என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "G7 summit"

    • பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்த உலகளாவிய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
    • பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எந்த நாடும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

    கனடாவில் நடந்த ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:-

    காஷ்மீரின் பகல்காம் மீதான பயங்கரவாத தாக்குதல் ஒவ்வொரு இந்தியரின் ஆன்மா, அடையாளம் மற்றும் கண்ணியத்தின் மீதான தாக்குதல் ஆகும். இது முழு மனிதகுலத்தின் மீதான தாக்குதல் ஆகும்.

    பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்த உலகளாவிய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய நடவடிக்கையை ஊக்குவிக்க ஜி-7 தலைவர்களை வலியுறுத்துகிறேன். பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் மற்றும் ஆதரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி. அதற்கு எதிராக ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்தும் அனைத்து நாடுகளுக்கும் நிற்கிறது. உலகளாவிய அமைதி மற்றும் செழிப்புக்காக, உலகம் அதன் அணுகுமுறையில் தெளிவாக இருக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எந்த நாடும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

    பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும். நமது சொந்த விருப் பங்களின் அடிப்படையில் அனைத்து வகையான தடைகளையும் விதிக்க முயன்றாலும் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் நாடுகளுக்கு வெகுமதி அளிக்கப்படுகிறது. பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் கையாள்வதில் இரட்டை நிலைப்பாடுகளை பயன்படுத்த கூடாது.

    உலகளாவிய தெற்கு நாடுகள் நிச்சயமற்ற தன்மை மற்றும் மோதல்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. உணவு, எரிபொருள், உரம் மற்றும் நிதி தொடர்பான நெருக்கடிகளால் முதலில் பாதிக்கப்படுவது அவர்கள்தான். தெற்கு நாடுகளின் முன்னுரிமைகள் மற்றும் கவலைகளை உலக அரங்கிற்கு கொண்டு வருவதை தனது பொறுப்பாக இந்தியா கருதுகிறது. இந்த பிரச்சினையை ஜி-7 நாடுகள் இன்னும் தீவிர மாகக் கையாள வேண்டும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா-கனடா உறவு மிகவும் முக்கியமானது. பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் வெற்றி அளிக்கும் ஒத்துழைப்பை அடைய இருதரப்பும் இணைந்து செயல்பட வேண்டும் என்று மோடி தெரிவித்தார்.

    மேலும் இந்தியா-கனடா இடையே தூதரக உறவை பலப்படுத்த இருதலைவர்களும் ஒப்புக் கொண்டனர். கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக இருந்தபோது இந்தியா-கனடா இடையே யான உறவில் விரிசல் ஏற்பட்டது என்பது குறிப் பிடத்தக்கது.

    கனடா பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி குரோஷியாவுக்கு புறப்பட்டு சென்றார்.

    • பயங்கரவாதத்துக்கும் ஈரான்தான் மூலகாரணமாக இருக்கிறது.
    • சந்தை நிலைத்தன்மையை பாதுகாக்க ஒருமித்த கருத்துடைய நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம்.

    ஜி7 மாநாடு கனடாவில் நடைபெற்ற நிலையில் அந்நாடுகளின் தலைவர்கள் கையெழுத்திட்ட கூட்டறிக்கை இறுதி நாளான நேற்று நேற்று வெளியிடப்பட்டது.

    அதில், "மத்திய கிழக்கில் அமைதியும், நிலைத்தன்மையும் நிலவ ஜி7 நாடுகளின் தலைவர்கள் உறுதி பூண்டுள்ளோம். இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். இஸ்ரேல் பாதுகாப்புக்கு ஆதரவு அளிக்கிறோம்.

    பொதுமக்கள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறோம். அதே நேரத்தில், பிராந்திய நிலையற்ற தன்மைக்கும், பயங்கரவாதத்துக்கும் ஈரான்தான் மூலகாரணமாக இருக்கிறது. எனவே, ஈரான் கையில் அணுகுண்டு போகக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

    இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும். ஈரான் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டால், காசா உள்பட மத்திய கிழக்கில் பதற்றம் தணியும்.

