என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
பாராளுமன்றம் - 7 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தவறாக வெளியிட்டது யார்? - விசாரணை நடத்த உத்தரவு
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் தேதிகளை இறுதி செய்வது தொடர்பாக தேர்தல் கமிஷன் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.
பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 7 மாநில சட்ட சபைகளுக்கான தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்படுகிறது. பிப்ரவரி மாத இறுதியில் தேர்தல் குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஊடகங்கள் மற்றும் சமூக வலை தளங்களில் பாராளுமன்றம் மற்றும் 7 மாநில சட்டசபை தேர்தல் குறித்து தகவல் வெளியிடப்பட்டு வருகிறது.
பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்-மே மாதங்களில் 9 முதல் 10 கட்டங்களாக தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் கமிஷன் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலப்பிரதேசம், காஷ்மீர், மராட்டியம், அரியானா ஆகிய 7 மாநில சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்றும், இதன் மூலம் அரசுக்கு தேர்தல் நடத்தும் செலவும் குறையும் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் சமூக வலை தளங்களில் பாராளுமன்ற தேர்தல் அட்டவணை என்ற பெயரில் ஒரு பட்டியல் வெளியானது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுதான் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாத நிலையில் இதுபோன்று வெளியான தகவல்கள் தேர்தல் கமிஷன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து இந்த விவகாரத்தை கருத்தில் கொண்ட தேர்தல் கமிஷன் இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. டெல்லி போலீசின் தகவல் தொழில்நுட்ப பிரிவு களத்தில் இறங்கியுள்ளது.
தேர்தல் அட்டவணை முதன் முதலில் எங்கு இருந்து பரவியது என்பதை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். #Election #Parliament
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்