search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "G7 summit"

    • டெல்லியில் நடந்த ஜி-20 மாநாட்டில் இந்த வழித்தடத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் அதை செயல்படுத்துவதற்கான பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
    • இது இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா நாடுகளில் ரயில் மற்றும் கப்பல் வழித்தடத்தை ஏற்படுத்தி பொருளாதார பயன்பாட்டிற்காக இணைக்கும் திட்டமாகும்.

    அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து நாடுகளை கொண்ட ஜி7 கூட்டமைப்பின் 50வது உச்சி மாநாட்டை இந்த வருடம் இத்தாலி தலைமையேற்று நடத்தியது. கடந்த ஜூன் 13 முதல் 15 வரை நடந்த இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த மாநாட்டில் உக்ரைன் ரஷ்ய போர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. குறிப்பாக இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா வழித்தடத்தை மேம்படுத்துவதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு  டெல்லியில் நடந்த ஜி-20 மாநாட்டில் இந்த வழித்தடத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் அதை செயல்படுத்துவதற்கான பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

     

    இந்த திட்டத்தில் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும். இது இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா நாடுகளில் ரயில் மற்றும் கப்பல் வழித்தடத்தை ஏற்படுத்தி பொருளாதார பயன்பாட்டிற்காக இணைக்கும் திட்டமாகும்.

    இந்தியாவின் மேற்கு கரையில் இருந்து அனுப்பப்படும் பொருட்கள் கப்பல் வழியாக எமிரேட்ஸுக்கு சென்று அங்கிருந்து ரயில் வழியாக ஐரோப்பாவிற்கு செல்லும். இந்நிலையில்தான் தற்போது ஜி7 நாடுகள் கூட்டத்தில் எமிரேட்ஸில் ரயில் தடத்தை மேம்படுத்தி இந்த திட்டத்தை செயல்படுத்துவது என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.

    ஜி 7 நாடுகள் இந்த திட்டதை செயல்படுத்த ஆர்வம் காட்டுவதற்கு முக்கிய காரணம் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இது  அமையும் என்பதே ஆகும். எது எப்படியாக இருந்தாலும் இந்த திட்டத்தால் இந்தியாவில் பொருளாதார உறவுகள் மேம்படும் என்பது உறுதி.

    • ஜி-7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மாநாட்டின் நடுவே இத்தாலியின் பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்தார்.
    • மெலோனி மோடியுடன் ‘செல்பி’ வீடியோ எடுத்தார்.

    இத்தாலியில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டின் நடுவே இத்தாலியின் பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்தார். அப்போது மெலோனி மோடியுடன் 'செல்பி' வீடியோ எடுத்தார். பின்னர் அவர் அந்த வீடியோவை 'மெலோடி' என்ற தலைப்புடன் 'எக்ஸ்' தளத்தில் பகிர்ந்தார். இருவரின் பெயரையும் குறிக்கும் வகையில், 'மெலோடி' என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார்.

    அந்த வீடியோவில், 'மெலோடி குழுவில் இருந்து ஹலோ' என்று மெலோனி கூற அவருக்கு பின்னால் நிற்கும் பிரதமர் மோடி சத்தமாக சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

    இதனிடையே மெலோனி பகிர்ந்த வீடியோவை பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் மீண்டும் பகிர்ந்து 'இந்தியா-இத்தாலி நட்புறவு நீண்டநாள் நீடிக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வீடியோ வைரல் ஆனது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இத்தாலி பிரதமர் மெலோனியுடன், பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட, 'செல்பி' பெரும் வரவேற்பை பெற்றது.
    • மெலோடி என்ற வார்த்தையும் ட்ரெண்டானது.

    50-வது ஜி7 உச்சிமாநாடு இத்தாலியின் அபுலியாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்

    இந்த மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியுடன் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.

