என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jothi"

    • பாகிஸ்தானுக்கு சென்ற அவர் அங்கு ஐ.எஸ்.ஐ.யுடன் நேரடி தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது.
    • அவரது செல்போன் மற்றும் லேப்டாப்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.

    பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானா மாநிலத்தை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்கோத்ரா கடந்த 17ம் தேதி கைது செய்யப்பட்டார்.

    அவர் கடந்த 2023-ம் ஆண்டு முதல் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி எஹ்சான் உர் ரஹீம் என்ற டேனிஸ் என்பவருடன் தொடர்பில் இருந்ததும், அவர் மூலம் பாகிஸ்தான் உளவுத்துறையினருக்கு முக்கியமான தகவல்களை அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. டேனிஸ் மூலமாக பாகிஸ்தானுக்கு சென்ற அவர் அங்கு ஐ.எஸ்.ஐ.யுடன் நேரடி தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. அவரது செல்போன் மற்றும் லேப்டாப்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.

    இதில் லேப்டாப்பில் இருந்து 12 டெரா பைட்ஸ்சுக்கும் அதிகமாக டிஜிட்டல் தரவுகள் இருந்தன. அவற்றை ஆய்வு செய்ததில் ஜோதி மல்கோத்ரா பாகிஸ்தான் உளவுத்துறையுடன் அரட்டையடித்ததும், அவர்களுடனான அழைப்பு பதிவுகள், வீடியோ காட்சிகள், நிதி பரிவர்த்தனைகள் அனைத்தும் சிக்கின.

    ஜோதி மல்கோத்ரா ஐ.எஸ்.ஐ.யுடன் நேரடி தொடர்பில் இருந்ததாகவும், குறிப்பாக 4 பாகிஸ்தானியர்களுடன் நேரடி தொடர்பில் இருந்து தகவல்களை பரிமாறியதற்கான ஆதாரங்களும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து சிறப்பு பாதுகாப்பு அனுமதி மற்றும் சலுகைகளை பெற்றிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மேலும் வி.ஐ.பி. சலுகையை பயன்படுத்திய ஜோதி மல்கோத்ரா, பாகிஸ்தானில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாகூர் உள்பட பல்வேறு இடங்களில் சுற்றிய காட்சிகளும் டிஜிட்டல் ஆவணங்களில் இருந்தன. இந்த வீடியோக்கள் ஜோதியின் பாகிஸ்தான் பயணங்களில் அவர் வி.ஐ.பி. வரவேற்பு பெற்றதை அம்பலப்படுத்தி உள்ளது.

    மேலும் ஜோதி மல்கோத்ரா வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்ற விபரங்கள் தொடர்பாக டிஜிட்டல் ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக ஹிசார் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே போலீஸ் காவல் முடிந்து யூடியூபர் ஜோதி மல்கோத்ரா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    • சீன உளவு அமைப்புடன் தொடர்பு இருந்த விவரம் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
    • சீனாவில் இருந்த போது அவர் யார்-யாரை சந்தித்தார்? எங்கெல்லாம் சென்றார் என்ற விவரங்கள் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் இந்தியாவை சேர்ந்த சிலர் உளவாளிகளாக செயல்பட்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பணத்துக்கு ஆசைப்பட்டு சொந்த நாட்டையே காட்டி கொடுத்ததாக அரியானாவை சேர்ந்த பெண் யூடியூபர் ஜோதி மல்கோத்ரா உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் கைதான ஜோதி மல்ஹோத்ரா பற்றி தான் தினந்தோறும் புது புது தகவல்கள் வெளியாகி வருகிறது. 5 நாட்கள் போலீஸ் காவலில் உள்ள அவரிடம் அரியானா போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பினர் கூட்டாக விசாரித்து வருகின்றனர். விசாரணையில் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்தது தொடர்பான பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    டிராவல் வித் ஜோ என்ற யூடியூப் சேனல் நடத்தி வரும் ஜோதி பல இடங்களுக்கு சுற்றுலா சென்று அது தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

    ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சீக்கிய யாத்ரீகர்கள் பாகிஸ்தானில் உள்ள புனித தலங்களான நங்கனா, சாஹிப், கர்தார்பூர், பங்ஞாசாஹிப் மற்றும் லாகூரில் உள்ள குருத்வாரா ,தேரா சாஹிப் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வது வழக்கம்.

