search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "conservation"

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் மண் வளத்தை பாதுகாக்க கோடை உழவு செய்யுங்கள் என விவசாயிகளுக்கு உதவி இயக்குநர் அறிவுறுத்தினார்.
    • பறவைகளுக்கு இரையாக்கி மண்ணை உதிரியாக வைப்பதற்கு உதவுகிறது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று, அங்ககச்சான்று உதவி இயக்குநர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சித்திரை மாத புழுதி, பத்தரை மாற்றுத் தங்கம். சித்திரையில் மழை பெய்தால் பொன் ஏர் பூட்டலாம் என்று பழமொழிகள் கூறுகின்றன. கோடை மழையை பயன்படுத்தி மானாவாரி நிலத்தில் சரிவிற்கு குறுக்காக கடைசி உழவு அமையுமாறு உழுவதே கோடை உழவு ஆகும்.

    இதனால் மழை நீர் மண்ணுக்குள் இழுக்கப்பட்டு நீண்ட காலம் தேங்கி மண்ணின் ஈரத்தன்மையை அதிகரிக்கிறது. நெல் அறுவடைக்கு பின் களிமண் சுருங்குவதால் ஆழமான வெடிப்பு ஏற்பட்டு நிலத்தின் அடிமண் ஈரம் ஆவியாகிறது.

    4 அல்லது 5 மாதங்கள் கழித்து இந்த நிலத்தில் நெல் சாகுபடி செய்ய நீர் பாய்ச்சும்போது நீர் வேர் உறிஞ்சும் மட்டத்திற்கு கீழே சென்று விடுகிறது. நிலத்தை தயார்படுத்த அதிக அளவு கால்வாய் நீர் தேவைப்படுகிறது. நீர் விரயமாவதுடன் நிலம் தயார் செய்ய தேவைப் படும் நாட்களும் அதிகமாகின்றன.

    இவற்றை எல்லாம் நீக்கி மண் வளத்தை காக்க நடவு நிலத்தை தயார் செய்ய நீரின் தேவையை குறைக்க, அடிமண் இறுக்கம் நீங்கி நீர் கொள்திறன் அதிகரிக்க மண்ணுக்கடியில் காணப்படும் கூட்டுப் புழுக்களை மேற்பரப்பில் தள்ளி, பறவைகளுக்கு இரையாக்கி மண்ணை உதிரியாக வைப்பதற்கு உதவுகிறது.

    கோடை உழவு செய்யாத நிலங்களில் களைகளின் பெருக்கம் அதிகமாகி, மண்ணில் உள்ள நீர் மற்றும் சத்துகளை உறிஞ்சி விடுகிறது. அடுத்த பயிர் சாகுபடியில் அதிக களை முளைத்து பயிர் சேதம், சாகுபடி செலவு அதிகமாகிறது.

    அருகு, கோரை, கண்டங்கத்தரி, காட்டு கண்டங்கத்தரி, பார்த்தீனியம். சாரணை, மஞ்சக்கடுகு, நாயுருவி, தொய்யாக்கீரை, பண்ணைக் கீரை களைகள் அதிகமாக உற்பத்தியாகின்றன. கோடை உழவு செய்வதால் இந்த களைகளின் பெருக்கம் வெகுவாக குறைகிறது.

    பயிர் அறுவடைக்கு பின் எஞ்சிய கட்டைப்பயிர் பெரும்பாலான பூச்சிகள், நோய்க்கிருமிகளுக்கும் உணவாகவும், உறைவிடமாகவும், இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் அமைகிறது. கோடை உழவு செய்வதால் இந்த கட்டைப்பயிர் உரமாகி நுண்ணுயிர்களுக்கு உணவாகி மண்வளத்தை கூட்டுகிறது.

    கோடை உழவு செய்வதால் மண்ணில் காற்றோட்டம் அதிகமாகி நுண்ணுயிர் எண்ணிக்கை பெருகி மண்வளமாகிறது. ராமநாதபுரம் மாவட்ட உழவர்கள் அனைவரும் கோடை உழவு செய்து சாகுபடி நிலங்களை வளமான நிலங்களாக மேம்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மையத்தில் தங்க வைப்பவ–ர்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
    • சம்பா நடவு வயலில் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதை பார்வையிட்டார்.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் அருகே அணைக்கரை அருகே ஒழுகச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படு பவர்களுக்கான பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தையும், அதே ஊரில் வாக்காளர் சேர்க்கை முகாம் நடைபெறும் இடத்தையும் ஆர்.டி.ஓ பூர்ணிமா பார்வையிட்டார்.

    அப்போது பாதுகாப்பு மையத்தில் தங்க வைப்பவ–ர்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அணைக்கரை விநாயகம் தெருவின் மெயின் சாலையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நடவு வயலில் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதை பார்வையிட்டார்.