    இந்நிலையில், மோடியுடன் எடுத்த செல்ஃபி வீடியோவை இத்தாலி பிரதமர் மெலோனி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அதில், 'மெலோடி டீமிடம் இருந்து ஹலோ' ( Hello from the Melodi team ) என்று கூற பின்னால் பிரதமர் மோடி சிரித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

    இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இத்தாலி பிரதமர் மெலோனியுடன், பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட, 'செல்ஃபி' பெரும் வரவேற்பை பெற்றது. அப்போது இருவரின் பெயரையும் குறிக்கும் வகையில், 'மெலோடி' என்ற வார்த்தையை மெலோனி பயன்படுத்தினார். அப்போது மெலோடி என்ற வார்த்தையும் ட்ரெண்டானது.

    • தொழில் நுட்பத்தில் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
    • செயற்கை நுண்ணறிவு குறித்த தேசிய மூலோபாயத்தை வகுத்த முதல் சில நாடுகளில் இந்தியாவும் உள்ளது.

    அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கி ஜி-7 அமைப்பின் மாநாடு இத்தாலியில் நடந்தது. இதில் இத்தாலியின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் மெக்ரான், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகிய நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது பல்வேறு விஷயங்களை பற்றி ஆலோசனை நடத்தினார்.

    மேலும் போப் ஆண்டவர் பிரான்சிசை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இருவரும் ஆரத்தழுவிக்கொண்டனர். இந்த சந்திப்பின்போது, போப் ஆண்டவர் பிரான்சிசை இந்தியாவுக்கு வரும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

    இதற்கிடையே ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பேசும்போது, தொழில் நுட்பத்தில் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். ஒரு உள்ளடக்கிய சமுதாயத்தின் அடித்தளத்தை அமைப்பதற்கு அது ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும்.

    செயற்கை நுண்ணறிவுக்கு குறிப்பாக முக்கியத்துவம் கொடுத்து தொழில்நுட்பத்தில் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வருவதன் முக்கியத்துவம் நாம் உணர வேண்டும். செயற்கை நுண்ணறிவு குறித்த தேசிய மூலோபாயத்தை வகுத்த முதல் சில நாடுகளில் இந்தியாவும் உள்ளது என்றார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி தனது இத்தாலி பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவுக்கு புறப்பட்டார். பிரிண்டிசி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவரை இந்திய மற்றும் இத்தாலி அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர்.

    இத்தாலியில் இருந்து புறப்பட்ட மோடி இன்று காலை நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

    சமீபத்தில் 3-வது முறையாக பிரதமர் பதவியேற்ற பிறகு மோடி தனது வெளிநாட்டு பயணமாக இத்தாலி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இத்தாலி சென்றுள்ளார்.
    • அங்கு பிரதமர் மோடி உலகத் தலைவர்களை சந்தித்தார்.

    ரோம்:

    ஜி7 கூட்டமைப்பின் உச்சி மாநாடு இத்தாலியில் இரு தினங்கள் நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்க இத்தாலி வந்துள்ள அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரவேற்றார்.

    இதில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்குக்கும் இத்தாலி பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். அதையேற்று இத்தாலி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ஜி7 உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் அதிபர், பிரிட்டன் பிரதமர் மற்றும் உக்ரைன் அதிபர் உள்ளிட்ட உலக தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், மாநாட்டின் இடையே வாடிகன் தலைவரான போப் பிரான்சிசை சந்தித்த பிரதமர் மோடி, அவரை கட்டி அணைத்து உரையாடினார்.

    இந்த மாநாட்டில் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் குறித்து போப் பிரான்சிஸ் உரையாற்ற உள்ளார்.

    • இத்தாலியில் உள்ள அபுலியாவில் ஜி7 மாநாடு நடைபெறுகிறது.
    • இதில் பங்கேற்க பிரதமர் மோடி இத்தாலி சென்றுள்ளார்.

    ரோம்:

    ஜி7 கூட்டமைப்பின் உச்சி மாநாடு இத்தாலியில் இன்று மற்றும் நாளை என இரு தினங்கள் நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்க இத்தாலி வந்துள்ள அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரவேற்றார்.

