என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உளவு"

    • இந்திய கடற்படையின் ரகசிய தகவல்கள் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் மூலம் பாகிஸ்தானுக்கு விற்பனை
    • இந்திய கடற்படை கப்பல்கள் கேரளாவில் உள்ள கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்படுகின்றன.

    பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இருவரை கர்நாடக காவல்துறை கைது செய்துள்ளது. உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரோஹித் (20) மற்றும் சாண்ட்ரி (37) என அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகள், கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் மல்பே பிரிவில் பணியாற்றி வந்தனர்.

    இந்நிலையில் கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, கப்பல் கட்டும் தளத்தின் ரகசிய தகவல்கள் வெளியில் கசிவதாக, ஊழியர்கள் மீது மல்பே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஊழியர்களை கண்காணித்து இருவரையும் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் ரோஹித்-தான் முக்கிய குற்றவாளி என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கடந்த 6 மாதங்களாக மால்பே பிரிவில் இன்சுலேட்டராக பணிபுரிந்த ரோஹித், கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் பணிபுரிந்த தனது கூட்டாளி சாண்ட்ரி உடன் இணைந்து இந்திய கடற்படை கப்பல்களின் ரகசிய பட்டியல், அவற்றின் அடையாள எண்கள், மத்திய அரசின் கீழ் உள்ள துறைமுகங்கள், கப்பல் கட்டும் தள நடவடிக்கைகள் மற்றும் கடற்படை கப்பல்கள் போன்றவற்றின் விவரங்களை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் மற்றும் பிறநாடுகளுக்கு கொடுத்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மால்பே பிரிவுக்கு மாற்றப்பட்ட பிறகும், ரோஹித் சாண்ட்ரியிடமிருந்து தகவல்களைப் பெற்று வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலம் பாகிஸ்தானுக்கு பகிர்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்திய கடற்படை கப்பல்கள் கேரளாவில் உள்ள கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் மல்பே பிரிவு தனியார் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்காக கப்பல்களை உற்பத்தி செய்கிறது. 

    • ஆபரேஷன் சிந்தூர் குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்டதாக கடற்படை ஊழியர் ஒருவர் சிக்கி உள்ளார்.
    • தகவல்களை பகிர்வதற்காக பிரியா சர்மாவிடம் இருந்து பணம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

    காஷ்மீரின் பகல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் புகுந்து அங்கிருந்த 9 தீவிரவாத முகாம்களை அழித்தது.

    இதில் அந்த முகாம்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பெண் யூ-டியூபர் ஜோதி மல்கோத்ரா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

    தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் புலனாய்வு அமைப்பினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதில் ராஜஸ்தான் சி.ஐ.டி. புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்டதாக கடற்படை ஊழியர் ஒருவர் சிக்கி உள்ளார்.

    அரியானாவை சேர்ந்த விஷால் யாதவ் என்ற அந்த கடற்படை ஊழியர் டெல்லியில் உள்ள கடற்படை தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் பாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்த பிரியா சர்மா என்று கூறிக்கொள்ளும் பெண்ணுடன் சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

    இவர் இந்திய பாதுகாப்பு குறித்த தகவல்களை பகிர்வதற்காக பிரியா சர்மாவிடம் இருந்து பணம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. ஆன்-லைன் விளையாட்டுகளில் அடிமையான விஷால் யாதவ் அதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டுவதற்காக பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு உளவு பார்த்தது தெரிய வந்தது.

    மேலும் கிரிப்டோ கரன்சி மூலமாகவும், தனது வங்கி கணக்கிலும் நேரடியாக பணம் பெற்றதை உறுதி செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரிடம் இந்த சம்பவத்தின் பின்னணியில் வேறு யார், யாருக்கு தொடர்பு உள்ளது? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

    • ஷாஜாத் இந்தியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ. முகவர்களுக்கு பணம் மற்றும் சிம்கார்டுகளை வழங்கி வந்தது தெரியவந்தது.
    • தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரண நடத்தி வருகின்றனர்.

    பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானா மாநிலத்தை சேர்ந்த பிரபல பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேசம் ராம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஷாஜாத்.

    தொழிலதிபரான இவர் பலமுறை பாகிஸ்தானுக்கு பயணம் செய்த நிலையில், அங்கிருந்து சட்ட விரோதமாக அழகு சாதன பொருட்கள், ஜவுளி, மசாலா பொருட்களை கடத்தி வந்துள்ளார்.

    இவர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு உளவுபார்த்து வருவதாக உத்தரபிரதேச காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் உத்தரபிரதேச சிறப்பு படை போலீசார் ஷாஜாத்தை தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் அவரை நேற்று மொராதாபாத்தில் வைத்து கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் ஷாஜாத் இந்தியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ. முகவர்களுக்கு பணம் மற்றும் சிம்கார்டுகளை வழங்கி வந்தது தெரியவந்தது.

