search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "assemply"

    • ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், முதல்-மந்திரியுமான ஹேமந்த் சோரன் தனது பதவியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு
    • ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா தனது பக்கம் இழுத்து ஆட்சியை கவிழ்க்க கூடும் என தகவல் வெளியானது.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், முதல்-மந்திரியுமான ஹேமந்த் சோரன் தனது பதவியை முறைகேடாக பயன்படுத்தி ராஞ்சியில் உள்ள சுரங்கத்தை சட்டவிரோதமாக குத்தகைக்கு எடுத்து ஆதாயம் அடைந்ததாக பா.ஜனதா குற்றம் சாட்டியது. அதோடு அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டது.

    எனவே ஹேமந்த் சோரன் எம்.எல்.ஏ. பதவியை தகுதி நீக்கம் செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா முறையிட்து. இதையேற்று முதல்-மந்திரியின் எம்.எல்.ஏ. பதவியை தகுதி நீக்கம் செய்யுமாறு ஜார்க்கண்ட் கவர்னர் ரமேஷ் பைசுக்கு தேர்தல் கமிஷன் கடந்த மாதம் 25-ந்தேதி பரிந்துரை செய்தது. ஆனால் கவர்னர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

    இந்த சூழ்நிலையில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா தனது பக்கம் இழுத்து ஆட்சியை கவிழ்க்க கூடும் என தகவல் வெளியானது.

    இதனால் ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் சுமார் 30 பேர் காங்கிரஸ் ஆளும் சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு தனி விமானத்தில் கடந்த 30-ந்தேதி அழைத்து செல்லப்பட்டனர். அங்குள்ள நவ ராய்ப்பூர் சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே ஜார்க் கண்ட் சட்டசபையில் சிறப்பு கூட்டத்தை இன்று கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டுவர இருப்பதாக முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தெரிவித்து இருந்தார்.

    நம்பிக்கை வாக்கெடுப்பை யொட்டி சத்தீஷ்கரில் முகாமிட்டு இருந்த 30 எம்.எல்.ஏ.க்கள் ராய்ப்பூரில் இருந்து நேற்று மாலை தனி விமானத்தில் ராஞ்சி வந்தடைந்தனர்.

    இந்த நிலையில் ஜார்க்காண்ட் சட்டசபையில் சிறப்பு கூட்டம் இன்று காலை தொடங்கியது. முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார்.

    தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டினார். தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. அதன்பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையில் தீர்மானத்திற்கு ஆதரவாக 48 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர். பாஜக வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் சோரன் அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

    • மாநகராட்சி முழுவதும் தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது.
    • தற்போது மழைக்காலமாக உள்ளதால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விடுகிறது.

    கோவை

    கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில் மாநகராட்சி முழுவதும் தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது.

    எனவே இதனை கட்டுப்படுத்த உக்கடம் ஒண்டிப்புதூரில் செயல்பட்டு வரும் கருத்தடை மையத்தை துரிதப் படுத்த வேண்டும். தூய்மை பணியாளர்கள் 134 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு பதிலாக புதிய தூய்மை பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் மாநகர பகுதிகளில் குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்டு மூடப்படாமல் உள்ள குழிகளால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.

    இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் தற்போது மழைக்காலமாக உள்ளதால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விடுகிறது.

    எனவே வார்டு, வீதி வாரியாக கால்வாய்கள் தூர் வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும். புதிதாக கட்டிடம் கட்டுபவர்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கைகளை வைத்தனர்.

    அதற்கு மாநகராட்சி கமிஷனர் பிரதாப் பதில் அளித்து பேசுகையில் உரிய அனுமதியில்லாமல் குடிநீர் திட்ட பணிகளுக்காக குழிகளை தோண்டி மூடாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும்.

    கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் மேம்பாட்டுக்காக ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 மாநகராட்சி பள்ளிகளில் நாப்கின் வழங்கும் எந்திரம் மற்றும் நாப்கினை அழிக்கும் எந்திரம் வழங்கப்பட உள்ளது.தெரு நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • அரிசி, பருப்பு ஆகியவற்றின் விலை கணிசமாக உயர்ந்தது.
    • ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு நேரிலும், கடிதம் மூலமும் தகவல் தெரிவித்துள்ளோம்.

