search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bharatiya Janata"

    • பாரதீய ஜனதா சார்பில் செயற்குழு கூட்டம் வள்ளியூர் காமராஜ் நகரில் உள்ள அய்யா திருமண மண்டபத்தில் ஒன்றிய தலைவர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது.
    • ஒன்றிய பொதுச்செயலாளர் சார்லஸ் வரவேற்று பேசினார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் வடக்கு ஒன்றியத்தில் பாரதீய ஜனதா சார்பில் செயற்குழு கூட்டம் வள்ளியூர் காமராஜ் நகரில் உள்ள அய்யா திருமண மண்டபத்தில் ஒன்றிய தலைவர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை தலைவர் தளவாய் மற்றும் மாவட்ட செயலாளரும், ஒன்றிய பார்வையாளருமான சுந்தரராஜன் கலந்து கொண்டார். ஒன்றிய பொதுச்செயலாளர் சார்லஸ் வரவேற்று பேசினார். செயற்குழு தீர்மானங்களை மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்தழகன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் செல்வகுமார், வழக்கறிஞர் அணி பிரிவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணசாமியும்,

    வள்ளியூர் பேரூராட்சி பா.ஜனதா கவுன்சிலர் சுமித்ராவும் வாசித்தார்.

    ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணைத் தலைவர் ராமகுட்டி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட மற்றும் ஒன்றிய அணி மற்றும் பிரிவு நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் மற்றும் கிளை

    • கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • தோட்டக்கலை மூலம், ஒட்டுண்ணி இலவசமாக மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வழங்கிட இந்த செயற்குழு வேளாண் துறை அதிகாரிகளை வலியுறுத்துகிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள்நி றைவேற்றப்பட்டது.

    ஈரோடு:

    கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு அணிகளின் சார்பாக பலர் கலந்து கொண்டனர்.

    சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சொட்டு நீர் அமைப்பதற்கான மானியம் நிறுத்தி வைக்க ப்பட்டுள்ளதால் மேலும் சொட்டு நீர் அமைக்கும் நிறுவனங்களுக்கான அனுமதி இன்னும் தரப்படா ததால் விவசாயிகள் அவதி பட்டு வருகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட கலெக்டர் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.

    கள்ளிப்பூச்சி எனப்படும் மாவு பூச்சிகளால் ஏறக்குறைய ஈரோடு மாவ ட்டத்தில் மரவள்ளி கிழங்கு பயிரிடும் பரப்பளவு குறைந்து விட்டது.

    எனவே அதற்கான நடவடிக்கைகளை தோட்டக்கலை மூலம், ஒட்டுண்ணி இலவசமாக மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வழங்கிட இந்த செயற்குழு வேளாண் துறை அதிகாரிகளை வலியுறுத்துகிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள்நி றைவேற்றப்பட்டது.

    ஈரோடு வடக்கு மாவட்ட விவசாய அணி தலைவர்.ரகுகுமார் இந்த தீர்மானங்களை முன்மொழி ந்தார். இதில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் சதீஷ்குமார், நீராபாலு, மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் சிவகுமார் மற்றும்நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்காததால் மாயாவதிக்கும் அகிலேஷ் யாதவுக்கும் கடுமையான பின்னடைவு ஏற்பட்டது.

    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க முயற்சி நடந்தது. சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகியவை ஒன்றிணைந்து ஒரே அணியாக போட்டியிட திட்டமிடப்பட்டது.

    ஆனால் மாயாவதியும், அகிலேசும் காங்கிரசை தங்கள் அணியில் சேர்க்க விரும்பவில்லை. இரு கட்சிகளும் தனியாக போட்டியிட்டாலே பெரும்பாலான இடங்களை கைப்பற்ற முடியும் என்று அவர்கள் இருவரும் கருதினார்கள்.

    எனவே காங்கிரசை கண்டு கொள்ளாமல் கூட்டணியில் இருந்து கழற்றி விட்டனர். காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் அணிகள் எதிர்பார்த்தபடி அங்கு வெற்றி அடையவில்லை.

    மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 64 இடங்களை பாரதிய ஜனதா கூட்டணி கைப்பற்றியது. 10 இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சியும், 5 இடங்களில் சமாஜ்வாடி கட்சியும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டும் வென்றது.

    சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி இந்த அளவுக்கு பின்னடைவை சந்திக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு இது படுதோல்வியாக கருதப்படுகிறது.

    இந்த அணி மட்டும் காங்கிரசையும் கூட்டணியில் சேர்த்திருந்தால் அங்கு தேர்தல் முடிவு மாறி இருக்கும் என்று இப்போது புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

    காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு மாநிலத்தில் 6.3 சதவீத ஓட்டுக்களை பெற்றுள்ளது. அதிக இடங்களை பிடித்த பாரதிய ஜனதா கட்சிக்கு 49.56 சதவீத ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி கூட்டணிக்கு 38.62 சதவீத ஓட்டுகள் கிடைத்திருக்கின்றன.

