூமியில் இருந்து கிளம்பும் ஜோடி, சரியாக 1 லட்சம் அடி உயரத்திற்கு சென்றதும், விண்வெளியில் இருந்தபடி பூமியின் அழகை கண்டுகளித்துக் கொண்டே திருமணம் செய்து கொள்ளலாம்.
திருமணம் முடிந்ததும் திருமண தம்பதிகளாக அவர்கள் மீண்டும் பூமிக்கு கொண்டுவரப்படுவர். இந்த முறையில் விண்வெளியில் திருமணம் செய்து கொள்ள ஏற்கனவே ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதுபோன்ற திருமண சேவையை, அடுத்த ஆண்டில் இருந்து துவங்கி வைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.