    திருவனந்தபுரம்:

    மத்திய அரசு சமீபத்தில் நடத்திய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அரிசி, பருப்பு மற்றும் உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்க முடிவு செய்தது.

    அதன்படி கடந்த 18-ந் தேதி முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்தது. இதன் காரணமாக அரிசி, பருப்பு ஆகியவற்றின் விலை கணிசமாக உயர்ந்தது.

    இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வராதநிலையில் இந்த விலை உயர்வு அவர்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும், எனவே இந்த வரி உயர்வை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் கேரள சட்டசபையில் நேற்று நிதி மந்திரி பாலகோபால் இது தொடர்பாக கூறியதாவது:-

    சாமானியர்களை பாதிக்கும் வரி உயர்வை மாநில அரசு எதிர்க்கிறது. இது தொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு நேரிலும், கடிதம் மூலமும் தகவல் தெரிவித்துள்ளோம். முதல் மந்திரியும் இதுபற்றி பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    பொதுமக்களை பாதிக்கும் உணவு தானியங்களுக்கான 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி உயர்வை கேரளாவில் அமல் படுத்தமாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி இருந்தனர்.
    • காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், தொடர்ந்து கூச்சலிட்டபடி இருந்ததால் சபை நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கியது.

    திருவனந்தபுரம்:

    கேரள சட்டசபையின் 15-வது கூட்ட தொடர் இன்று தொடங்கியது.

    இக்கூட்டத்தில் வயநாடு தொகுதி எம்.பி. ராகுல்காந்தியின் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கிளப்ப காங்கிரசார் திட்டமிட்டு இருந்தனர்.

    அதன்படி கூட்டம் தொடங்கியதும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சபையின் மைய பகுதிக்கு சென்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அமைப்பின் மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ. நிர்வாகிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    அவர்களை சபாநாயகர் இருக்கையில் அமரும்படி கூறினார். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தொடர்ந்து கோஷமிட்டபடி இருந்தனர்.

    இதையடுத்து சபாநாயகர் சபை நடவடிக்கைகளை தொடங்குவதாக அறிவித்தார். மேலும் கேள்வி நேரம் உடனே தொடங்குவதாக அறிவித்தார். ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி இருந்தனர். மேலும் கம்யூனிஸ்டு கட்சியினரை கண்டித்து பதாகைகளையும் காண்பித்தனர்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், தொடர்ந்து கூச்சலிட்டபடி இருந்ததால் சபை நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கியது.

    இதையடுத்து சபாநாயகர் ராஜேஷ் சபையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.சபை தொடங்கிய முதல் நாளிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    டிசம்பர் மாதம் வரை சென்னைக்கு தினமும் 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சட்டசபையில் அமைச்சர் கூறியுள்ளார்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குடிநீர் வழங்குவது குறித்து ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது:-

    இந்த ஆண்டு பருவமழை பொய்த்து விட்டது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மிக குறைவான தண்ணீரே இருக்கிறது.

    கோடை காலத்தில் குடிநீர் வழங்குவதற்காக ரூ.157 கோடி நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இது யானைப்பசிக்கு சோளப்பொரி வழங்குவது போன்றது.

    சென்னையில் மட்டு மல்லாமல் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 110-விதி கீழ் கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது.

    அந்த திட்டங்கள் என்ன ஆனது? வருகிற கோடை காலத்தில் குடிநீர் பஞ்சத்தை சமாளிக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே கருத்தை காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமி வலியுறுத்தினார்.

    இதற்கு பதில் அளித்து அமைச்சர் வேலுமணி கூறியதாவது:-

    அம்மாவின் இந்த அரசு குடிநீர் பஞ்சத்தை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 142 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை மிக குறைவாக பெய்து இருக்கிறது. எனவே மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    இதற்காக பணிகளை கண்காணிக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு ஆய்வு கூட்டங்கள் நடத்தி குடிநீர் வழங்குவதற்கான பணிகளை தூரிதப்படுத்தி வருகிறார்.

