search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி காதல் ஜோடி கோவிலில் திருமணம் - போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
    X

    பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி காதல் ஜோடி கோவிலில் திருமணம் - போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

    சென்னிமலையில் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள மேலப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் மணி (வயது 24). இவர் கட்டிட வேலைக்கு சென்று வருகிறார்.

    மணியின் குடும்பத்தினர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கரூர் அருகே பெரியாயிபாளையம் பகுதியில் வசித்து வந்தனர். அப்போது இவர்கள் குடியிருந்த வீடு அருகில் ஆனந்த் என்பவரின் குடும்பமும் வசித்து வந்தது.

    ஆனந்தின் மகள் சவீதா (19). இவர் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மணியின் குடும்பம் கரூரில் இருந்தபோது மணிக்கும் சவீதாவுக்கும் காதல் ஏற்பட்டது.

    தற்போது மணியின் குடும்பம் சென்னிமலை பகுதிக்கு குடி வந்த பிறகும் மணிக்கும் சவீதாவுக்கும் காதல் நீடித்தது. இவர்களது காதலுக்கு இரு குடும்பத்திலும் எதிர்ப்பு கிளம்பியது.

    எனவே மணியும், சவீதாவும் வீட்டைவிட்டு வெளியேறினர். பின்னர் சென்னிமலை மலை அடி வாரத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

    இருவரும் பாதுகாப்பு கேட்டு சென்னிமலை போலீஸ் நிலையத்துக்கு சென்றனர்.

    சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் இருவரின் பெற்றோர்களையும் வர வழைத்து சமாதானம் செய்து காதல் ஜோடியை மணியின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×