search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kovai corporation"

    • மாநகராட்சி முழுவதும் தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது.
    • தற்போது மழைக்காலமாக உள்ளதால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விடுகிறது.

    கோவை

    கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில் மாநகராட்சி முழுவதும் தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது.

    எனவே இதனை கட்டுப்படுத்த உக்கடம் ஒண்டிப்புதூரில் செயல்பட்டு வரும் கருத்தடை மையத்தை துரிதப் படுத்த வேண்டும். தூய்மை பணியாளர்கள் 134 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு பதிலாக புதிய தூய்மை பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் மாநகர பகுதிகளில் குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்டு மூடப்படாமல் உள்ள குழிகளால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.

    இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் தற்போது மழைக்காலமாக உள்ளதால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விடுகிறது.

    எனவே வார்டு, வீதி வாரியாக கால்வாய்கள் தூர் வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும். புதிதாக கட்டிடம் கட்டுபவர்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கைகளை வைத்தனர்.

    அதற்கு மாநகராட்சி கமிஷனர் பிரதாப் பதில் அளித்து பேசுகையில் உரிய அனுமதியில்லாமல் குடிநீர் திட்ட பணிகளுக்காக குழிகளை தோண்டி மூடாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும்.

    கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் மேம்பாட்டுக்காக ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 மாநகராட்சி பள்ளிகளில் நாப்கின் வழங்கும் எந்திரம் மற்றும் நாப்கினை அழிக்கும் எந்திரம் வழங்கப்பட உள்ளது.தெரு நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • 20-வது வார்டு ராஜீவ்காந்தி நகரில் மழைநீர் வடிகால் கட்டும் பணி, ஸ்ரீநக் முதல் எப்.சி.ஐ.ரோடு வரை தார்சாலை அமைக்கும் பணி பாதியில் நிற்கிறது.
    • ஐஸ்வர்யா கார்டனில் கடந்த 11 ஆண்டுகளாக ரோடு, மழைநீர் வடிகால் வசதி இல்லை.

    கோவை:

    கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான அம்மன் அர்ச்சுணன், கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப்பை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

    அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    கோவை வடக்கு சட்டமன்ற ெதாகுதியில் கோவை மாநகராட்சி 20-வது வார்டு ராஜீவ்காந்தி நகரில் மழைநீர் வடிகால் கட்டும் பணி, ஸ்ரீநக் முதல் எப்.சி.ஐ.ரோடு வரை தார்சாலை அமைக்கும் பணி பாதியில் நிற்கிறது. அதை விரைந்து முடிக்க வேண்டும்.

    29-வது வார்டு அப்பநாயுடு லே-அவுட், வரதராஜ் லே-அவுட் ஆகிய இடங்களில் தார்சாலை மற்றும் மழைநீர்வடிகால் அமைக்க வேண்டும். ஐஸ்வர்யா கார்டனில் கடந்த 11 ஆண்டுகளாக ரோடு, மழைநீர் வடிகால் வசதி இல்லை. 47-வது வார்டு பூங்காவில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை போடப்பட்டும் பணிகள் இதுவரை தொடங்கவில்லை.

    மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பூங்கா போதிய பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இதனால் அவை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

    மேலும் மாநகராட்சியில் குடிநீர் வினியோகம் சீராக இல்லை. 42-வது வார்டு வ.உ.சி.நகர், சிவகாமி நகர் வீதிகளில் கான்கிரீட் நடைபாதை, தார்ரோடு, சாஸ்திரி ரோடு, கண்ணபிரான் நகர், எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் தார்சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும்.

    ரத்தினசபாபதி வீதி, சின்னம்மாள் வீதி, மணியம்காரியப்பன் வீதி, மருதகுட்டி வீதி, ஜானகி நகர், உள்ளிட்ட இடங்களில் சாலைகள் மோசமாக உள்ளன. இதனால் போக்குவரத்து பரிப்பு ஏற்படுகிறது. எனவே சாலைகளை சீரமைக்க வேண்டும்.

    45-வது வார்டு அம்மாசை வீதி, நர்மதா வீதி, கோகுலம் வீதி, பழனிக்கோனார் வீதி, நஞ்சம்மாள் வீதி உள்ளிட்ட இடங்களில் தார்சாலை அமைக்க வேண்டும். 43, 44 மற்றும் 45-வது வார்டுகளிலும் சாலைகள் சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

    1,22,35 ஆகிய வார்டுகளில் புதிய ரேஷன் கடை திறக்க வேண்டும். இங்கு கடை திறக்க வேண்டும். இங்கு குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும். அனைத்து வார்டுகளிலும் தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும். வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது அவருடன் சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெயராம், மாநகராட்சி கவுன்சிலர் பிரபாகரன் ஆகியோர் உள்ளனர்.

    • வாரம் ஒருமுறை குடிநீர் விநியோகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
    • நாட்டில் 75 சிறந்தநகரங்களில் 4-வது சிறந்த நகரமாக கோவை உள்ளது.

    கோவை:

    கோவை மாநகரை தூய்மை மற்றும் பசுமை நகரமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் பிரதாப் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கோவை மாநகரில் ஜூலை 1-ந் தேதி முதல் மாற்றியமைக்கப்பட்ட சொத்து வரி வசூல் செய்யும் பணிநடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள தொழில் வரி தற்போது ரூ.4 கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளது.

    வரும் வாரம் முதல் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மேயர் தலைமையில் நடைபெறும். பொதுமக்கள் தங்களது புகார்களை இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவிக்கலாம்.

    டவுன்ஹால், நஞ்சுண்டாபுரம், புலியகுளம், ராமநாதபுரம், வ.உ.சி. பூங்கா உள்ளிட்ட இடங்களில் 24 மணி நேர குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்தில் குழாய் பதிக்கும் பணிகளை 2023-ம் ஆண்டு ஜனவரிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறிச்சி பகுதி மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதி என்பதால் குடிநீர் விநியோகம் செய்யும் அளவு அதிகரிக்கப்படும்.

    மேலும், அங்கு எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு சிறப்பு திட்டம் ஏதேனும் செயல்படுத்த இயலுமா என்பதும் ஆய்வு செய்யப்படும். தேவைப்படும் இடங்களில் தண்ணீரின் அளவை அதிகரித்து வழங்கிட பூஸ்டர் பம்ப்' பொருத்தப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வாரம் ஒருமுறை குடிநீர் விநியோகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தரமான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறதா என்பது குறித்து மாதந்தோறும் மாதிரி குடிநீர் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்து பரிசோதனை செய்யப்படும்.

    போலந்து நாட்டில் நடைபெற்ற கருத்தரங்கில் ஸ்மார்ட் சிட்டி, நகரமைப்பு திட்டமிடுதல். தூய்மை மற்றும் பசுமை நகரம் (கிளீன் அன்ட் கிரீன் சிட்டி) குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் கோவை, கொச்சி, புவனேஸ்வர் மாநகராட்சிகள் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றோம். கோவை மாநகராட்சியை தூய்மை மற்றும் பசுமை நகரமாக மாற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

    அதற்காக சிறிது சிறிதாக திட்டமிடப்பட்டு வருகிறது. 100 வார்டுகளிலும் மியாவாகி திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் துரிதப் படுத்தப்படும். மழைநீர் சேகரிப் புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

    நாட்டில் 75 சிறந்தநகரங்களில் 4-வது சிறந்த நகரமாக கோவை உள்ளது. ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்றுள்ள வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், திவான் பகதூர் (டி.பி.) சாலை, ரேஸ்கோர்ஸ் உள்ளிட்டவை சிறந்த பகுதிகளாக உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×