    சென்னைக்கு 22 கல்குவாரிகளில் இருந்து தினமும் 30 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வீராணம் ஏரிக்கு மீண்டும் மேட்டூரில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பல்வேறு நீர்நிலைகளில் இருந்தும், ஆழ்துளை கிணறுகள் மூலமும், விவசாய கிணறுகள் மூலமும் குடிநீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    கிருஷ்ணா நதிநீர் கடந்த 12-ந் தேதி முதல் மீண்டும் கொண்டு வந்து இருக்கிறோம். குழாய் தண்ணீர் செல்லாத இடங்களுக்கு லாரி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. தேவைப்படும் இடத்தில் குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்படுகின்றன.

    சென்னை நகருக்கு வருகிற டிசம்பர் மாதம் வரை தினமும் 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    இதே போல் மற்ற மாவட்டங்களிலும் குடிநீர் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

    கடல் நீர் குடிநீராக்கும் 5 திட்டங்களில் இரண்டு திட்டங்களை தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் கடன் உதவியுடன் இது செயல்படுத்த இருக்கிறது. மற்ற திட்டங்களையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்ற தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். #Parliamentelection #Mutharasan

    சிதம்பரம்:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 22-வது மாநாடு பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவை மீட்போம், தமிழகத்தை காப்போம் என்கிற தலைப்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு கோவையில் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர்ரெட்டி, மாநில துணை செயலாளர் சுப்பராயன், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, திராவிடர் கழக தலைவர் வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ம.தி. மு.க. தலைவர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகிறர்கள்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி சொன்ன தேர்தல் வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. 45 ஆண்டுகளுக்கு முன் இல்லாத அளவில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலை தருவதாக மோடி தெரிவித்தார். இதை நம்பி வாக்களித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.

    தற்போது சென்னையில் 14 துப்புரவு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதற்கு 10 ஆயிரம் பேர் விண்ணப்பத்திருந்தனர். அதில் அதிகமானவர்கள் பட்டதாரிகளே. இதுபோன்ற நிலைமை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. தமிழக மக்களை பற்றி கவலைப்படாத பிரதமர் மோடி, வாக்குறுதிகள் வழங்குவதில் மன்னர். அவர் மக்களையும் பாராளுமன்றத்தையும் ஏமாற்றிவருகிறார்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலின் போது, தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தவேண்டும். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இருக்கவேண்டும், அடிமையாக இருக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார். #Parliamentelection #Mutharasan

    பாலாற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணை கட்டுவதை தடுக்க சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். #EdappadiPalaniswami #ADMK #TNAssembly

    சென்னை:

    சட்டசபையில் இன்று நந்தகுமார் (தி.மு.க.) பேசுகையில், “பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டி வருகிறது. 21 தடுப்பணைகளை புதுப்பிக்க ரூ.43 கோடி ஒதுக்கி உள்ளது. மேலும் 30 தடுப்பணைகளை புதிதாக கட்டப்போவதாகவும் அதிகாரப்பூர்வமாக தகவல் அனுப்பி உள்ளன. 500 மீ.க்கு ஒரு தடுப்பணை கட்ட உள்ளதால், இதை தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.

    இதே கருத்தை பிரின்ஸ் (காங்.) வலியுறுத்தி பேசினார்.

    இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசியதாவது:-

    1892-ம் ஆண்டைய மதராஸ்-மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும்.

    சித்தூர் மாவட்டத்தில், குப்பம் எனும் பகுதியில், பாலாற்றின் குறுக்கே ஒரு அணையினை ஆந்திரா அரசு கட்ட உள்ளதாக அம்மாவின் ஆட்சிக்காலத்தில், செய்தி வந்தபோது தமிழ்நாடு அரசு 10.2.2006 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இவ்வாறு வழக்கு தாக்கல் செய்ததன்பேரில், அணைக் கட்டும் பணிகள் தடுக்கப்பட்டன.

    இந்த வழக்கில், தமிழ்நாடு மற்றும் ஆந்திர அரசு சாட்சியாளர்களின் குறுக்கு விசாரணை முடிவடைந்ததை அடுத்து, உச்சநீதிமன்றத்தால் இவ்வழக்கு ஜூலை 2019-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

     


    ஆந்திர அரசு, 1892-ம் ஆண்டைய ஒப்பந்தத்தை மீறும் வகையிலும், தமிழ் நாட்டின் முன் அனுமதி பெறாமலும் தன்னிச்சையாக பாலாறு மற்றும் அதன் கிளை நதிகளின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்தியும், புதியதாக தடுப்பணைகள் கட்டியதும் ஒப்பந்தத்திற்கு முரணானது எனவும், அவைகளை முன்பிருந்த நிலைக்கே கொண்டு வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று, தமிழ்நாடு அரசு 18.7.2016 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தது.

    மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் 7.5.2018 அன்று பாலாறு பிரச்சனை குறித்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தியது. இக்கூட்டத்தில், தமிழ்நாட்டின் நிலைப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

    பாலாற்றின் குறுக்கே சம்மந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவு பெறாமல் புதிய தடுப்பணை களை கட்டுவதற்கு முனையக்கூடாது எனவும், இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு பிறப்பிக்கும் வரையில் ஆந்திர அரசு தடுப்பணைகளின் உயரத்தை மேலும் உயர்த்தக்கூடாது எனவும், மத்திய நீர் வள ஆதார துறை செயலாளர் இக்கூட்டத்தின் முடிவில் தெரிவித்தார்.

    மேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும், எனவும் மாநிலங்களை அவர் கேட்டுக்கொண்டார்.

    இதற்கிடையில், ஆந்திர அரசு, பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகளின் பழுதுபார்ப்பு மற்றும் மறு கட்டமைப்பிற்காக 41.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆணையிட்டதாக செய்தித் தாள்களில் தகவல்கள் வெளியானது.

    இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு 13.11.2018 அன்று ஆந்திர அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், தடுப்பணைகளுக்கான விவரங்களை தமிழ்நாட்டின் பரிசீலனைக்காக அளிக்க வேண்டியும் மற்றும் தமிழ்நாடு அரசு அதன் கருத்துக்களை அளிக்கும் வரையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதை நிறுத்தி வைக்க வேண்டியும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    மேலும், மத்திய அரசினையும், இதுகுறித்து ஆந்திர அரசுக்கு உரிய அறிவுரைகள் வழங்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    ஆந்திர அரசிடமிருந்தோ அல்லது மத்திய அரசிடமிருந்தோ பதில் ஏதும் வரப்பெறாத நிலையில், பாலாற்றின் குறுக்கேயுள்ள 21 தடுப்பணைகளின் பழுதுபார்ப்பு மற்றும் மறு கட்டமைப்புப் பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி, உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் ஒரு மனு ஒன்றை 19.11.2018 அன்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது.

    ஆந்திர அரசு, பாலாற்றின் குறுக்கே மேலும் 30 புதிய தடுப்பணைகளை கட்ட உத்தேசித்திருப்பதாக 5.2.2019 அன்று செய்தி வந்ததையடுத்து, இத்தடுப்பணைகள் கட்டுவதற்கான அனுமதியை வழங்கக்கூடாது எனவும், உச்ச நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரையில் தடுப்பணைகள் கட்டப்படக்கூடாது எனவும், அவ்வரசின் நீர்வள ஆதாரத் துறைக்கு அறிவுரை வழங்குமாறு 6.2.2019 அன்று ஆந்திர அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    பாலாறு நதிநீர் பிரச்சனையில், இந்த அரசு மிக உன்னிப்புடனும், கவனத்துடனும், சட்டரீதியாகவும், பிரச்சனையை தொடர்ந்து அணுகி வருகிறது. தமிழ் நாட்டின் உரிமையை நிலை நாட்டுவதற்கு அம்மா அரசு அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #EdappadiPalaniswami #ADMK #TNAssembly

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று கலெக்டர் ராமன் கூறினார்.

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்வது (விவிபேட்) குறித்து விழிப்புணர்வு மற்றும் நம்பகத்தன்மையை ஏற்படுத்த தொகுதி அளவிலான பயிற்றுனர்கள் மற்றும் விளக்க அலுவலர்களுக்கு செயல் விளக்க பயிற்சி வகுப்பு நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாராயணன், மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பயிற்சி வகுப்பை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் 4 வாக்குச்சாவடிகளை தேர்வு செய்து அங்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்திட வேண்டும். இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் 6 முதல் 7 குழுக்கள் ஏற்படுத்த வேண்டும். அதில் 5 பணியாளர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு வாகனம் ஏற்பாடு செய்திட வேண்டும். ஒரு தொகுதிக்கு 7 வாகனங்கள் வீதம் 13 தொகுதிகளுக்கு 91 வாகனங்கள் இருத்தல் அவசியமாகும்.