    சர்வதேச எரிபொருள் சந்தைகளில் ஏற்படும் தாக்கத்தை தொடர்ந்து கண்காணிப்போம். சந்தை நிலைத்தன்மையை பாதுகாக்க ஒருமித்த கருத்துடைய நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம்" என்று கூறப்பட்டிருந்தது.

    • ஜி7 தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான பரிமாற்றங்கள் நடைபெற்றன.
    • பிரதமர் மோடி 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு கனடாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.

    5 நாள் பயணமாக வெளிநாடு சென்றுள்ள பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் பங்கேற்க நேற்று முன்தினம் மாலையில் கனடா சென்றார்.

    கடைசி நாளான நேற்று மாநாட்டில் பங்கேற்பது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள கனடா நாட்டின் கல்காரி வந்தடைந்தேன். மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்களைச் சந்திப்பேன். முக்கிய உலகப் பிரச்சினைகள் குறித்த எனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வேன். தெற்குலக நாடுகளின் முன்னுரிமைப் பிரச்சினைகளை வலியுறுத்துவேன்" என்று பதிவிட்டிருந்தார்.

    மற்றொரு பதிவில், "உலகளாவிய முன்னேற்றத்திற்காக ஒன்றிணைவோம்! முக்கிய உலகளாவிய சவால்கள் மற்றும் சிறந்த கிரகத்திற்கான பகிரப்பட்ட அபிலாஷைகள் குறித்து ஜி7 தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான பரிமாற்றங்கள் நடைபெற்றன" எனத் தெரிவித்தார்.

    ஜி7 மாநாட்டிற்கு இடையே ஜெர்மன் சான்சலர், கனடா பிரதமர் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்களுடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த சந்திப்புகளில் எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு கனடாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.

    • நான் இப்போது வாஷிங்டனுக்குச் செல்வதற்கான காரணம் பிரான்ஸ் அதிபருக்கு தெரியாது
    • இம்மானுவேல் எப்போதும் தவறாகப் புரிந்துகொள்கிறார்

    அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 5-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், "ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து வெளியேறி, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான "போர் நிறுத்தத்தை" ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவிற்கு டிரம்ப் திரும்பி சென்றார்" என்று தெரிவித்தார்.

    ஆனால் மேக்ரானின் இந்த கூற்று தவறு என்று டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பதிவில், "விளம்பரம் தேடும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், நான் கனடாவில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து வெளியேறி, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான "போர் நிறுத்தத்தை" ஏற்படுத்துவதற்காக அமெரிக்கவிற்கு திரும்பிச் சென்றதாகத் தவறாகக் கூறினார். நான் இப்போது வாஷிங்டனுக்குச் செல்வதற்கான காரணம் அவருக்குத் தெரியாது, ஆனால் அதற்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது அதை விட மிகப் பெரியது. வேண்டுமென்றே செய்தாலும் இல்லாவிட்டாலும், இம்மானுவேல் எப்போதும் தவறாகப் புரிந்துகொள்கிறார்" என்று தெரிவித்தார்.

    • கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின் பேரில், G-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
    • இது அவரது ஆறாவது G-7 உச்சி மாநாட்டுப் பங்கேற்பாகும்.

    பிரதமர் மோட சைப்பிரஸ் நாட்டின் பயணத்தை முடித்துக்கொண்டு ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கனடாவிற்கு புறப்பட்டார்.

    பிரதமர் நரேந்திர மோடி கனடாவில் தரையிறங்கியபோது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஆல்பர்ட்டாவின் கனனாஸ்கிஸில் நடைபெறும் 51வது ஜி7 உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார்.

    கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின் பேரில், G-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இது அவரது ஆறாவது G-7 உச்சி மாநாட்டுப் பங்கேற்பாகும். எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் aagiyvatrபோன்ற உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்.