    இதில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்குக்கும் இத்தாலி பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். அதையேற்று இத்தாலி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இரு நாள் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி உலக தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என தகவல் வெளியானது.

    இந்நிலையில், ஜி7 மாநாட்டின் இடையே, பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்தார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

    இந்நிலையில், உக்ரைன் அதிபருடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உக்ரைனுடன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலமே அமைதி திரும்புவதற்கான வழி என இந்தியா நம்புகிறது என பதிவிட்டுள்ளார்.

    • ஜி7 மாநாடு இன்று மற்றும் நாளை என இரு தினங்கள் நடைபெறுகிறது.
    • மாநாட்டில் பங்கேற்க வந்த உலக தலைவர்களை இத்தாலி பிரதமர் வரவேற்றார்.

    ரோம்:

    அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து நாடுகளை கொண்ட கூட்டமைப்பு ஜி7. ஜி7 கூட்டமைப்பின் உச்சி மாநாட்டை இத்தாலி தலைமையேற்று நடத்துகிறது. இந்த மாநாடு இன்று மற்றும் நாளை என இரு தினங்கள் நடைபெறுகிறது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி வந்த உலக தலைவர்களை இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரவேற்றார்.

    இதில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா அழைப்பு விடுத்திருந்தார். இதையேற்று நேற்று இத்தாலி புறப்பட்ட இந்திய பிரதமர் மோடி அந்நாட்டின் பிரிண்டிசி விமான நிலையம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இரு நாள் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி உலக தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என தகவல் வெளியானது.

    இந்நிலையில், ஜி7 மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி பிரான்ஸ் பிரதமர் இம்மானுவலைச் சந்தித்தார். அப்போது இருவரும் கட்டி அணைத்து, கைகுலுக்கிக் கொண்டனர். தொடர்ந்து இருதரப்புக்கு இடையிலான உறவுகள் மேம்படுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

    • பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா அழைப்பு.
    • உலக தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து நாடுகளை கொண்ட கூட்டமைப்பு ஜி7. ஜி7 கூட்டமைப்பின் உச்சி மாநாட்டை இத்தாலி தலைமையேற்று நடத்துகிறது. இந்த மாநாடு இன்று மற்றும் நாளை என இருதினங்கள் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா அழைப்பு விடுத்திருந்தார்.

    இதையேற்று இத்தாலி புறப்பட்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டின் பிரிண்டிசி விமான நிலையம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி உலக தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஜி7 உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி தவிர அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலி வந்துள்ள உலக தலைவர்களை இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரவேற்றார். 

    • ஜி7 மாநாட்டின் முதல் பகுதியான உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
    • பிரதமர் மோடி 3-வது முறை ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

    புதுடெல்லி:

    அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கி லாந்து ஆகிய நாடுகளை கொண்ட கூட்டமைப்பு ஜி7 ஆகும்.

    ஜி7 கூட்டமைப்பின் 50-வது உச்சி மாநாடு இன்று முதல் 15-ந்தேதி வரை இத்தாலியில் உள்ள அபுலியாவில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்தார்.

    இந்நிலையில், இத்தாலி பிரதமரின் அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று இத்தாலி புறப்பட்டுச் சென்றார். 

    தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

    ஜி7 மாநாட்டின் முதல் பகுதியான உச்சி மாநாட்டில் மட்டும் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். மாநாட்டின் மற்றொரு பகுதியாக சுவிட்சர்லாந்து அழைப்பு விடுத்துள்ள உக்ரைன் அமைதி மாநாட்டில் பிரதமர் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. இது ரஷியாவிற்கு எதிரானது என கருதப்படுவதால் பிரதமர் இதில் பங்கேற்பதை தவிர்ப்பதாக கூறப்படுகிறது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் பிரதமர் இம்மானுவல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் ஜி7 மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

    ஜி7 மாநாட்டில் உரையாற்றுவதுடன் ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவர்களுடனும் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்படி அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்துப் பேசுகிறார். இதேபோல இத்தாலி, கனடா பிரதமருடனும் அவர் பேசுகிறார்.