    இதைத் தொடர்ந்து தேப்பெருமாநல்லூரில் நுகர் பொருள் வாணிப கழகம் சார்பில் அமைய உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கான இடத்தை பார்வையிட்டார். அவருடன் தாசில்தார் சுசீலா, மண்டல துணை தாசில்தார்கள் மனோரஞ்சிதம், விமல் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அருங்காட்சியகம் மேம்பாட்டில் அரசு கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.
    • வரலாற்று சிறப்புமிக்க சிற்பங்களும், கலை பொருட்களும் பாதுகாப்பின்றி உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் அரசு அருங்காட்சியகத்தை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அங்கிருந்த அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். போதிய இட வசதி மற்றும் கட்டமைப்பு இல்லாததால், வரலாற்று சிறப்பு மிக்க சிற்பங்களும், கலைப் பொருட்களும், முக்கிய ஆவணங்களும் பாதுகாப்பின்றி உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

    ஏற்கெனவே, இது தொடர்பாக சட்டப்பே ரவையில் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பேசியதாகவும், அதைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் அருங்காட்சியகம் பழைய பாரம்பரிய கட்டடத்திற்கு மாற்றப்படும் என்றும், அந்த பாரம்பரிய கட்டிடம் ரூ.1.4 கோடி செலவில் பழுது பார்க்கப்பட்டு புதிய காட்சிக் கூடங்களுடன் மேம்படுத்தப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளதை எம்.எல்.ஏ சுட்டிக்காட்டினார்.

    அந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டு மென்றும், நாகையின் வரலாற்றுச் சிறப்புக்கு ஏற்ப அருங்காட்சியகம் மேம்பாட்டில் அரசு கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டுமென்றும் அங்கிருந்தவர்கள் கோரிக்கை வைத்தனர்.

    அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஷாநவாஸ் எம்.எல்.ஏ உறுதியளித்தார்.

    • வனவிலங்குகளை படம்பிடித்த 11-ம் வகுப்பு மாணவன் இப்ராஹிம் முதல் பரிசு பெற்றார்.
    • மாறுவேடப் போட்டியில் யூகேஜி மாணவி அக்ஷயாதுர்கா முதல் பரிசு பெற்றார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை ஸ்ரீஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வன உயிரின பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தாளாளா் ராம்மோகன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வா் ராணி ராம்மோகன் முன்னிலை வகித்தார். தலைமைஆசிரியா் கார்த்திக் வரவேற்று பேசினார். அதனைத்தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வன விலங்குகள் பாது காப்பு, உயிரியல் பன்மயம் பாதுகாப்பு என்ற தலைப்புகளில் மாறு வேடப்போட்டி, ஓவிய ப்போட்டி, பாட்டுப்போட்டி, போட்டோஷாப், பேஷியல் பெயின்டிங் போன்ற போட்டிகளும், ஆசிரியா்கள், பெற்றோர்களுக்கு தனிநடிப்பு, ஞாபகத்திறன் போட்டிகளும் நடத்தப்ப ட்டது.

    போட்டியில் சிறப்பாக வனவிலங்குகளை படம்பிடித்த 11-ம் வகுப்பு மாணவன் இப்ராஹிம் முதல் பரிசு பெற்றார். வனவிலங்கு களையும் காடுகளையும் அழித்தால் உண்டாகும் விளைவுகளை சிறப்பாக பேஷியல் பெயிண்டிங் மூலம் உணா்த்திய 12-ம் வகுப்பு மாணவன் ஸ்ரீராம்ஆகாஷ் குழுவினர் முதல் பரிசு பெற்றனா். மாறுவேடப் போட்டியில் முயல் வேடமணிந்த யூகேஜி மாணவி அக்ஷயாதுர்கா முதல் பரிசு பெற்றார். ஞபாகத்திறன் போட்டியில் பெற்றோர் தேவி முதல் பரிசு பெற்றார். தனி நடிப்பு போட்டியில் ஆசிரியைகள் சம்ஷியாபேகம், அன்பரசி குழு முதல் பரிசு பெற்றனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவியா்கள், பெற்றோர், ஆசிரியா்களுக்கு தாளாளா் ராம்மோகன் பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார். ஆசிரியை அன்பரசி நன்றி கூறினார்.

    • கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திரா மாநில எல்லையோரத்தில் தோக்கமூர் கிராமம் உள்ளது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திரா மாநில எல்லையோரத்தில் தோக்கமூர் கிராமம் உள்ளது. இங்கு பட்டியலினத்தைச் சேர்ந்த 100 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    தோக்கமூர், எளார்மேடு, எடகண்டிகை ஆகிய 3 கிராமமக்களுக்கும் பொதுவானதாக அப்பகுதியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலும் கோவிலுக்கு சொந்தமான 2.94 ஏக்கர் அரசு நிலமும் உள்ளது.