    • இந்த மாதம் 15 முதல் 17 வரை கனடாவின் ஆல்பர்ட்டாவில் ஜி7 உச்சிமாநாடு நடைபெற உள்ளது.
    • மற்ற நாட்டு தலைவர்கள் அழைக்கப்பட்டபோதும் இந்தியாவுக்கு எந்த அழைப்பும் வராததை காங்கிரஸ் விமர்சித்தது.

    இந்த மாதம் 15 முதல் 17 வரை கனடாவின் ஆல்பர்ட்டாவில் ஜி7 உச்சிமாநாடு நடைபெற உள்ளது.

    இந்த உச்சிமாநாட்டில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மேற்கு ஆசியாவின் பதட்டமான சூழ்நிலை, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர் மற்றும் உலகம் எதிர்கொள்ளும் பிற முக்கிய சவால்கள் குறித்து விவாதிப்பார்கள்.

    இந்நிலையில் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு போன் மூலம் கனடா பிரதமர் மார்க் கார்னியிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மார்க் கார்னியிடமிருந்து அழைப்பு வந்ததில் மகிழ்ச்சி. சமீபத்திய தேர்தல் வெற்றிக்கு அவரை வாழ்த்தினேன், மேலும் இந்த மாத இறுதியில் கனனாஸ்கிஸில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டிற்கு அழைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தேன்.

    மக்களுக்கு இடையிலான உறவுகளால் பிணைக்கப்பட்ட துடிப்பான ஜனநாயக நாடுகளாக, இந்தியாவும் கனடாவும் பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட ஆர்வங்களால் வழிநடத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் இணைந்து செயல்படும். உச்சிமாநாட்டில் எங்கள் சந்திப்பை எதிர்நோக்குங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக மற்ற நாட்டு தலைவர்கள் அழைக்கப்பட்டபோதும் இந்தியாவுக்கு எந்த அழைப்பும் வராததை காங்கிரஸ் விமர்சித்தது. இந்நிலையில் விமர்சனங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடிக்கு தற்போது அழைப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • கடந்த ஆறு ஆண்டுகளில் பிரதமர் மோடி ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள முடியாதது இதுவே முதல் முறை.
    • இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய அனுமதித்ததற்கு அடுத்தபடியாக இது மற்றொரு இராஜதந்திர தோல்வி

    கனடா நடத்தும் இந்த வருட ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது வெளியுறவு கொள்கை தோல்வி என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    இந்த மாதம் 15 முதல் 17 வரை கனடாவின் ஆல்பர்ட்டாவில் ஜி7 உச்சிமாநாடு நடைபெறும். இந்த உச்சிமாநாட்டில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மேற்கு ஆசியாவின் பதட்டமான சூழ்நிலை, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர் மற்றும் உலகம் எதிர்கொள்ளும் பிற முக்கிய சவால்கள் குறித்து விவாதிப்பார்கள்.

    இருப்பினும், இந்த முக்கியமான கூட்டத்தில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அழைப்பும் வரவில்லை.

    கடைசி நேரத்தில் அவருக்கு அழைப்பு வந்தாலும், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான தற்போதைய பதட்டமான உறவுகளின் பின்னணியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள விரும்பாமல் இருக்கலாம். இது நடந்தால், கடந்த ஆறு ஆண்டுகளில் பிரதமர் மோடி ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள முடியாதது  இதுவே முதல் முறை.