    மேலும் ராம்பூர் மாவட்டம் மற்றும் உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களை ஐ.எஸ்.ஐ.க்காக உளவு பார்க்க ஆட்களை சேர்க்க முயன்றதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரண நடத்தி வருகின்றனர். 

    • இரண்டு குழுக்கள் உளவுப்பணியில் ஈடுபட்டதாக இஸ்ரேல் கண்டுபிடித்தது.
    • அதனைத் தொடர்ந்து ஒரு தம்பதி ஈரானுக்கு உளவு வேலை பார்த்துள்ளதாக கைது செய்துள்ளது.

    இஸ்ரேல்- காசா இடையிலான போர் காரணமாக ஈரானுக்கும்- இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் போக்கு அதிகரித்துள்ளது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வைத்து கொள்ளப்பட்டதற்கு பிறகு இந்த மோதல் மேலும் அதிகரித்துள்ளது.

    ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும விதமாக ஈரான் கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. கடந்த வாரத்தில் இஸ்ரேல் பதிலடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.

    இதற்கிடையே இரண்டு தரப்பிலும் இருந்து உளவு பார்க்க ஆட்களை நியமிப்பதில் தீவிரம் காட்டப்படுகிறது. இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை ஈரானில் உளவாளிகளை வைத்துதான் இஸ்மாயில் ஹனியேவை கொலை செய்ததாக ஈரான் குற்றம்சாட்டியது.

    ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தும்போது நேரடியாக தாக்குதல் நடத்த முடியாது. அங்குள்ள ராணுவ நிலைகள், முக்கியமான வளங்கள் எங்கே இருக்கின்றன போன்ற ரகிசிய தகவலை பெற வேண்டும். அதற்காக உளவு சொல்லக் கூடியவர்களை தயார் செய்வார்கள். தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களை அங்கு அனுப்பி வைப்பார்கள். இல்லை எனில் பணம் கொடுத்து அந்த நாட்டை சேர்ந்தவர்களையே உளவு பார்க்கும் பணியில் ஈடுபடுத்துவார்கள்.

    இந்த உளவுப் பணியில் இஸ்ரேல் மிகவும் பயங்கரமாக செயல்படும். அவர்கள் யாரை உளவு பார்க்க பணியமர்த்தியுள்ளார் என எதிரி நாடுகளால் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவிற்கு மொசாட் தனது உளவுப்பணிகளை செய்து வருகிறது.

    அப்பேற்பட்ட மொசாட் உள்ள இஸ்ரேல் நாட்டிலேயே ஈரான் உளவு பார்ப்பதற்கான ஆட்களை தாயர் படுத்தியுள்ளது என்ற செய்தி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

    கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இரண்டு குழுக்கள் ஈரானுக்கு உளவு பார்த்ததாக, அதில் உள்ளவர்களை கைது செய்தது இஸ்ரேல் போலீஸ். இந்த நிலையில் தற்போது ஒரு தம்பதி உளவு வேலை பார்த்தாக சந்தேகித்து கைது செய்துள்ளனர்.

    இஸ்ரேலியர்களை தொடர்ந்து உளவாளி வேலைகளுக்கு அமர்த்தும் ஈரானின் முயற்சிகள் முறியடிக்கப்படும் என இஸ்ரேல் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

    இஸ்ரேலின் மத்திய நகரான லாட்டை சேர்ந்த அந்த ஜோடி, தேசிய கட்டமைப்பு, பாதுகாப்பு இடங்கள் போன்றவை தொடர்பாக தகவல் சேகரித்துள்ளனர்.

    • சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • உளவு பார்த்ததாக கூறி 5 சீனர்களை பிலிப்பைன்ஸ் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    மணிலா:

    தென்சீனக்கடல் விவகாரத்தில் பிலிப்பைன்ஸ்-சீனா இடையே சமீப காலமாக பதற்றமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே சீனாவைச் சேர்ந்த சிலர் தங்களை தைவான் நாட்டவர்களாக கூறிக்கொண்டு பிலிப்பைன்சுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். ஆனால் அங்குள்ள ஸ்ப்ட்ராட்லி தீவு அருகே சூரிய சக்தியில் இயங்கும் கேமராக்களை நிறுவி அவர்கள் கண்காணித்தனர்.

    பின்னர் சந்தேகத்தின்பேரில் போலீசார் அவர்களது ஆவணங்களை சோதனை செய்தபோது அவர்கள் அனைவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து உளவு பார்த்ததாக கூறி 5 சீனர்களை பிலிப்பைன்ஸ் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×