    பிரதமர் மோடி இத்தாலி பயணத்தை முடித்துக்கொண்டு நாளையே நாடு திரும்புகிறார்.

    பிரதமரின் இத்தாலி பயணம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலர் வினய் குவாத்ரா கூறுகையில், ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பது கடந்த ஆண்டு இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் முடிவுகளை பின் தொடர்வதற்கான வாய்ப்புகளை வழங்கும். ஜி7 மாநாட்டில் இந்தியா தொடர்ந்து பங்கேற்பது உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள இந்தியாவின் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதை சுட்டிக்காட்டுகிறது.

    உக்ரைன் மோதலை தீர்க்க பேச்சுவார்த்தைதான் சிறந்த வழி என்பதை நாங்கள் எப்போதும் வலியுறுத்தி வருகிறோம். சுவிட்சர்லாந்தில் நடை பெறும் உக்ரைன் அமைதி மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என தெரிவித்தார்.

    ஆனால் அமைதி மாநாட்டில் இந்தியா சார்பில் யார் கலந்து கொள்வார்கள் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

    • ஜி7 கூட்டமைப்பின் 50-வது உச்சி மாநாடு இத்தாலியில் உள்ள அபுலியாவில் நடக்கிறது.
    • அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் பிரதமர் இமானுவல் மேக்ரான் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

    ரோம்:

    அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகளை கொண்ட கூட்டமைப்பு ஜி7 ஆகும்.

    ஜி7 கூட்டமைப்பின் 50-வது உச்சி மாநாடு இன்று முதல் 15-ம் தேதி வரை இத்தாலியில் உள்ள அபுலியாவில் நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி புறப்பட்டுச் செல்கிறார்.

    அமெரிக்க அதிபர் ஜோபைடன், பிரான்ஸ் பிரதமர் இமானுவல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் ஜி7 மாநாட்டில் பங்கேற்கின்றனர். ஜி7 மாநாட்டில் உரையாற்றுவதுடன் ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவர்களுடனும் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.

    இந்நிலையில், ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி வந்தடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரவேற்றார்.

    இதேபோல், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் பிரதமர் இம்மானுவல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜெர்மனி அதிபர் ஆகியோரையும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரவேற்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
    • நாடுகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    இத்தாலியில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று இத்தாலி புறப்படுகிறார். உக்ரைன்-ரஷியா மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் என உலக நாடுகளில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் நடைபெற இருப்பதால் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    ஜூன் 13 ஆம் தேதி துவங்கும் ஜி7 மாநாடு ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த முறை ஜி7 மாநாட்டை நடத்தும் இத்தாலி, மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தது.

    இந்த அழைப்பை ஏற்று அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் என ஏழு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள இத்தாலி விரைகின்றனர். அதன்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். 

    • இத்தாலியில் வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை ஜி-7 உச்சிமாநாடு நடைபெற உள்ளது.
    • பிரதமர் மோடி ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்த வாரம் இத்தாலி செல்ல இருப்பதாக தகவல் வெளியானது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்தியாவின் பிரதமராக 3-வது முறை நரேந்திர மோடி பதவியேற்றார். அவரது பதவியேற்பு விழா கடந்த 9-ம் தேதி நடைபெற்றது.

    இதற்கிடையே, இத்தாலியில் உள்ள அபுலியா பகுதியில் வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை ஜி-7 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொலி வாயிலாக உச்சி மாநாட்டில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பிரதமர் மோடி ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்த வாரம் இத்தாலி செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. அவர் வரும் 13-ம் தேதி இத்தாலிக்கு புறப்படுவார். 14-ம் தேதி இந்தியாவிற்கு திரும்புவார் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஆனாலும், பிரதமரின் பயண திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

    ×