    அதே போல தான் ஜோதி மல்ஹோத்ராவும் சீக்கியர்களின் புனித திருவிழாவாக கருதப்படும் பைசாகி விழாவுக்கு செய்தி சேகரிக்கும் போர்வையில் கடந்த 2023-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்றார். இதற்காக அவர் இந்தியாவில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட ஆன்மீக பயண ஒருங்கிணைப்பாளர் ஹர்கிராத் சிங் என்பரை அணுகினார். அவரது மூலம் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றிய எஷான் என்கிற டேனிஷ் என்பவருடன் ஜோதிக்கு பழக்கம் ஏற்பட்டது.

    அவரது ஏற்பாட்டில் தான் அவர் பாகிஸ்தான் சென்றார். அங்கு ஜோதியை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு டேனிஷ் அறிமுகப்படுத்தி வைத்தார். இதற்கு பிறகு தான் ஜோதி ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பாகிஸ்தான் உளவாளியாக மாறினார். தொடர்ந்து அவர் ஐ.எஸ்,ஐ.யுடன் தொடர்பில் இருந்து வந்தார்.

    2024-ம் ஆண்டு மே மாதம் 17-ந்தேதி ஜோதி மீண்டும் பைசாகி திருவிழாவுக்காக பாகிஸ்தான் சென்றார். அவர் அங்கு 20 நாட்கள் வரை தங்கினார்.

    இந்த சமயத்தில் அவர் பாகிஸ்தான் விருந்தோம்பல், உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சாரத்தை பாராட்டும் விதமாக வீடியோக்களும் வெளியிட்டார். பின்னர் அவர் இந்தியா திரும்பி வந்தார். ஒரு மாதம் கழித்து அவர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார்.

    மேலும் அவர் நேபாளம், வங்காளதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தாய்லாந்து, இந்தோனேஷியா, பூடான் உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று வந்தார். அவர் சீனாவுக்கு எதற்கு சென்றார் என்பது தான் அதிகாரிகளுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு சீன உளவு அமைப்புடன் தொடர்பு இருந்த விவரம் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் சீனாவில் இருந்த போது அவர் யார்-யாரை சந்தித்தார்? எங்கெல்லாம் சென்றார் என்ற விவரங்கள் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோதி மல்ஹோத்ராவுக்கு பாகிஸ்தானை சேர்ந்த மேலும் 6 அதிகாரிகளுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த அதிகாரிகளுக்கு இந்தியா தொடர்பான முக்கியமான தகவல்கள், இந்திய ராணுவத்தின் நகர்வுகள் குறித்து பகிர்ந்து கொண்டதாகவும், அவர்களுக்கு உளவு பார்த்த விவரமும் தெரிய வந்து உள்ளது.

    பாகிஸ்தான் அதிகாரிகளுடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்து உள்ளார். அவர்கள் தொடர்பான விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

    இதைத்தவிர பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லை வரை அவர் சென்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதன் மூலம் கண்டிப்பாக அவர் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    மேலும் சமூக வலைதளத்தை பயன்படுத்தி அவர் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்து இருக்கலாம், அந்த அமைப்பிற்கு பணத்துக்காக ஆட்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஜோதி மல்ஹோத்ரா தடம் மாறி சென்றதற்கு நவீன தொழில்நுட்பம் பெரிதும் உதவி செய்துள்ளது.

    இதையடுத்து அவரது செல்போன்களை பறிமுதல் செய்துள்ள போலீசார் அதனை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவரது வங்கி கணக்குகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அவருக்கு யார் யார் பணம் அனுப்பி உள்ளனர் என்ற விவரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    பஹல்காமில் கடந்த மாதம் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு முன்பாக ஜோதி பலமுறை ஜம்மு-காஷ்மீர் சென்று உள்ளார். பஹல்காம் பகுதிக்கு அவர் சமீபத்தில் சென்று உள்ளார். குல்மார்க், தால் ஏரி, மற்றும் லடாக்கில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு பகுதிகளிலும் அவர் சுற்றி திரிந்துள்ளார்.

    இது தொடர்பான சுற்றுலா வீடியோக்களையும் அவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு உள்ளார். ஜோதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பஹல்காம் பகுதிக்கு சென்று வந்ததும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாகவும் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் கைதான 2 நாட்களுக்கு பிறகு ஜோதி மல்ஹோத்ராவின் இன்ஸ்டாகிராம் கணக்கை அதிகாரிகள் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர். ஜோதி மல்ஹோத்ராவை யூடியூப்பில் 4 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 1 லட்சத்து 32 ஆயிரம் பேரும் பின் தொடர்ந்து வந்தனர். அவர் கைதான பிறகு 48 மணி நேரத்தில் அவரை பற்றிய விவரங்களை அறிய 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கூகுளில் தேடியதும் தெரியவந்துள்ளது.