    இதுகுறித்து விமர்சித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியப் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்படாதது ஒரு இராஜதந்திர பின்னடைவு. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய அனுமதித்ததற்கு அடுத்தபடியாக இது மற்றொரு வெளியுறவுக் கொள்கை தோல்வி என்று அவர் விமர்சித்தார்

    இந்தியா ஜி7 இல் உறுப்பினராக இல்லாவிட்டாலும், இந்தியப் பிரதமர்கள் கடந்த காலங்களில் பல முறை இந்த உச்சிமாநாடுகளில் பங்கேற்றுள்ளனர். கடந்த ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.
    • மூன்று நாடுகள் பயணத்தில் 40-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். உணவு, உரம், எரிசக்தி பாதுகாப்பு உள்பட உலகம் எதிர்கொண்டுள்ள பல்வேறு சவால்கள் குறித்து அந்த மாநாட்டில் அவர் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பின் உச்சி மாநாடு, முதலில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வருகிற 24-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அமெரிக்க அதிபர் ஜோபைடன், தனது ஆஸ்திரேலிய பயணத்திட்டத்தை திடீரென ஒத்திவைத்ததால், குவாட் மாநாடு சிட்னியில் இருந்து ஜப்பானின் ஹிரோஷிமாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இதில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் ஆகியோர் பங்கேற்று, பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

    ஜி7 உச்சி மாநாட்டையொட்டி, பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் பிரதமர் மோடி, ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையையும் திறந்து வைக்க உள்ளார்.

    ஜப்பானைத் தொடர்ந்து, பப்புவா நியூகினியாவுக்கு மே 22-ந் தேதி செல்கிறார். அங்கு நடைபெறவிருக்கும் இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் 3-வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

    பின்னர், ஆஸ்திரேலியாவுக்கு பயணமாகும் அவர், அந்நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பானீசிடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும், இந்திய வம்சா வளியினர் பங்கேற்கும் நிகழ்ச்சியிலும் உரையாற்ற உள்ளார்.

    இந்த மூன்று நாடுகள் பயணத்தில் 40-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குவாட் மாநாடு இடமாற்றப்பட்டுள்ளதால், அது வழக்கமான உச்சி மாநாடாக இருக்குமா அல்லது சாதாரண கூட்டமாக இருக்குமா? என்று டெல்லியில் வெளியுறவு செயலர் வினய் குவாத்ராவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு, "4 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கும்போது, அது உச்சி மாநாடு தான்" என்று அவர் பதிலளித்தார்.

    • ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பானின் ஹிரோஷிமா சென்றடைந்தார் பிரதமர் மோடி.
    • 3 நாடுகள் பயணத்தில் 40-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

    புதுடெல்லி:

    வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் இன்று தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    இதற்கிடையே, ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். உணவு, உரம், எரிசக்தி பாதுகாப்பு உள்பட உலகம் எதிர்கொண்டுள்ள பல்வேறு சவால்கள் குறித்து அந்த மாநாட்டில் அவர் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், ஜி7 மாநாட்டில் பங்கேற்கதற்காக ஜப்பான் தலைநகர் ஹிரோஷிமா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

    ஜி7 உச்சி மாநாட்டையொட்டி பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் பிரதமர் மோடி, ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையையும் திறந்து வைக்க உள்ளார்.

    ஜப்பானைத் தொடர்ந்து, பப்புவா நியூகினியாவுக்கு மே 22-ம் தேதி செல்கிறார். அங்கு நடைபெறவிருக்கும் இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் 3-வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதன்பின், ஆஸ்திரேலியாவுக்கு பயணமாகும் அவர், அந்நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பானீசிடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பானின் ஹிரோஷிமா சென்றார் பிரதமர் மோடி.
    • மாநாட்டின் இடையே ஜி7 நாடுகள் உள்ளிட்ட உலக தலைவர்களை சந்தித்து ஆலோசித்தார்.

    ஹிரோஷிமா:

    வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நேற்று தொடங்கியது. இந்த மாநாடு 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு நேற்று சென்றார். அங்கு குழுமியிருந்த இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதற்கிடையே, பிரதமர் மோடி ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை இன்று திறந்து வைத்தார்.

    இந்நிலையில், ஜி7 உச்சி மாநாட்டின் இடையே ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கோல்ஸ், தென்கொரிய அதிபர் யூன் சிக் இயோல், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ உள்ளிட்ட தலைவர்களை தனித்தனியாகச் சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    • ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்று வருகிறது.
    • இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ஹிரோஷிமா சென்றுள்ளார்.