    மாதிரி வாக்குச்சாவடியை அரசு அலுவலகம் அல்லது சமுதாய கூடங்களில் மட்டுமே நடத்த வேண்டும். தனியார் இடங்களில் நடத்தக்கூடாது. பணி முடிந்தவுடன் வாக்குப்பதிவு எந்திரங்களை தாலுகா அலுவலகத்தில் சேர்க்க வேண்டும். மாதிரி வாக்குப்பதிவு குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மாதிரி வாக்குப்பதிவு குறித்து ஒரு தொகுதிக்கு 10 பேர் வீதம் 130 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் மற்ற வாக்குச்சாவடிகளுக்கு சென்று அங்கு பணிபுரிபவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    இதில், தேர்தல் தாசில்தார் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பாராளுமன்றம் மற்றும் 7 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தவறாக வெளியிட்டது யார்? என்று தேர்தல் கமி‌ஷன் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. #Election #Parliament

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் தேதிகளை இறுதி செய்வது தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 7 மாநில சட்ட சபைகளுக்கான தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்படுகிறது. பிப்ரவரி மாத இறுதியில் தேர்தல் குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஊடகங்கள் மற்றும் சமூக வலை தளங்களில் பாராளுமன்றம் மற்றும் 7 மாநில சட்டசபை தேர்தல் குறித்து தகவல் வெளியிடப்பட்டு வருகிறது.

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்-மே மாதங்களில் 9 முதல் 10 கட்டங்களாக தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் கமி‌ஷன் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலப்பிரதேசம், காஷ்மீர், மராட்டியம், அரியானா ஆகிய 7 மாநில சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்றும், இதன் மூலம் அரசுக்கு தேர்தல் நடத்தும் செலவும் குறையும் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் சமூக வலை தளங்களில் பாராளுமன்ற தேர்தல் அட்டவணை என்ற பெயரில் ஒரு பட்டியல் வெளியானது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுதான் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    தேர்தல் கமி‌ஷன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாத நிலையில் இதுபோன்று வெளியான தகவல்கள் தேர்தல் கமி‌ஷன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதையடுத்து இந்த விவகாரத்தை கருத்தில் கொண்ட தேர்தல் கமி‌ஷன் இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. டெல்லி போலீசின் தகவல் தொழில்நுட்ப பிரிவு களத்தில் இறங்கியுள்ளது.

    தேர்தல் அட்டவணை முதன் முதலில் எங்கு இருந்து பரவியது என்பதை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். #Election #Parliament

    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவில் 4 மந்திரிகள் உள்ளிட்ட 43 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் டிக்கெட் வழங்கப்படவில்லை. #RajasthanAssemblyElections #RajasthanElections

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஷ்கார், மிஜோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் 7-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

    ராஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. பாரதிய ஜனதா ஏற்கனவே 131 தொகுதிகளுக்கு கடந்த 11-ந் தேதி வேட்பாளர்களை அறிவித்தது.

    நேற்று 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில், 31 வேட்பாளர்கள் இடம்பெற்று இருந்தனர். அதன்படி இது வரை 162 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தொகுதிகளில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள 43 பேருக்கு மீண்டும் டிக்கெட் வழங்கப்படவில்லை. அதில், 4 பேர் மந்திரிகள் ஆவர்.

    இதுவரை வந்த பட்டியல் படி 92 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் டிக்கெட் கிடைத்துள்ளது. மேலும் பா.ஜ.க.வில் முஸ்லிம்கள் யாருக்கும் இதுவரை டிக்கெட் கொடுக்கப்படவில்லை.

    கடந்த தேர்தலில் பல முஸ்லிம் வேட்பாளர்களும், பாரதிய ஜனதாவில் நிறுத்தப்பட்டு இருந்தனர். ஆனால், இந்த ஆண்டு அவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை.