    • அமாவாசையிலிருந்து ஐந்தாம் நாள், பவுர்ணமியில் இருந்து ஐந்தாம் நாள் இந்நாட்களில் வருவது பஞ்சமி திதி.
    • கல்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்து சுலோகங்கள் கூறி விளக்கிற்கு பூஜை செய்யவும்.

    அமாவாசையிலிருந்து ஐந்தாம் நாள், பவுர்ணமியில் இருந்து ஐந்தாம் நாள் இந்நாட்களில் வருவது பஞ்சமி திதி.

    "பஞ்ச" என்றால் ஐந்து என்று பொருள்.

    பஞ்சமி திதியன்று குத்துவிளக்கில் ஐந்து எண்ணெய் கலந்து ஐந்து முகத்தினையும் ஏற்றி

    கல்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்து சுலோகங்கள் கூறி விளக்கிற்கு பூஜை செய்யவும்.

    தீபத்தில் எரியும் ஐந்து முகங்களில் ஏதாவது ஓர் தீபத்தை உற்றுப் பார்த்தபடியே மனதை ஒரு முகப்படுத்தி

    நம்முடைய வேண்டுதல்களை மனதிற்குள் சொல்லி வந்தால் அது நிச்சயம் நிறைவேறும்.

    இப்படி ஜோதியை நோக்கி வழிபடும்போழுது "ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை சொல்லவும்.

    இப்படி செய்தால் அம்பிகையின் அருளாளல் நமது வேண்டுதல்கள் நிறைவேறும்.

    • இயக்குனர் கிருஷ்ண பரமாத்மா இயக்கத்தில் நடிகை ஷீலா நடித்துள்ள படம் ஜோதி.
    • இப்படம் எமோஷனல் கலந்த கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது.

    இயக்குனர் கிருஷ்ண பரமாத்மா இயக்கத்தில் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் "ஜோதி". எமோஷனல் கலந்த கிரைம் திரில்லரான இப்படத்தில் நடிகை ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார். ஹரி க்ரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராஜா சேதுபதி தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைத்துள்ளார். கார்த்திக் நேத்தா பாடல் எழுதியுள்ளார்.

    ஜூலை திரையராங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் பாடல் "போவதெங்கே" நேற்று தனியார் கல்லூரியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா கூறியதாவது, "இப்படத்திற்கும் எனக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு, எனது சொந்த வாழ்வின் நிகழ்வை இப்படம் பிரதிபலிப்பதால் அனைத்து பாடல் வரிகளும் மிகவும் ஆழமாகவும், அர்த்தமுள்ளதாகவும் அமைக்க முடிந்தது. படத்தில் அமைக்கப்பட்ட காட்சிகள் என் வரிகளுக்கு உயிரோட்டமாக அமைந்துள்ளது. முதல் பத்து நிமிட காட்சியை கண்டு மிரண்டு விட்டேன். இப்படத்தையும், பாடல்களையும் மக்கள் பெரிதும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.

    ஜோதி

    ஜோதி

    மேலும், "போவதெங்கே" பாடலை பார்த்த மாணவர்கள் இப்பாடலின் இறுதியில் வரும் கடைசி மூன்று வரிகள் ஒரு ஹைக்கூ கவிதை போன்று இருந்ததாகவும், படத்தை பார்க்க மிகுந்த ஆர்வத்தை தூண்டுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    கஸ்தூரிராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் - ஆசிப் - மேகாலி நடிப்பில் உருவாகி வரும் பாண்டிமுனி படத்தின் முன்னோட்டம். #PandiMuni
    தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி, திருவிளையாடல் ஆரம்பம், 3 ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் பாண்டிமுனி. இந்த படத்தின் படப்பிடிப்பு கோத்தகிரி, ஊட்டி பகுதிகளில் நடைபெற்றது.

    இந்த படத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கின்றார். கதாநாயகனாக ஆசிப் என்ற மாடல் அறிமுகமாகிறார். நாயகிகளாக மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே நடிக்கிறார்.

    ஒளிப்பதிவு - மது அம்பட், இசை - ஸ்ரீகாந்த் தேவா, கலை - ஸ்ரீமான் பாலாஜி, நடனம் - சிவசங்கர், சண்டைப்பயிற்சி - சூப்பர்சுப்பராயன்,  எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - கஸ்தூரி ராஜா.