    ஹிரோஷிமா:

    ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க பிரதமர் மோடி ஹிரோஷிமா சென்றுள்ளார். அங்கு குழுமியிருந்த இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதற்கிடையே, பிரதமர் மோடி ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை இன்று திறந்து வைத்தார்.

    இதற்கிடையே, மாநாட்டின் இடையே ஜி7 நாடுகளின் தலைவர்கள் உள்பட பல்வேறு உலக தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியாகச் சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்நிலையில், ஜி7 மாநாட்டில் பங்கேற்க வந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததற்கு பிறகு முதல் முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி இன்று சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன் போர் உலகின் மிகப்பெரிய பிரச்சினை.
    • உக்ரைன் போரை நான் அரசியல் அல்லது பொருளாதார பிரச்சினையாக பார்க்கவில்லை.

    ஹிரோஷிமா :

    உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தது, உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த போர் விரைவில் முடிந்து விடும் என்றுதான் உலகமே எதிர்பார்த்தது. ஆனால் ஓராண்டை கடந்தும் அந்த போர் நீடித்து வருகிறது. இதனால் உலகளாவிய கச்சா எண்ணெய், உரங்கள், உணவு பொருட்கள் போன்றவற்றின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவை விலையேற்றத்தை சந்தித்து வருகின்றன.

    உக்ரைன் போரை ரஷியா முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக அந்த நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. ஆனாலும் ரஷியா தனது தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது.

    இந்த நிலையில், இரண்டாம் உலக போரின்போது, உலகின் முதல் அணுகுண்டு வீசப்பட்டு, உருக்குலைந்துபோய், இப்போது பீனிக்ஸ் பறவை சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவதுபோல, மீண்டெழுந்துள்ள ஜப்பானின் ஹிரோஷிமா நகரில், 'ஜி-7' நாடுகளின் உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது.

    இந்த உச்சி மாநாட்டில், உலக தலைவர்களுடன் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கலந்துகொள்கிறார் என தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. எதிர்பார்த்தபடியே இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று அங்கு வந்து சேர்ந்தார். அவர் அங்கு வருமுன்னரே அவருடன் பிரதமர் மோடி சந்தித்து பேசுவார் என தகவல்கள் வெளியாகின.

    அதன்படி 'ஜி-7' உச்சி மாநாட்டின் மத்தியில் பிரதமர் மோடியும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி கூறியதாவது:-

    கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் தொலைபேசியில் பல முறை பேசி இருக்கிறோம். நீண்ட இடைவெளிக்கு பிறகு நேரில் சந்திக்கும் வாய்ப்பை இப்போது பெற்றிருக்கிறோம்.

    உக்ரைன் போர் உலகின் மிகப்பெரிய பிரச்சினை. ஒட்டுமொத்த உலகிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

    உக்ரைன் போரை நான் அரசியல் அல்லது பொருளாதார பிரச்சினையாக பார்க்கவில்லை. இதை நான் மனிதநேய பிரச்சினையாகவும், மனித விழுமியங்களின் பிரச்சினையாகவும் தான் பார்க்கிறேன்.

    எங்கள் எல்லோரையும் விட இந்த போரினால் ஏற்படுகிற பாதிப்புகளை நீங்கள் அதிகமாக அறிவீர்கள். எங்கள் மருத்துவ மாணவர்கள் உக்ரைனில் இருந்து கடந்த ஆண்டு நாடு திரும்பியபோது அவர்கள் அங்குள்ள சூழ்நிலையை எடுத்துக்கூறினார்கள். நீங்களும், உக்ரைன் மக்களும் அடைந்துள்ள வேதனையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

    எனவே இந்தியாவும், நானும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இரு தலைவர்கள் சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டது. அதில், "பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஜி-7 உச்சி மாநாட்டின் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார்" என கூறப்பட்டுள்ளது.

    ×