    இன்னும் அடுத்த பட்டியல் வர இருக்கிறது. அதில் இடம் அளிக்கப்படுமா? என்று தெரியவில்லை. முஸ்லிம்கள் யாருக்கும் டிக்கெட் வழங்காதது குறித்து காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

    இதற்கு பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் சுதன்சு திரிவேதி பதில் அளிக்கும் போது, ஜாதி, மதம் பார்த்து டிக்கெட் வழங்குவது காங்கிரசின் கொள்கை. பாரதிய ஜனதாவை பொருத்த வரை இந்த கொள்கையை பின் பற்றுவதில்லை என்று கூறினார். #RajasthanElections #RajasthanAssemblyElections

    நான்கு மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. #AmitShah
    புதுடெல்லி:

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 4 மாநில சட்டசபைகளுக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பிரசாரம் தற்போது சூடு பிடிக்க தொடங்கி விட்டது.

    பா.ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மாநில தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.

    அமித் ஷாவுக்கு தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு எப்போதும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கமாண்டோக்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

    தற்போது அவருக்கு மேலும் கூடுதல் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


    அதில், “அமித்ஷாவுக்கு அளிக்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பு படையினருடன் மாநில போலீசாரும் இணைந்து பணியில் ஈடுபட வேண்டும். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கு முன்னதாகவே நேரில் சென்று பார்வையிட்டு தீவிர சோதனை நடத்த வேண்டும்“ என கூறப்பட்டுள்ளது.

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு தேசிய பாதுகாப்பு படையினரின் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களது விழா நிகழ்ச்சிகளில் இத்தகைய சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. #BJP #AmitShah
    மத்தியபிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் 12-ந்தேதி வெளியிடுகிறது. #MadhyaPradeshelection #Congress

    போபால்:

    மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிஜோரம் ஆகிய 4 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்த தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டன.

    மத்தியபிரதேச மாநிலத்தில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக பாரதிய ஜனதா ஆட்சியில் உள்ளது. அங்கு எப்படியாவது காங்கிரசை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்று அந்த கட்சி தீவிர பணிகளை செய்து வருகிறது.

    இதுதொடர்பாக மாநில தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கமல்நாத் கூறியதாவது:-

    மத்தியபிரதேசத்தில் நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர் பார்க்கிறோம். நாங்கள் தேர்தல் பிரசாரத்தை செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் தொடங்க இருக்கிறோம். அதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை.


    ராகுல்காந்தி வருகிற 17-ந்தேதி போபால் வருகிறார். அப்போது அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார். மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளிலும் யாரை வேட்பாளராக தேர்வு செய்ய வேண்டும் என்பது பற்றி ஆய்வு நடத்தி உள்ளோம்.

    ஒவ்வொரு தொகுதியிலும் காங்கிரசில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ள நபர்கள் யார்? என்பது பற்றி தனியார் நிறுவனம் மூலம் கருத்து கணிப்பு நடத்தி வருகிறோம். செப்டம்பர் 4-ந்தேதி இதன் அறிக்கை எங்களிடம் தரப்படும்.

    முதலாவதாக கட்சி பலவீனமாக உள்ள 80 தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்து முதலில் அறிவிக்க இருக்கிறோம். அங்கு யாரை நிறுத்துவது என்பது பற்றி விரைவில் இறுதி முடிவு எடுத்துவிடுவோம்.

    அதன்பிறகு செப்டம்பர் 12-ந்தேதி முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் 80 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயரும் அறிவிக்கப்படும்.

    வெற்றி பெற வாய்ப்பு உள்ள வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பல்வேறு பிரச்சினைகளை ஆய்வு செய்ய வேண்டியது உள்ளது. ஜாதி மற்றும் பல்வேறு சூழ்நிலைகளையும் மையமாக கொண்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

    மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி, கோண்டுவானா கன்தந்ர கட்சி, ஆகியவற்றுடன் கூட்டணி அமைப்பது பற்றியும் ஆலோசனை நடத்தி வருகிறோம். 3 நாட்களுக்கு முன்பு நான் டெல்லி சென்றிருந்தபோது பகுஜன் சமாஜ் கூட்டணி பற்றி ஆலோசித்தேன். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    விரைவில் தேர்தல் அறிக்கையை இறுதி செய்ய உள்ளோம். எங்களால் செய்யக்கூடிய திட்டங்களை அறிவிப்பாக வெளியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×