    படம் பற்றி இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசும் போது,

    இது ஒரு பயங்கரமான ஹாரர் படம். சுமார் 70 வருடங்களுக்கு முன்னால் காட்டுப்பகுதி அரண்மனையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது. படப்பிடிப்பு கோத்தகிரியில் நடைபெற்ற போது, ஆச்சர்யமான ஒரு சம்பவம் ஒன்று நடந்தது, பனகுடிசோலை என்கிற இடத்தில் அந்தப்பகுதி மக்கள் தங்களது இஷ்ட கடவுளாக கும்பிடும் குட்டஞ்சாமி கோயில் உள்ளது. இந்த கோயில் சுமார் ஆயிரம் வருஷம் பழமையானது என்கிறார்கள். அந்த கோயிலுக்கு பஞ்ச பாண்டவர்கள் வந்து சென்றதாகவும் சொல்கிறார்கள். 

    அங்கே வந்த ஊர் மக்கள் இந்த கோயிலுக்குள் பெண்கள் செல்லக் கூடாது. செருப்பு உபயோகிக்கக் கூடாது என்றார்கள். மறுநாள் அந்த இடத்திற்கு அருகில் படப்பிடிப்பை நடத்தினோம். சென்ற கொஞ்ச நேரத்திலேயே நாயகி மேகாலிக்கு சாமி வந்து ஆட ஆரம்பித்து விட்டார். நாங்கள் வெல வெலத்துப் போய்விட்டோம். ஊர்க்காரர்கள் ஒன்று கூடி பரிகார பூஜை செய்த பிறகே சாமியாட்டம் நின்றது. 
    அதை விட இன்னொரு அதிசயமும் நடந்தது. பனகுடி சோலையில் குட்டஞ்சாமி கோயில் மேல் ஹெலிகேம் பறக்கவில்லை என்றார். #PandiMuni

    கஸ்தூரி ராஜா இயக்கத்தில் `பாண்டிமுனி' படம் உருவாகி வரும் நிலையில், படப்பிடிப்பின் போது சில ஆச்சரியமான சம்பவங்கள் நிகழ்ந்தது படக்குழுவை அதிசயிக்கச் செய்துள்ளது. #PandiMuni
    கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவாகும் பாண்டிமுனி படத்தின் படப்பிடிப்பு கோத்தகிரி, ஊட்டி பகுதிகளில் 25 நாட்கள் நடைபெற்றது. இந்தப்படத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கின்றார். கதாநாயகனாக ஆசிப் என்ற மாடல் அறிமுகமாகிறார். நாயகிகளாக மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே நடிக்கிறார்.

    படம் பற்றி இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசும் போது,

    இது ஒரு பயங்கரமான ஹாரர் படம். சுமார் 70 வருடங்களுக்கு முன்னால் காட்டுப்பகுதி அரண்மனையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது. படப்பிடிப்பு கோத்தகிரியில் நடைபெற்ற போது, ஆச்சர்யமான ஒரு சம்பவம் ஒன்று நடந்தது, பனகுடிசோலை என்கிற இடத்தில் அந்தப்பகுதி மக்கள் தங்களது இஷ்ட கடவுளாக கும்பிடும் குட்டஞ்சாமி கோயில் உள்ளது. இந்த கோயில் சுமார் ஆயிரம் வருஷம் பழமையானது என்கிறார்கள். அந்த கோயிலுக்கு பஞ்ச பாண்டவர்கள் வந்து சென்றதாகவும் சொல்கிறார்கள். 


    அங்கே வந்த ஊர் மக்கள் இந்த கோயிலுக்குள் பெண்கள் செல்லக் கூடாது. செருப்பு உபயோகிக்கக் கூடாது என்றார்கள். மறுநாள் அந்த இடத்திற்கு அருகில் படப்பிடிப்பை நடத்தினோம். சென்ற கொஞ்ச நேரத்திலேயே நாயகி மேகாலிக்கு சாமி வந்து ஆட ஆரம்பித்து விட்டார். நாங்கள் வெல வெலத்துப் போய்விட்டோம். ஊர்க்காரர்கள் ஒன்று கூடி பரிகார பூஜை செய்த பிறகே சாமியாட்டம் நின்றது. 
    அதை விட இன்னொரு அதிசயமும் நடந்தது. பனகுடி சோலையில் குட்டஞ்சாமி கோயில் மேல் ஹெலிகேம் பறக்கவில்லை. 

    கோயிலை சுற்றியுள்ள இடங்களில் பறந்த ஹெலிகேம், கோயில் மேல் பறக்காதது ஏன் என்பது தான் ஆச்சர்யமானது. ஆசிப், மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா ஆகியோர் சம்மந்தப்பட்ட காட்சிகள் மூன்று பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டப் படப்பிடிப்பில் ஜாக்கி ஷெராப் அகோரி கெட்டப்பில் இணைய உள்ளார் என்றார். #PandiMuni

    ×