    காங்கிரசையும் கூட்டணியில் சேர்த்திருந்தால் இந்த அணிக்கு 44.92 சதவீத ஓட்டுகள் கிடைத்திருக்கும். இதன் மூலம் மேலும் பல தொகுதிகள் இந்த அணிக்கு வந்திருக்கும். அதை பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி கட்சிகள் கோட்டைவிட்டு விட்டன.

     


    காங்கிரஸ் ஓட்டை பிரித்ததால் 10 தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றிருக்கிறது. பாரபங்கி, பதான், பாந்தா, பஸ்தி, தாராக்ரா, மீரட், சுல்தான்பூர், சாந்த்கபீர்நகர், மச்லிசார், பிரோசாபாத் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் ஓட்டையும், பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி ஓட்டுக்களையும் கூட்டினால் பாரதிய ஜனதாவை விட அதிகமாக உள்ளது.

    ஆனால் இந்த தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் பாரதிய ஜனதாவின் இந்த வெற்றியை தடுத்திருக்க முடியும்.

    பாரபங்கி தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் உபேந்திராசிங் ராவத் 1 லட்சத்து 10 ஆயிரத்து 140 ஓட்டுகள் வித்தியாசத்தில் சமாஜ்வாடி வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார். ஆனால் அந்த தொகுதியில் போட்டியிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர் பி.எல். புனியாவின் மகன் தனுச் 1 லட்சத்து 59 ஆயிரத்து 611 ஓட்டுக்கள் வாங்கினார். இங்கு 3 கட்சிகளும் கூட்டணி சேர்ந்திருந்தால் அவை வெற்றி பெற்றிருக்கும்.

    பதான் தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் சங்கமித்ரா மவுரியா 5 லட்சத்து 11 ஆயிரத்து 352 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். சமாஜ்வாடி வேட்பாளர் தர்மேந்திர யாதவ் 4 லட்சத்து 92 ஆயிரத்து 898 ஓட்டுக்கள் பெற்றிருந்தார். காங்கிரஸ் வேட்பாளர் இக்பால்சர்வாணிக்கு 51 ஆயிரத்து 947 ஓட்டுகள் கிடைத்திருந்தன. இங்கும் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் வெற்றி கிடைத்திருக்கும்.

    பாந்தா தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஷியாம சரன் குப்தா 4 லட்சத்து 18 ஆயிரத்து 988 ஓட்டுக்கள் பெற்றிருந்தார். பா.ஜ.க. வேட்பாளர் ஆர்.கே. சிங் 4 லட்சத்து 77 ஆயிரத்து 926 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் பால்குமார் பட்டேல் 75 ஆயிரத்து 438 ஓட்டுக்கள் பெற்றார். இங்கும் 3 கட்சிகளும் கூட்டணி அமைத்திருந்தால் 16,500 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும். இப்படி பல தொகுதிகளில் இதே நிலை நிலவுகிறது.

    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவில் 4 மந்திரிகள் உள்ளிட்ட 43 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் டிக்கெட் வழங்கப்படவில்லை. #RajasthanAssemblyElections #RajasthanElections

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஷ்கார், மிஜோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் 7-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

    ராஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. பாரதிய ஜனதா ஏற்கனவே 131 தொகுதிகளுக்கு கடந்த 11-ந் தேதி வேட்பாளர்களை அறிவித்தது.

    நேற்று 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில், 31 வேட்பாளர்கள் இடம்பெற்று இருந்தனர். அதன்படி இது வரை 162 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தொகுதிகளில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள 43 பேருக்கு மீண்டும் டிக்கெட் வழங்கப்படவில்லை. அதில், 4 பேர் மந்திரிகள் ஆவர்.

    இதுவரை வந்த பட்டியல் படி 92 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் டிக்கெட் கிடைத்துள்ளது. மேலும் பா.ஜ.க.வில் முஸ்லிம்கள் யாருக்கும் இதுவரை டிக்கெட் கொடுக்கப்படவில்லை.

    கடந்த தேர்தலில் பல முஸ்லிம் வேட்பாளர்களும், பாரதிய ஜனதாவில் நிறுத்தப்பட்டு இருந்தனர். ஆனால், இந்த ஆண்டு அவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை.

    இன்னும் அடுத்த பட்டியல் வர இருக்கிறது. அதில் இடம் அளிக்கப்படுமா? என்று தெரியவில்லை. முஸ்லிம்கள் யாருக்கும் டிக்கெட் வழங்காதது குறித்து காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

    இதற்கு பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் சுதன்சு திரிவேதி பதில் அளிக்கும் போது, ஜாதி, மதம் பார்த்து டிக்கெட் வழங்குவது காங்கிரசின் கொள்கை. பாரதிய ஜனதாவை பொருத்த வரை இந்த கொள்கையை பின் பற்றுவதில்லை என்று கூறினார். #RajasthanElections #RajasthanAssemblyElections

    ×