    பட்டியலின மக்கள் தங்கள் கால்நடைகளை மேய்க்கவும், வி.ஏ.ஓ அலுவலகம், அங்கன்வாடி மையம், அரசு பள்ளி மற்றும் நியாய விலை கடை உள்பட பல்வேறு தேவைகளுக்கு இந்த இடத்தை நடை பாதையாக பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு பட்டியலின மக்கள் அந்த நிலத்தை பயன்படுத்த முடியாத வகையில் சுற்றிலும் 8 அடி உயரம் மற்றும் 90 மீட்டர் நீளத்தில் தீண்டாமை சுற்றுசுவர் கட்டப்பட்டது. மேலும் மீதமுள்ள இடத்தில் முள்வேலியை அமைத்தனர்.

    இதற்கு பட்டியலின மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் இதற்கு மறுத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

    இந்த நிலையில் தீண்டாமை சுவரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும் விடுதலை சிறுத்தை கட்சி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னணி என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகங்களில் பல கட்ட அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் தோக்கமூர் கிராமத்தில் கட்டப்பட்ட தீண்டாமை சுவரை அகற்ற திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று காலையில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் கண்ணன் தலைமையில் அதிகாரிகள் வந்தனர். அவர்கள் 5 ஜே.சி.பி. எந்திரங்கள் உதவியுடன் தீண்டாமை சுவரை இடித்து அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    அசம்பாவிதத்தை தடுக்க டி.எஸ்.பி.க்கள் கிரியாசக்தி, சாரதி ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    நிலத்தை சுற்றி இருந்த முள்வேலி அகற்றப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த பொது மக்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது முள்வேலியை அகற்றுவதற்கு முறையாக மனு அளிக்குமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அங்கு கட்டப்பட்டு இருந்த தீண்டாமை சுவர் முற்றிலும் இடித்து அகற்றப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முள்வேலியையும் உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அடுத்தவாரம் முதல் விஷேச பாதுகாப்புடன் தேவையான இடங்களுக்கு செல்ல அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி.
    • அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேற கிரீன்கார்டு கேட்டு விண்ணப்பித்து உள்ளதாக தகவல்.

    இலங்கையில் பொது மக்களின் போராட்டத்தை தொடர்ந்து அந்நாட்டில் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தனது பதவியை துறந்து மனைவியுடன் தப்பி ஓடினார். முதலில் மாலத்தீவுக்கு சென்ற அவர் பின்னர் சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்தார்.

    தற்போது அவர் தாய்லாந்து நாட்டில் அடைக்கலம் புகுந்து பாங்காக்கில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி உள்ளார். பாதுகாப்பு கருதி அவர் ஓட்டல் அறையை விட்டு வெளியே வர வேண்டாம் என அவருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அவர் ஓட்டல் அறையிலேயே முடங்கி கிடக்கிறார். இதனால் அவர் வெளி உலகத்தை பார்க்க முடியாமல் தவித்து வருகிறார். இது தொடர்பாக அவர் கூறும்போது இந்த ஓட்டல் அறையில் முடங்கி இருப்பது ஜெயிலில் இருப்பது போன்று உணர்வை தருவதாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

    இந்தநிலையில் அவர் அடுத்த வாரம் முதல் விஷேச பாதுகாப்புடன் தேவையான இடங்களுக்கு செல்ல அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி அளித்து உள்ளனர்.

    இதை கேட்டு கோத்தபய ராஜபக்சே மகிழ்ச்சி அடைந்துள்ளார். முன்னதாக அவர் அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேற கிரீன்கார்டு கேட்டு விண்ணப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியானது.

    ஆனால் கோத்தபய ராஜபக்சே சொந்த நாடான இலங்கைக்கு திரும்பவே விரும்புவதாக தெரிய வந்துள்ளது. இதனால் அவர் தாய்லாந்தில் சில வாரங்கள் தங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    இலங்கையில் தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கே விரைவில் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதன்பிறகு கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்ப திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ரணில் விக்கிரமசிங்கேவுடன் அவர் போனில் பேசியதாகவும், அப்போது இது பற்றி அவர்கள் விவாதித்தாகவும் தெரிகிறது.

    காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் சுற்றுச்சூழலை மேம்படுத்த ஒரு லட்சம் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என ராகுல் காந்தி உறுதி அளித்தார். #RahulGandhi
    புதுடெல்லி:

    தற்போதைய பாராளுமன்ற தேர்தலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அரசியல் கட்சிகளின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக திகழ்கிறது. சமீபத்தில் பா.ஜனதா சார்பில் நடந்த சைக்கிள் பேரணியில், பா.ஜனதா தலைவர் விஜய் கோயல் பேசுகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நாட்டின் தற்போதைய முக்கிய தேவையாக உள்ளது. ஆனால் டெல்லி மாநில அரசு இதில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருக்கிறது என குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி நேற்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் சுற்றுச்சூழலை மேம்படுத்த ஒரு லட்சம் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்க நீர்நிலைகளை மேம்படுத்தி தண்ணீர் சேமிப்புக்கு வழிவகுப்போம். பயன்பாடற்ற நிலங்களை மறுஉருவாக்கம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம்.

    எங்கள் தேர்தல் அறிக்கையில், வேலைவாய்ப்பை உருவாக்குதல், விவசாயிகளின் துயரத்தை போக்குதல், கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், சுகாதாரத்தை பேணிகாத்தல், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வழிகாட்டுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.#RahulGandhi
    சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விசுவநாதன் வடசென்னை பகுதியில் உள்ள ரேசன் கடைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். பிரச்சனை வராத அளவுக்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். #PongalGift
    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரே‌சன் கார்டுகளுக்கும் கடந்த 7-ந்தேதி முதல் 1000 ரூபாய் ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய், கரும்பு ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.

    இதில் நேற்று மதியம் வரை எந்த பிரச்சனையும் இன்றி வினியோகம் நடந்தது.

    வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்க சென்னை ஐகோர்ட்டு நேற்று தடை விதித்தை தொடர்ந்து ரே‌சன் கடைகளில் பொது மக்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்து விட்டது.

    பணம் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற சந்தேகத்தில் நேற்று மாலையில் ஏராளமான பேர் ரேசன் கடைக்கு சென்றனர். இன்றும் காலையிலேயே கூட்டம் அலைமோத தொடங்கி விட்டது.

    சென்னையில் 1278 ரே‌சன் கடைகளிலும் அதிக அளவு கூட்டம் திரண்டதால் ஒவ்வொரு ரே‌சன் கடைக்கும் 4 போலீசார் வீதம் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

    போலீஸ் கண்காணிப்பில் தற்போது தகுதி உள்ள நபர்களுக்கு மட்டும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

    போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விசுவநாதன் வடசென்னை பகுதியில் உள்ள ரேசன் கடைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். பிரச்சனை வராத அளவுக்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். #PongalGift
    நான்கு மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. #AmitShah
    புதுடெல்லி:

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 4 மாநில சட்டசபைகளுக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பிரசாரம் தற்போது சூடு பிடிக்க தொடங்கி விட்டது.

    பா.ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மாநில தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.

    அமித் ஷாவுக்கு தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு எப்போதும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கமாண்டோக்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

    தற்போது அவருக்கு மேலும் கூடுதல் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


    அதில், “அமித்ஷாவுக்கு அளிக்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பு படையினருடன் மாநில போலீசாரும் இணைந்து பணியில் ஈடுபட வேண்டும். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கு முன்னதாகவே நேரில் சென்று பார்வையிட்டு தீவிர சோதனை நடத்த வேண்டும்“ என கூறப்பட்டுள்ளது.

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு தேசிய பாதுகாப்பு படையினரின் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களது விழா நிகழ்ச்சிகளில் இத்தகைய சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. #BJP #AmitShah
    சென்னிமலையில் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள மேலப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் மணி (வயது 24). இவர் கட்டிட வேலைக்கு சென்று வருகிறார்.

    மணியின் குடும்பத்தினர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கரூர் அருகே பெரியாயிபாளையம் பகுதியில் வசித்து வந்தனர். அப்போது இவர்கள் குடியிருந்த வீடு அருகில் ஆனந்த் என்பவரின் குடும்பமும் வசித்து வந்தது.

    ஆனந்தின் மகள் சவீதா (19). இவர் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மணியின் குடும்பம் கரூரில் இருந்தபோது மணிக்கும் சவீதாவுக்கும் காதல் ஏற்பட்டது.

    தற்போது மணியின் குடும்பம் சென்னிமலை பகுதிக்கு குடி வந்த பிறகும் மணிக்கும் சவீதாவுக்கும் காதல் நீடித்தது. இவர்களது காதலுக்கு இரு குடும்பத்திலும் எதிர்ப்பு கிளம்பியது.

    எனவே மணியும், சவீதாவும் வீட்டைவிட்டு வெளியேறினர். பின்னர் சென்னிமலை மலை அடி வாரத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

    இருவரும் பாதுகாப்பு கேட்டு சென்னிமலை போலீஸ் நிலையத்துக்கு சென்றனர்.

    சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் இருவரின் பெற்றோர்களையும் வர வழைத்து சமாதானம் செய்து காதல் ஜோடியை மணியின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    ×